Skip to main content

புதுச்சேரியில் பள்ளிகளை மூட பரிந்துரை

 


புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தற்காலிகமாக பள்ளிகளை மூட துணைநிலை ஆளுநர் தமிழிசையிடம் சுகாதாரத்துறை பரிந்துரை செய்துள்ளது.


கொரோனா அதிகரித்து வருவதால் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம் என கவர்னருக்கு மாநில சுகாதாரத் துறை பரிந்துரை செய்துள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அத்துடன் புதுச்சேரியில் உள்ள பள்ளிகள் இனி வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே இயங்கும். சனி, ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்படுகிறது. இம்மாதம் 31ம் தேதி வரை 1 முதல் 9 வரை வகுப்புகள் செயல்படும். கோடைவிடுமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பள்ளிகள் திறந்து 5 நாட்கள் நடத்தப்படுகிறது.இந்நிலையில் கவர்னர் மாளிகையில் நேற்று கொரோனா தடுப்பூசி கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், கொரோனா தடுப்பு குறித்து மாநிலத்தில் மேற்கொண்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.தொடர்ந்து, புதுச்சேரியில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகளை தற்காலிகமாக மூடிவிடலாம். கொரோனா தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் காய்ச்சலை கண்டறிய முகாம் நடத்த வேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர் டெஸ்டினை 70 சதவீதமும், 30 சதவீதம் ரேபிட் டெஸ்ட் எடுத்து பரிசோதனைகளை அதிகரிக்கலாம். புதுச்சேரியில் மாஸ்க் அணியும் இயக்கத்தை தொடங்கி, மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். மருத்துவ மாணவர்களையும், முன் கள பணியாளர்களாக இணைக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் பரிந்துரை செய்தனர். இது குறித்து பள்ளி கல்வித் துறையுடன் சுகாதார துறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...