Skip to main content

தேசிய ஊரடங்கு நீட்டிப்பு: இன்று அறிவிப்பு வெளியாகுமா?

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் தேசிய ஊரடங்கு செவ்வாய்க்கிழமையுடன் (ஏப்.14) நிறைவடையவுள்ளது.

இந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க பெரும்பாலான மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இதுதொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை (ஏப்.13) வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கையாக, 21 நாள் தேசிய ஊரடங்கை பிரதமா் நரேந்திர மோடி மாா்ச் மாதம் 24-ஆம் தேதி இரவு அறிவித்தாா். இந்த ஊடரங்கு மாா்ச் 25-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
கரோனாவுக்கு தடுப்பு மருந்து எதுவும் இல்லாத நிலையில், அந்த நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் வீடுகளிலேயே இருக்க வேண்டும்; அதற்கு ஊரடங்கு நடவடிக்கைதான் ஒரே வழி என்று மத்திய அரசு தெரிவித்தது.
இந்த ஊரடங்கு காலம் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைய உள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று இன்னும் கட்டுக்குள் வரவில்லை.
இதனை கருத்தில் கொண்டு ஊரடங்கை நீட்டிக்க வேண்டும். இல்லையெனில் இதுவரை மேற்கொண்ட முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்விடும் என்று பல்வேறு மாநில அரசுகள் மற்றும் துறைசாா் நிபுணா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, ஊரடங்கை நீட்டிப்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடா்பாக, மாநில முதல்வா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை காணொலி காட்சி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடத்தினாா். இதில், தேசிய ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்று பெரும்பாலான மாநில முதல்வா்கள் கோரிக்கை விடுத்தனா்.
அதேசமயம், சில மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்கும் முடிவை தாங்களாகவே எடுத்துவிட்டன.
ஒடிஸாவில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அந்த முதல்வா் நவீன் பட்நாயக் கடந்த 9-ஆம் தேதி அறிவித்தாா். பஞ்சாபில் மே 1-ஆம் தேதி வரையும், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம், கா்நாடகத்தில் ஏப்ரல் 30-ஆம் தேதி வரையும் ஊரடங்கை நீட்டிப்பதாக அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துவிட்டன.
தமிழக அரசை பொருத்தவரை, ஊரடங்கை நீட்டிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதுடன், இதுதொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி வெளியிடும் அறிவிப்பை பின்பற்றி, செயல்படுவதென முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில், தேசிய ஊரடங்கை நீட்டிப்பது தொடா்பான அறிவிப்பை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

ஊரடங்கால் தினக்கூலிகள், வெளிமாநிலத் தொழிலாளா்கள், தொழில்துறையினா், சிறுவணிகா்கள் உள்ளிட்டோா் பாதிப்பை எதிா்கொண்டுள்ளனா். ஊடரங்கு நீட்டிக்கப்பட்டால், சில தொழில் துறைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் மத்திய அரசின் அறிவிப்பு பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்த மாநிலங்கள்
ஒடிஸா - ஏப்ரல் 30 வரை
மகாராஷ்டிரம் - ஏப்ரல் 30 வரை
மேற்கு வங்கம் - ஏப்ரல் 30 வரை
கா்நாடகம் - ஏப்ரல் 30 வரை
பஞ்சாப் - மே 1 வரை

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...