Skip to main content

கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை!!

 ஒரு நாள் நான் முடிவு செய்தேன்

இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…


ஆம்,

எனது வேலை, எனது உறவுகள்,

என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவதுஎன்று. துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.


அப்போது, கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.

“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”


கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…


“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”


“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.


“நான் புதர் செடி மற்றும் மூங்கிலு‌க்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போ‌தி‌ல் இரு‌ந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.


 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.


ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.


இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.


“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.


ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.


அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.


ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.


“இத்தனை ஆண்டு கால‌த்‌தி‌ல் மூ‌ங்‌கி‌ல் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.

பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.


எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” எ‌ன்று சா‌ந்தமாக ப‌தில‌ளி‌த்தா‌ர்.


மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.

மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.


“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனா‌ல் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.


இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”


நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்?”

“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள், வியந்தேன் நான்..


“ஆம். மூங்கில் போல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.


நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.


மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.

ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.


கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை


முந்திக்கொண்ட

முதல் செங்கல்

கோவிலின் அடித்தளத்தில்

நின்றுவிடும் !

காத்திருந்த கடைசி

செங்கல் தான்

கலசம் தொடும் !

சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை !

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Good Evening Mam...Any news about Chemistry case Judgement..

      Delete
  2. 😁😁😁😁😁😁😁😁😁😁😁
    BE HAPPY

    ReplyDelete
  3. Good morning mam and friends

    ReplyDelete
  4. Good morning mam and friends 🙏

    ReplyDelete
  5. Good morning, mam friends

    ReplyDelete
    Replies
    1. Ravi sir Unmaiya namba tet ku posting podura processing nadakuthaa sir. Namakku eppo posting poduvangaloo, ellaiyo nenaithu unmaiya manasae romba kastma erukku sir. Next stalin vanthal definitely namakku posting poda definitely one year ku mela aagum. Please reply me sir.

      Delete
  6. முந்திக்கொண்ட

    முதல் செங்கல்

    கோவிலின் அடித்தளத்தில்

    நின்றுவிடும் !

    காத்திருந்த கடைசி

    செங்கல் தான்

    கலசம் தொடும் !

    ReplyDelete
    Replies
    1. பொறுமைக்கு மிகச்சரியான விளக்கம் மேடம் 🙏

      Delete
    2. Thank you friend, keep in touch..

      Delete
  7. Ravi sir Tet candidates ku any good news irruka

    ReplyDelete
  8. ரவி நண்பா ஏதாவது தகவல் உண்டா

    ReplyDelete
  9. ஜனவரில போஸ்டிங் போடுறதா சொல்லிருக்காங்க. அட்மின் மேடம் நீங்கள் சொல்லுற எல்லாம் ரைட்டு தான் 2013 எடுக்குற முயற்சி தான் எல்லாம் அவங்களுக்கு முன்னுரிமையும் கேக்குறாங்க தான் ஆனா போஸ்டிங் சுத்தமா போடாம இருக்கதுக்கு 2013 க்கு கொஞ்சம் நெறைய போட்டுட்டு 2017, 2019க்கும் போடுவாங்க. ஏதோ ஒரு நல்லது நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Naladhu nadakkatum but partial ah nadakka kudathunu dhan solraen sir..

      Delete
    2. நல்லது தான் நடக்கும் மேடம்

      Delete
  10. நேத்து கூட நிச்சயமா போஸ்டிங் போடுவாங்கனு தான் சொல்லிருக்காங்க.

    ReplyDelete
  11. 10ஆயிரம் போஸ்டிங்னு தகவல் நண்பர்களே

    ReplyDelete
  12. Ummai news therinthal sollunga pls posting unda

    ReplyDelete
  13. Rompa kasta padurom pls BT posting podunga

    ReplyDelete
  14. Yar sonnathu sir?
    உண்மையானா தகவல்
    சொல்லுங்க sir

    ReplyDelete
  15. Sir 10, 000 postinga Bt evalo sir

    ReplyDelete
  16. 2013 mattum posting pottal 2017, 19 case poduvargal. Already 13kku posting pottargal.2017 kku suthamailla.saritana mam.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Athu lam poda mudiyathu bro...eantha method ah based ah irunthalum combine pannum pothu ear 1st varanogalo avangalukku than post.....ithu eanna kovil pirasathama pavam ivanga rombo nerama wait pandranga ivangalukku kuduthu viduvom vidrathuku.... eantha method ah base panni posting nu pottalum athula ear front la varangalo avangalukku than ithula 2013 17&19 lam pakka mattanga.....

      Delete
    3. Yes thiru sir, 2013 ku posting potanga but appo relaxation arivichathala and weightage method la neriya per affect agitathala dhan avanga inum preference nu ketutu irukanga..

      But elarukkum equal chances kudakanum, no preferences for 2013 alone..

      Delete
    4. K mam..... posting only based on mark or any method not preference

      Delete
  17. (TET-ஆல் கெட்டோர்11/25/2020 11:35 am
    நேத்து கூட நிச்சயமா போஸ்டிங் போடுவாங்கனு தான் சொல்லிருக்காங்க.)

    யார் சொன்னார்கள் sir

    ReplyDelete
    Replies
    1. 2013குரூப்க்கு அமைச்சர் சொன்னது

      Delete
  18. Yarukavathu posting podatume Pls fact news only updates

    ReplyDelete
  19. அமைச்சரை நேர்ல போய் பாத்தவங்க சொன்ன தகவல்

    ReplyDelete
    Replies
    1. சகோ கேக்குறேன்னு தப்பா நினைக்காதீங்க.. அமைச்சர் சொன்னது இதுவரைக்கும் எதுவும் நடக்கலையே நண்பா.. இதை எப்படி நம்புவது??

      Delete
    2. Election வரும் தருணம்
      So ஓரளவு நம்பலாம்

      Delete
    3. நண்பா, 2013 குரூப் பின் கோரிக்கை தான் என்ன. ??மொத்த போஸ்டிங் அவங்களுக்கு மட்டும் நிரப்ப வேண்டும் என்கிறார்களா? அல்லது அவர்கள் tet seniority preferrence கேட்கிறார்களா அல்லது employment சீனியாரிட்டி வேண்டும் என்கிறார்களா.. என்னதான் அவர்கள் எண்ணம் சகோ??

      Delete
    4. மைக்ல சொல்றதுக்கும் நேருல பேசுறதுக்கும் வித்தியாசம் இருக்கும்ல நண்பா

      Delete
    5. அவங்க நேருல போய் பாத்து பேசுறாங்கனு சொல்றங்காலே

      Delete
    6. Election vera varuthu

      Delete
    7. என்ன கேட்டிருப்பார்கள் அவர்களுக்கு மட்டும் முன்னுரிமை வேண்டும் என்று கேட்டிருப்பார்கள்

      Delete
  20. 😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  21. ஒரு சிலருக்காவது போஸ்டிங் கிடைக்கும் என்று நாம் நினைக்கிறோம் ஆனால் சரியான முறையில் பின்பற்றாமல் இருந்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்

    ReplyDelete
  22. அவரு சொன்னது நடக்காம இருந்துருக்கலாம் ஆனா இப்போ எலெக்ஷன் வரதால ஓட்ட மிஸ் பண்ணிர கூடாதுனு போடுவாங்கனு எல்லாரும் சொன்னாங்க

    ReplyDelete
  23. 10000 போஸ்டிங் என்பது வெறும் வதந்தி. இவ்வளவு நாள் உபரி ஆசிரியர் பணி இடங்கள் உள்ளன என்று கூறிவிட்டு எப்படி 10000 பணி இடங்கள் நிரப்புவார்கள். இன்று கொரோனாவை காரணம்காட்டி அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகம் இருக்கலாம் ஆனால் அடுத்த ஆண்டு பலர் மீண்டும் தனியார் பள்ளி போகலாம். ஆகவே சராசரி மாணவர்கள் எண்ணிக்கை கொண்டே பணி நியமனம் இருக்கும். மேலும் தேவைக்கு அதிகமாக பணி நியமனம் செய்யமாட்டார்கள். அடுத்த ஆட்சி வரும்போது இந்த பணி நியமனங்களில் முறைகேடு உள்ளதா என்று விசாரணை நடுத்துவார்கள் என்பதால் சரியான எண்ணிக்கை இல் மட்டுமே பணி நியமனம் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. இப்ப தான் அரசு பள்ளியில அட்மிஷன் நெறைய வந்துச்சே

      Delete
  24. 2013ல cv எல்லாம் முடிச்சு போஸ்டிங்க்கு வெயிட் பன்னிட்டு இருந்தப்போ தீடிர்னு ரிலாக்சாஷன் அறிவிச்சு நெறைய பேர் பாஸ் பன்னிட்டாங்க அது மட்டும் இல்லாம வெயிட்டேஜ் முறையில் பாதிக்க பட்டதால அவங்களுக்கு போஸ்டிங் போடணும் அல்லது முன்னுரிமை கொடுக்கணும்னு கேக்குறாங்க

    ReplyDelete
  25. 2013, 2017 மற்றும் 2017 தேர்வர்களை கொண்டே பணிநியமனம் இருக்கும். அதில் ஒரு சாரருக்கு கூடுதல் இடங்கள் என்பது தவறான தகவல்.

    ReplyDelete
  26. எந்த முறையில் பணி நியமனம் நடந்தாலும் ncte வழிமுறைகள் பின்பற்றியே இருக்கும். அதில் முதலில் தேர்ச்சி பெற்றதால் முதலில் வேலை என்ற முன்னுரிமை கிடையாது என்று உள்ளது. வெயிட்டேஜ் என்ற முறையை பின்பற்றி நியமனம் இருக்க வேண்டும் என்று கூறி உள்ளது

    ReplyDelete
  27. முறையான தகவல் வரும் வரை யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்

    ReplyDelete
  28. நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க சார்

    ReplyDelete
  29. Ithu unmaiyaga irukanum

    ReplyDelete
  30. Oru politician kitta public pona ungalukku favour ah pandrom nu than solluvanga..... posting official ah than poda mudium so mark or any method ....1st ear varongalo avangalukku than poduvanga....so don't worry about 2013 mattum poguvanga apdinu yeosikka kuda venam Frnds.....

    ReplyDelete
  31. Yes bro .....so posting pottta pothum ..... eallarukkum than podunga....

    ReplyDelete
  32. வெங்கடேசன் சார் நீங்க என்ன 2013ஆ எப்ப பாத்தாலும் நெகடிவா பேசுறீங்க

    ReplyDelete
  33. சார் நான் 2013 இல்ல 2017 ஒரு சார்பாக பேசவில்லை. Ncte விதிமுறைகள் என்ன மற்றும் பணி நியமனம் எந்த முறையில் நடைபெறும் என்பதை சட்டவழிமுறைகள் படி யோசித்து என்னுடைய கருத்துகளை சொல்லுகிறேன்.

    ReplyDelete
  34. இங்கே பலர் போஸ்டிங் எந்தமுறையில் போடுவார்கள் என்று தெரியாமல் அவர்களாகவே ஒரு முறையை சொல்லி எல்லோரையும் குழப்பிகிறார்கள். எப்படி பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் யாருக்காவது பாதிப்பு ஏற்படும். அவர்கள் நீதிமன்றம் செல்லாமல் இருந்தால் சரி

    ReplyDelete
  35. முதலில் 2013, 2017 மற்றும் 2019 தேர்வர்களுக்கு சான்றிதழ் ஆயுள்முழுவதும் செல்லும் என்பதற்கு ncte இன்னும் அனுமதி தரவில்லை அதற்குள் trb சர்டிபிகேட் டவுன்லோட் செய்ய வேலை செய்வதாக ஒருவர் கூறுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. Sir as admin mam said if trb gets legal opinion they can proceed know

      Delete
  36. Yaru pathikiruranga nu govt pakathu podanumnu ninaithal pottutum ok

    ReplyDelete
    Replies
    1. அப்போ அவனவன் கேஸும் போடுவான்

      Delete
  37. போஸ்டிங் போடுவதை நெகட்டிவ் ஆ பேசல. ஆனால் அதிக கற்பனை செய்ய வேண்டாம் என்று கூறினேன். வேணும் என்றால் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்கள் எனக்கு தெரிந்து 4000 தாண்டது.

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேல pg, bt, sgt எல்லாம் சேத்து சொல்லிருப்பாங்க போல

      Delete
  38. இதுவும் உறுதியான தகவல் இல்லை என்னுடைய கணிப்பு. ஜனவரி வரை பொறுத்து இருந்து பார்ப்போம்

    ReplyDelete
  39. Ravi sir sonna 27, 28 list varuma???

    ReplyDelete
  40. Ravi sir any update about posting

    ReplyDelete
  41. என்ன தான் நடக்குது?? மொத்தத்துல போஸ்டிங் போடுவீங்களா இல்லையா

    ReplyDelete
  42. ரவி நண்பா ஏதாவது தகவல் உண்டா

    ReplyDelete
  43. Venkatesh sir unga major and mark enna konjam sollunga plz

    ReplyDelete
  44. Intha cconversation elam paatha posting doubtu thana😓😓

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here