Skip to main content

இன்றைய சிந்தனை..

 கணிப்புகளோ, திணிப்புகளோ,

நீயே அறிந்தவர் ! !

இனியொருபோதும் வேண்டாம் இந்த பாசிச ஆட்சி .

ஒற்றுமை தேசம் சிதைபடாமல் இருக்க ஆட்சிமாற்றம் ஒன்றே தீர்வு. 

அதை உம் அருளைக்கொண்டு நடத்திக்காட்டுவீராக !

மாட்டை நேசித்து மனிதனை கொல்வது

மாற,

மனிதத்தை நேசிப்போர் அரியனை ஏற

நீரே அருள் புரியும் !

உம் தீர்ப்பு எதுவாகினும் ஏற்பது எம் பணி.

ஆனாலும் கேட்பதும் கெஞ்சுவதும் உமக்கு பிடிக்கும் தானே ! அதனால் கேட்கிறோம்.

நல்ல தீர்ப்பை வழங்கும் இறைவனே !

பொல்லாதோர் இல்லாத எம் தேசம் மீண்டும் வேண்டும்.

இந்துவோ, முஸ்லிமோ, கிருத்துவரோ, சீக்கியரோ, பௌவுத்தரோ, எவராகினும் உம் படைப்பே.


அனைவரும் இந்தியர் என்ற குடையின் கீழ் இணைந்து வாழ இந்த ஆட்சி உகந்ததல்ல.

ஒரு சார்பை தூக்கிப்பிடித்து, மறு சார்பை தாக்கி அழிக்கும் பாசிசம் வேண்டாமே.

மக்கள் எப்படியோ அப்படியே ஆட்சியாளன்

என்ற உம் வாக்கு நினைவில் வருகிறது.

பிழை செய்யும் எங்களுக்கு பிழையான ஆட்சியாளனை தந்துவிடாதேயும் !

வாக்கு எந்திரங்கள் தவறு செய்யலாம்.

பெட்டிகளும் மாறலாம். 

சூழ்ச்சிகாரனுக்கெல்லாம் மேலான மாயவல்லவன் நீரல்லவா..!

தீய சூழ்ச்சியை உம் தூய அற்புதத்தால் 

மாற்றிக்காட்டும்.


ஏப்ரல் 6ல் நல்ல மேய்ப்பரை அடையாளம் காட்டும். இறைவா அடையாளம் காட்டும் !


கிருபையும், தயையும் நிறைந்த உம்மிடம்

கையேந்தி நிற்கிறோம்.

இனி உம் முடிவு எதுவாகினும்

நீர் அனுமதிப்பதாக ஏற்கிறோம் !

உமக்குத் தெரியும்.

எப்போது, யாரைக் கொண்டு, எதைச் செய்யவேண்டுமென !

உமது பிள்ளைகளாகிய எங்களுக்கு வலிமை சேரத்திடும் !

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...