Skip to main content

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம்:உயர்நீதிமன்றம் உத்தரவு .

 


JUDGEMENT COPY- click here

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம்:உயர்நீதிமன்றம் உத்தரவு .

மதுரை:அரசு உ தவி பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்

கல்வித்துறையிடம் ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது.

அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின.நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு: கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும்.

கல்வி நிறுவனம் முழுவதையும் தனி அலகாகக் கருதக்கூடாது.குறிப்பிட்ட கல்வியாண்டில் ஆசிரியர் பணியிடத்தை நிர்ணயித்த பின், கூடுதலாக இருந்தால் பள்ளிக் கல்வித்துறை அடையாளம் காண வேண்டும். அதை

பள்ளி நிர்வாகத்திற்கு தெரிவிக்க வேண்டும். கூடுதல் ஆசிரியர்களை தேவையான பள்ளிகளில் பணி நிரவல் அடிப்படையில் நியமிக்க வேண்டும். அவ்வாறு வேறு பள்ளியில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டால், குறித்த காலத்திற்குள் பணியில் சேர வேண்டும்.

1991-92 கல்வியாண்டிற்கு முன் துவங்கப்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி கூடுதலாக தமிழ் அல்லது ஆங்கில வகுப்புகள் துவங்கப்பட்டிருந்தால், அதில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 2021-22 கல்வியாண்டு முதல் சம்பளத்திற்கான நிதியை அரசு வழங்க வேண்டும்.தமிழ்நாடு தனியார் பள்ளிகள் (ஒழுங்கு முறை) சட்டம் 2018 ன்படி ஒருங்கிணைந்த விதிமுறைகளை விரைவில் அரசு கொண்டுவர வேண்டும்.

அதுவரை இந்நீதிமன்ற வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும். இதை நிறைவேற்றியது குறித்து பள்ளிக் கல்வித்துறை சார்பில் நவம்பரில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இதில் தேவையற்ற வழக்குகள் தாக்கலாவதைத் தவிர்க்க நிர்ணயிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடம், கூடுதலாக உள்ள அலுவலர்களை அடையாளம் காணுதல், தேவையான பள்ளிகளில் பணி நிரவல் மூலம் நியமித்தல், பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய நிதி உட்பட பல்வேறு விஷயங்களை இந்நீதிமன்றம் கண்காணிக்கும் என்றனர்

Comments

  1. Good morning mam. mam இது எந்த பத்திரிக்கை செய்தி.. தங்கள் பதிலை எதிர்நோக்கி

    ReplyDelete
  2. Gudnoon Su.Ra sir, idhu teacher's whatsapp group la vandha news.. Already deployment pathi vandha judgement pathina news adhan post panen..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here