Skip to main content

TET Certificate - விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

 


நீட் விவகாரத்தில் அனைவரும் மகிழ்ச்சியடையும் வகையில் முதல்வர் நல்ல முடிவை அறிவிப்பார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''தெலங்கானா மாநிலத்தில் பெய்த மழை காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்வர், ரூ.3.3 கோடி மதிப்பீட்டில் உதவிகளை அறிவித்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் இழப்புகள் ஏற்படும்போது நாம் உதவி வருகிறோம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் 7 ஆண்டு காலம் மட்டுமே செல்லுபடியாகும். அதை ஆயுட்காலம் வரை நீட்டிக்க வேண்டும் என்று ஒரு மாத காலத்துக்கு முன்னதாக முதல்வர் பழனிசாமி, பிரதமருக்குக் கடிதம் எழுதினார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று இந்தியா முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ், ஆயுட்காலம் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. விரைவில் ஆசிரியர்களுக்கு இந்த உத்தரவு ஆயுட்காலம் வரை நீட்டிக்கப்படும்.

நீட் தேர்வு விவகாரத்தில், தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் முதல்வர் விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்'' என்று அமைச்சர் செங்கோட்டையன்  தெரிவித்துள்ளார்.

Comments

  1. Antha board la display panni Enna use da lusungalaaaaaa..... Already TET pass pannavangalukku posting podungada...... Manguni sen gotta amaichare...... Erode pakkam vanthana unakku செருப்பு மாலை தான் மகனே....

    ReplyDelete
  2. நன்றி கல்வி அமைச்சரே!!
    பணிநியமனம் அம்மா மறைந்தநாளிருந்து ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடம் போடலையே அது ஏன்?
    இப்ப மாணவர் சேர்க்கை
    வரலாறு காணத அளவில் சேர்ந்துள்ளனர்
    மற்றும்7.5இட ஒதுக்கீடு வரப்போகுது

    ReplyDelete
  3. அமைச்சரே உங்கள் ஆட்சி முடிவதற்குள் பணியிடங்கள் நிரப்பப்பட்டால் உங்களுக்கு நன்று. பொறுத்திருந்து பார்ப்போம்

    ReplyDelete
  4. இன்னும் ஒரு வாரத்தில் எடப்பாடி தலைமயிலான ஆதிமுக ஆட்சி கலைக்கப்படுகிறது, எந்த பணி வழங்கலும் 8 மாதம் கழித்துதான் நடைபெறும்

    ReplyDelete
    Replies
    1. கலைக்கப்பட வேண்டிய ஆட்சி தான்

      Delete
  5. உன்னோட மூஞ்சுல ஒட்டிக்கொ

    ReplyDelete

Post a Comment