Skip to main content

அப்பா..



நான் முதன் முதலாக நேசித்த என் காதலன் நீ..


எப்பொழுது நேசிக்க தொடங்கினேன் என்ற கேள்வியை மட்டும் கேட்காதே அப்பா..


அம்மாவின் அடிவயிற்றில் கைவைத்து என்னுடன் பேசினாயே!! அப்பொழுதே நிகழ்ந்து இருக்கக்கூடும்...


ஆயிரம் ஆயிரம் கதைகளை சொல்லி அன்னை உறங்க வைத்த பொழுதிலும் உன் மார்பில் தூங்கிய சுகம் வருமா??!!


கண் எரியாமல் நீராட செய்வதும் ஒரு கலையாகும் அதில் தாயை விட நீ தேர்வு பெற்றதாலோ என்னவோ..??

உன்னை மட்டுமே தேடி அழுதேன் குளிக்கும் வேளையில்..


நடைபழகும் வேலையை விடுத்து என் பாதங்கள் தரையில் ஊன்றியதாய் நினைவில்லை..உன் தோள் மீது அமர்ந்து என் கொலுசோடு

உரசிய உன் சட்டை பொத்தான்கள் மட்டுமே நியாபகம்..


சின்ன சின்ன மணிகளை வைத்து தைத்த பாவாடை சட்டை அணிந்த பொழுது "தேவதையே எனக்கு மகளாக பிறந்துவிட்டாள்!!"என்று கொண்டாடினாயே அதுவும் நினைவிருக்கிறது அப்பா...


மிரட்டலாக என்னை வகுப்பறையில் அமர்த்திவிட்டு கலகத்துடன் வெளியேறும் உன்னை நான் அறியாமல் யார் அறிவார்??


தாவணியின் நுனியினை பிசைந்தவாறு வண்ணம் உன் முன் நாணி நான் நிற்க.. உன்னை விட்டு விலகிச்செல்ல வெகு நாட்கள் இல்லை என்று நினைத்தாய் போலும்!! கண்களில் துளிர்த்த நீரை யாவருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டாய்..


பலவாறாக உன்னிடம் நான் வாதாடினாலும் உன் ஒரு சொல்லுக்கு கட்டு படாமல் நான் இருந்ததில்லை அப்பா..


என் விழி அசைவினில் என் தேவைகளை பூர்த்தி செய்யும் உன்னை தெய்வத்திற்கு ஈடாக பார்க்க முடியுமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வேன்... பக்தி இருந்தால் ஒழிய கிடைக்கும் தெய்வத்தின் வரம்..


எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காக்கும் நீயே ஒரு வரம் அல்லவா??


மலையளவு துன்பத்தை கூட திணையளவும் பொருட்படுத்தாத நீ..

என் கண்களில் நீரை கண்டால் உடைந்துப் போவது ஏனோ??


என் கணவனை எந்நாளும் உன்னுடன் ஒப்பிட மாட்டேன்..

எனக்கு நன்றாகவே தெரியும் என்னை முழுதாக நேசிக்கும் ஒரே ஒரு ஆடவன் நீ மட்டும் தான் என்று...


இனி ஒரு ஜென்மம் வேண்டும் என்று எண்ணியதில்லை..

ஆனால் அவ்வாறு நிகழ்ந்தால் மறுபடி உன் மகளாக பிறக்கும் வரம் மட்டும் போதும் அப்பா....

மகளை பெற்ற மகாதேவர்களுக்கு சமர்ப்பணம்..🙏🙏                                           

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Each and every word melt my heart 💖 I cried when I read this ,noone replace their sacrifice, happy father's day my friends

    ReplyDelete
    Replies
    1. ஆமா அப்பா மாதிரி யாரும் வர முடியாது

      Delete
  3. அட்மின் சகோதரி மற்றும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அட்மின் சகோதரி படத்தில் இருப்பது உங்க அப்பா தான, அவர் இறைவனிடத்தில் இருந்து உங்களை ஆசீர்வதிப்பார். கலங்க வேண்டாம்.

    ReplyDelete
  5. அழகான, ஆழமான, உணர்ச்சிகள், ஏக்கங்கள், அத்தனையும் உங்கள் இத்தனை வரி கவிதைகள், இல்லை இல்லை வலி கவிதைகள் !பெற்ற தகப்பனை எதிர்த்து வாழும் எத்தனையோ பெண் பிள்ளகைகள் மத்தியில் தன் தந்தையை இந்தளவுக்கு நேசிக்கும் உங்கள் அப்பா உங்கள் நினைவலைகளோடு நிச்சயம் பயணிப்பார் சகோதரி, சிறு வயதிலே தந்தையை இழந்ததால் என்னவோ எனக்கு அந்த தோள் சாயும் கொடுப்பணை கூட கிடைத்ததில்லை சகோதரி, தந்தையர் தினம் கொண்டாடுவதை விட அவர்கள் வலிகளை புரிந்து கொள்ளும் பிள்ளைகளையே தந்தைகள் விரும்புவார்கள்

    ReplyDelete
  6. Admin mam really heart touching article about father. Its very true that no one can replace father. Dad will be always with you mam.

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அப்பாவை பற்றிய ஆழமான அருமையான வரிகள். கண்களில் நீர்த்துளிகள் மட்டுமே மிஞ்சுகின்றன. அட்மின் சகோதரி உங்கள் தந்தை உங்களை என்றும் வழி நடத்துவார். அனைத்து சகோதரிகளுக்கும் தந்தையர் தின வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. Pg candidates job kekumpothu tet candidates kekrathu thappu ila.

    ReplyDelete
    Replies
    1. அவர்களை போன்று போட்டி தேர்வு அல்ல டெட். இரண்டாம் பட்டியலுக்கு காத்திருக்கிறோம் என்று கூறும் அருகதை அற்றவர்கள் அவர்கள். முதுகலை தேர்வில் இரண்டாம் பட்டியல் என்பது தேர்வு வாரியம் தேவைக்கு ஏற்ப எடுக்க வேண்டிய முடிவு. நிராகரிக்கப்பட்ட இவர்கள் அதை கேட்க தகுதி அற்றவர்கள். இதில் வாய் வேறு கிழிகிறது.

      Delete
    2. செம்ம செருப்படி சரவணா அண்ணா

      Delete
  11. டெட் கூட உங்க கும்பலை எதுக்கு கம்பேர் பண்றிங்க?? உங்களை மாதிரியா நாங்க அடுத்தவங்க வயித்துல அடிச்சுட்டு இருக்கோம்??

    ReplyDelete
  12. Madhu and Saravanan y this kola veri today father's day pathivu sampanthama posting vittutu yen ethavathu pesureenga

    ReplyDelete
    Replies
    1. மனோ சகோதரரே இன்றைய பதிவு மற்றும் இன்றைய சிந்தனை என்பது அட்மின் தினம் தினம் பதிவு செய்யப்படும். அதை சார்ந்து மட்டுமே கருத்துக்கள் பதிவு செய்தே ஆக வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. மேலும் தந்தையர் தினம் பற்றிய எனது கருத்தை எப்போதோ தெரிவித்து விட்டேன். டெட் தேர்வர்கள் பற்றிய அவதூறு எங்கு இருந்தாலும் நிச்சயம் பதில் தருவேன். தவறில்லையே சகோதரரே

      Delete
  13. சரவணா நண்பர் சொல்றது சரி தான. செகண்ட் லிஸ்ட் விடறது trb விருப்பம், செகண்ட் லிஸ்ட்க்கு காத்துட்டு இருக்கோம்னு சொல்றது பெரிய மோசடி

    ReplyDelete
    Replies
    1. Ketpathu avargal urimai athai government paathukum unga work ah paarunga avanga avanga work paakatumm inga yarum ungala karuthu ketkala

      Delete
    2. நாங்க எங்க ஒர்க் தான் பாக்குறோம் உங்களை மாதிரி அடுத்தவங்க வயித்துல அடிக்கல

      Delete
  14. டெட் பத்தி பேசி வயித்தெரிச்சல கொட்டிக்காதிங்க. நாங்களும் நீங்களும் ஒண்ணா?? பக்கித்தனமா இருக்கு

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. இப்படி நம்மை நாமே நோகடிக்காமல் இருக்க வேண்டும்.

    அமைச்சரிடம் அழுத்தம் கொடுக்க வேண்டும்.
    ஒவ்வொரு பேட்டியின் போதும் ஆசிரியர் நியமனத்துக்கு தீர்வு கொடுக்க வலியுறுத்த வேண்டும்.

    அமைச்சர் மட்டுமே பதில்.

    MAIL- POST-CMCELL

    தயவுசெய்து அஹிம்சை தவிர வேறு வழியை நாட வேண்டாம்.

    சமீபத்திய தகவல் அனுமதி மீறிய செயலால் வழக்கு, முதல் தகவல் அறிக்கை போன்றவைகளுக்கு உள்ளான ஆசிரியர்களுக்கு அரசு வேலை கிடையாது என்பதாகும்.
    இதற்கு காரணமானவர்களால் கூட இதிலிருந்து மீள வழி இல்லை என்று கூறிவிட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. Ooru rendupatta koothadiku kondattam athan sir nadakkuthu tetla

      Delete
  17. இந்த உலகத்துல
    தந்தையவிட பெரிய சக்தி
    எதுவும் இல்ல...

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here