Skip to main content

காலம்..

*நிரந்தரம் என்று*

*சொல்லிக் கொள்வதெல்லாம்*

*நிரந்தரமின்றி போக*


*மாற்றங்கள் மட்டுமே*

*நிரந்தரமாக்கிப் போகும்*

*காலத்தின் சுழற்சியால்..!*


*காலம்*  

*கண்ணீரை மட்டுமல்ல* 

*காயங்களையும் மாற்றும்*


*கேள்விகளை மட்டுமல்ல* 

*பதில்களையும் மாற்றும்..!*


*கடந்து வந்த* 

*பாதைகள் கடத்தி*

*போக மறுப்பதில்லை..*


*காலம் கடந்த* 

*நினைவுகளை*

*பரிசளிக்க* 

*தவறுவதில்லை..!*


*சண்டை போட்டு*

*பேசாமல் இருக்கும்* 

*காலம் போய்* 


*பேசினால் சண்டை*

*வரும் என்று* 

*பயந்து பேசாமல்*

*இருக்கும் காலத்தில்*

*வாழ்கிறோம்..!*


*இதெல்லாம் ஒரு நாள்*

*கடந்து போகும் என்று*

*காத்திருந்தேன்*


*ஆனால்..!!*


*எதுவுமே கடந்து போகாது*

*எல்லாம் பழகிப்போகும்*

*என்று உணர்த்தி விட்டது*

*காலம்..!*


*நீ எவ்வளவு நன்மைகள்*

*செய்து இருந்தாலும் அதை*

*ஒரு நொடியில் மறந்து*

*விடும் இவ்வுலகம்..*


*நீ தெரியாமல் செய்த*

*ஒரு தவறை காலம்*

*முழுவதும் சொல்லிக்*

*கொண்டே இருக்கும்.*


*கடந்து வந்த பின்பே*

*கண்டு உணர்கிறேன்..*


*என்னை கலங்கடித்த*

*காலமெல்லாம் கடுமையான*

*காலம் அல்ல..*


*என் வாழ்வை*

*வடிவமைத்த காலம்*

*என்று..!*


*கடைசி காலத்திற்கு*

*தேவை என்று ஓடி ஓடி*

*உழைக்கின்றோம்*


*எது*

*கடைசி காலம் என்று*

*தெரியாமலே..!*


*காலம் கற்றுக் கொடுக்கும்*

*பாடம் போல*


*எந்த ஒரு*

*ஆசானாலும் கற்றுக்*

*கொடுக்க முடியாது..!*


*காலம் கடந்து செல்கின்றேன்*

*யாவும் மாறும்*

*என்ற நம்பிக்கையில்..!*


*ஓடி வந்து மூச்சு வாங்கும்*

*போது தான் தெரியும்*


*தண்ணீரின் அருமை..*


*அது போல தான்* 

*கடந்து வந்த பிறகு* 

*தான் தெரியும்*


*காலத்தின் அருமை..!*


*வாழ்த்தினாலும்*

*தாழ்த்தினாலும்*

*சிரித்துக் கொண்டே*

*இரு* 


*காலம் அவர்களுக்கு*

*பதில் சொல்லும்..!*


*கசப்பான நினைவுகள்*

*காலம் முழுவதும்*

*கசப்பதில்லை..*


*நிகழ்வுகள் மாறும் போது*

*நினைவுகளும் இனிக்கும்..!*


*தானாக உயரும் வயது..*


*விடாமல் துரத்தும் காலம்..*


*தடுக்க முடியாத நேரம்..*


*கடக்கத் துடிக்கும் இளமை..*


*காலைத் தடுக்கும் சமூகம்..*


*தொட வேண்டிய இலக்கு..*


*இத்தனை* *போராட்டங்கள்*

*தான் வாழ்க்கை..!*


*காலம் கடந்தது*

*நினைவுகள் வலித்தது* 


*ஆயினும் அசட்டு*

*நம்பிக்கையில் காத்திருந்தேன்*

*அதே காலத்துடன்..!*


*பாசம் வையுங்கள்* 

*தவறில்லை*

*ஆனால் பைத்தியம்* 

*ஆகிவிடாதீர்கள்*


*ஏனெனில்*

*இங்கு முடிவே இல்லாத*

*வாழ்வும் இல்லை..*


*பிரிவே இல்லாத* 

*உறவும் இல்லை..*


*எல்லாம் சில காலம் தான்..*!


*பொறுத்தார் பூமி ஆழ்வார்*

*என்பது அந்த காலம்*


*பொங்கி எழுந்தால் தான்*

*இருப்பதையாவது*

*காப்பாற்றிக் கொள்ள*

*முடியும் என்பது* 

*இந்த காலம்..*


*இது தான்*

*இன்றைய வாழ்க்கை..!*


*தொலைந்து போன*

*காலத்தை தேடித் தேடியே*


*இருந்த காலமும்*

*தொலைந்து போனது..!*


⏰  ⏰  ⏰  ⏰  ⏰  ⏰


    

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. காலத்தின் கோலம் பற்றிய அர்த்தமுள்ள பதிவு

    ReplyDelete
  3. Gud morning admin mam.na 2013 la both paper passed.2015 la paper 2 matum employment officela register paniten.but now online la vanthirukku.again paper 2 register pananuma mam?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon frnd..

      Oru time register panna podhum.. Register pana copy safe ah vachukonga..

      Delete
    2. Mmm.thank you admin mam.😀😀😀

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...