Skip to main content

THOUGHT OF THE DAY..

 சமுதாயத்தில் பெரிய தலைவர்களையும், அறிஞர்களையும், நல்ல மனிதர்களையும் யாரால் உருவாக்க முடியும்.

 

பெற்றோரால் மட்டுமே உருவாக்க முடியும்.


கும்பகோணத்தில் ஒரு பள்ளியில் நடந்த

அற்புதமான ஒரு நிகழ்வு இது.


ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில்

மாணவிகளை ஊக்குவிக்க சிறிய போட்டி ஒன்றை நடத்தினார்.

அதில் வெற்றி பெறும் மாணவிக்கு

புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும்

என்றும் கூறினார்.

அனைத்து மாணவிகளும் மிகுந்த

மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர். 

இறுதியில் அவர்களது விடைகளைப்

பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள்

அனைவரும் சரியான விடைகளை எழுதி

இருந்தனர்.


ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது

என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில்

அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார்.


அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை

அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.

அதில் "அகிலா" என்ற மாணவியின் பெயர்

காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு

வழங்கப்பட்டது.


அம்மாணவிதான் அவ்வகுப்பில் மிகவும்

ஏழ்மையான மாணவி. பல காலமாகவே

தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த

அம்மாணவிக்கோ புது காலணி கிடைத்ததில் எல்லையில்லா மகிழ்ச்சி.


பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன்

வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப்பற்றி

கணவரிடம் கண்ணீருடன்

கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார். 

எனினும் அந்த ஆசிரியை வழக்கத்துக்கு

மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக்

கொண்டிருந்தார்.


கணவர் மீண்டும் காரணம் கேட்க "நான்

வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட

அப்பெட்டியில் இருந்த தாள்களை பிரித்துப்

பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும்

தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில்

ஏழை மாணவியாக இருந்த "அகிலா" வின்

பெயரையே எழுதியிருந்தனர் என்று

கண்ணீருடன் பதிலளித்தார்.


தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்.


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. If register tet certificate in employment office which year register
    Am 2013 and 2017(which best)

    ReplyDelete
  3. Mam good evening.I have lost my tet certificate .how to get a new one mam.

    ReplyDelete
    Replies
    1. Gudevng Sushila mam..

      You can approach TRB, sure they might be having soft copy. So you can apply for duplicate. But approach trb and get the clear procedures..

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here