Skip to main content

தோல்வியும் ... வெற்றியாக ... !

🪔 *கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடி விடுவார்கள்.அந்த கண்ணாடியில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.*


🪔 *அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி செய்யும்... மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்குதே, இனி மேலே நோக்கிப் போகும்போது பார்த்து போகனும்" என்று தீர்மானித்துக் கொள்ளும்.*


🪔 *அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்து விடும்.*


🪔 *சரி, இதுதான் நமது வாழ்க்கை.இந்த கூண்டுக்குள்தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை.ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கி விடும்.*


🪔 *அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும்.இப்போது மேலே நோக்கி பறக்கும்.*


*சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும்.*


🪔 *இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை.வலியும் இல்லை.அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும்.*


*அனைத்து பக்கங்களிலும் பறக்கும்.எந்தக் கண்ணாடி யிலும் இடிக்காமல் பறக்கும்.*


*அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.*


🪔 *இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்தவுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள்.*


*இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை.*


🪔 *ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக்குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.*


*அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து,முயற்சி செய்து இருந்தால் அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.*


*ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால்,இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்...*


*ஆம்...,நண்பர்களே...,*


🪔 *தொடர்ந்து முயற்சி செய்வதை கைவிட்டு விட்டு., நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டுதான் வருகின்றோம்...*


🪔 *முயற்சி செய்யுங்கள் ''வெற்றி'' கிடைக்கும்.*


 *முயற்சி செய்யுங்கள் ''தோல்வியும்'' கிடைக்கும்.*


🪔 *தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்...,*


*'தோல்வியும் வெற்றியாக'' மாறும்...*


*ஒவ்வொரு நாளும் "வெற்றிகரமாக" அமையட்டும்.*




Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mr. Mano Rag..

    This website is exclusively for TET and PG candidates, am also a TET Candidate. Unlike other admins I won't keep quiet if something wrong or rumors being spread in my blog. That too when someone unnecessarily cornering me, obviously I'll respond to them..

    You don't what PG 1:2 people did even after pg notification, without knowing better don't get in to it..

    ReplyDelete
  3. ஒரு வருடத்திற்கு ஒன்றரை மதிப்பெண் என்றால் 10 வருட சீனியாரிட்டி உள்ளவர்களுக்கு 10×1.5 = 15 மதிப்பெண்கள் வந்துவிடுமே. ஆனால் சீனியாரிட்டி மொத்தம் பத்து மதிப்பெண்கள் தானே கொடுக்கப்படும் என்று கூறியுள்ளீர்கள்.
    Muniyappan sir

    ReplyDelete
    Replies
    1. இந்த முறை அங்கு அரசு ஆசிரியர் ஒருவரிடம் கேட்டு பதிவு செய்துள்ளேன்.
      மேலும் தங்கள் சந்தேகம் கேட்டுதான் பதிவிட்டேன்.

      வருடம்*1.5= மதிப்பெண்கள்

      1*1.5=1.5
      2*1.5=3
      3*1.5=4.5
      4*1.5=6
      5*1.5=7.5
      6*1.5=9
      7*1.5=10 (காரணம் அதிகபட்ச மதிப்பெண்கள் = 10)
      7 வருடங்களுக்கு மேல் முழு மதிப்பெண்கள்.

      இது அவர்கள் நடைமுறை மட்டுமே.

      Delete
    2. Mr.muni Inga yaravadhu 7 varutharthirkku piragu padithavar irukkaingala .......appo edhum thirmanikkum mr.muni..........

      Delete
  4. மனோ ராக் ஒரு எக்ஸாம் வச்சு போஸ்டிங் போட்டதுக்கு அப்புறமும் இன்னோரு லிஸ்ட் வரணும்னு அடுத்தவங்களுக்கு வாய்ப்பு குடுக்காம மினிஸ்டர பாத்து முதலில் அமைச்சரை பாத்து அவங்க பண்ணது கொஞ்சம் நஞ்சம் இல்லை.

    ReplyDelete
    Replies
    1. Posting போட்டதற்காக தேர்ச்சி பெற்ற மற்றவர்கள் வேலை கேட்ககூடாதா நண்பரே

      Delete
    2. 2013 posting போட்டா தேர்ச்சி பெற்ற மற்றவர்கள் வேலை கேக்ககூடாதா நண்பரே

      Delete
  5. B.Ed Employment seniority: 2008
    TET PASS: 2017
    Maths Tamil medium
    First graduate in my family

    ReplyDelete
  6. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது .எனவே நாம்
    அனைத்து தரப்பினரும் நேர்மறையான எண்ணங்களுடன் நம் வாழ்வில் வளம் பெறுவோம் என்று நம்பிக்கையுடன் கடந்து போவோம்.

    ReplyDelete
  7. அனைவரும் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும்.பிறகு மற்றவர்களையும் சேர்க்க உதவியும், ஆலோசனையும் செய்ய வேண்டும்.

    முயற்சி அற்ற எதிர்பார்ப்பு வீண்.

    தன் குழந்தையை தனியார் பள்ளியில் சேர்த்த எந்த ஒரு நபரும் அரசு ஆசிரியர் வேலையை எதிர்பார்ப்பது தவறு.

    இது நல்ல காலம் சேர்க்கை அதிகமாக நடந்தால் பணியும் அதிகமாக நடக்கும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...