Skip to main content

யதார்த்தம்..



#உழைப்பு...
#உண்மை...

வேர்க்கடலைய ட்ரைசைக்கிள்ள தள்ளிட்டு போற தாத்தா

கீரைகட்டு வித்துட்டுப் போற பாட்டி

செருப்பு தைக்க உக்காந்திருக்கும் அண்ணன்

மகனுடன் வெள்ளரிக்கா கூறுபோட்டு விக்கும் அக்கா

டிவிஎஸ் ஃபிப்டியில் எழனி வித்துட்டு போகும் அண்ணன்

இவர்கள் எல்லாம்
என்ன அத்தியாவசியப்பொருளா விக்குறாங்க? என்று நமக்குத் தோன்றுகிறது.

"அண்ணே..
அக்கா.. வீட்டுல இருக்கலாம்ல..ஏன் இப்டி இந்த நோய் பரவுற காலத்துல சுத்திட்ருக்கீங்க?" என்று கேட்கத்தோன்றும்

ஆனால்
அவர்கள் வீட்டுக்குத் தேவையான
அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு அவர்கள் கையில் வைத்திருப்பதை கொஞ்சமாவது விற்றால் தான் முடியும் என்ற உண்மை தெரியும் போது

அவர்கள் பக்கம் இருக்கும் நியாயம்
பாலை நில வெயில் போல் முகத்தில் உறைக்கிறது.

ஆம்..

ஏழைகள் அனைவரின் வீட்டிற்குள்ளும் கொரோனா செல்லும் என்று கூறமுடியாது
ஆனால்
தினமும் மூன்று வேளையும் தவறாமல் அவர்கள் வீடுகளுக்குள் பசிப்பிணி சென்று வருகிறது .

நம் அன்றாடம் சந்திக்கும் இதுபோன்ற சின்னஞ்சிறு வியாபாரிகள் நலன் கருதி அவர்களிடமும் ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும்.

காரணம் அவர்கள் பொருட்கள் வாங்காமல் கொடுக்கும் சிறு பணத்தைக்கூட வாங்க மாட்டார்கள்

இவர்களுக்காக மனம் இறங்குவோம் 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Hi sis . I am Revathi . Network problem sis athan sariya wish panna mudiyala. Hope all of you safe. Have a wonderful good Friday

    ReplyDelete
    Replies
    1. Am fine sis, hope you are also fine, take care of papa too..

      Delete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...