Skip to main content

30 மாணவர்களுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இருக்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு.


மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் பணி நியமனம் இருக்க வேண்டும் , என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆசிரியர் நியமன கோரிக்கை நிராகரிப்பு நெல்லை ஐகிரவுண்டு பகு தியில் உள்ள ஒருமேல்நிலைப் பள்ளி தாளாளர் முகமது நாசர் , மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி யிருந்ததாவது :


எங்கள் பள்ளியில் 706 மாணவர்கள் படிக்கின்றனர். 18 ஆசிரியர்கள் , 2 ஆசிரியர் கள் அல்லாத பணியாளர்கள் உள்ளனர். கடந்த 2019 - ம் ஆண்டில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 7 முதல் 10 - ம் வகுப்புகளில் தமிழ் வழிப்பிரி வுக்கு இணையாக ஆங்கில வழிப்பிரிவு தொடங்க பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்தது. அதன்படி எங்கள் பள்ளியில் ஆங்கில வழி பாடப்பிரிவு தொடங்கப்பட்டது.


 ஆங்கில வழிப்பிரிவுக்கு ஆசிரியர்கள் நியமிக்கவும் , எங் கள் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் உபரியாக இருப்பதாக அறிவித்ததைரத்து செய் யும்படியும் பள்ளியில் உள்ள மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்கள் நிய மிக்க அனுமதி கேட்டும் பட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தோம். அவர் எங்கள் மனுவை நிராகரித்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்வ துடன் , ஆங்கில வழிப்பிரி வுக்கு உரிய ஆசிரியர்களையும் , கூடுதலாக 3 பட்டதாரி ஆசிரியர்களையும் நியமிக்க அனுமதி வழங்குமாறு உத்தர விட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நியமனம் இந்த மனு நீதிபதிகள் சிவ ஞானம் , ஆனந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் , ஒவ்வொரு பள்ளிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 


30 மாண வர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர் கள் பணி நியமனம் இருக்க வேண்டும். ஆசிரியர் நியம னம் தொடர்பாக மனு அளிக் கும் போது , அந்த மாவட்ட பள்ளிகளில் உள்ள ஆசிரியர் கள் பற்றாக்குறை மற்றும் உபரி ஆசிரியர் எண்ணிக் கையை சமன் செய்த பிறகு , புதிய ஆசிரியர் நியமனத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஏற்கனவே கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது . அதன்படி மனுதாரர் தனது கோரிக்கையை வலியுறுத்தி அனுப்பிய மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது. ஏற்க னவே கோர்ட்டு உத்தரவின் படி , மாணவர்கள் எண்ணிக் கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர் பாக கல்வித்துறை அதிகாரி கள் பரிசீலிக்க வேண்டும் . 


இவ்வாறு நீதிபதிகள் உத்தர வில் கூறியுள்ளனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...