Skip to main content

Tet - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

  • தமிழ்நாடு அரசுப் பணி யாளர்
தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் .

இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது :

கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது . அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் களை இதுவரை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட வில்லை . ஆனால் இதற்கு முன்னதாக நடந்த தேர் வில் தேர்ச்சி பெற்ற 2448 பேரின் தேர்ச்சி பட்டியல் மட்டுமே வெளியிடப் பட்டது . அதில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளது .

குறிப்பாக முதற் கட்ட தேர் வின் போது காலையில் நடந்த இடைநிலை ஆசிரியர்க ளுக்கான தேர்வில் வெறும் 10 , 12 மதிப்பெண்கள் பெற்ற ஆசிரியர்கள் , மதியம் நடந்த இரண்டாம் தாள் தேர்வில் மட்டும் 150க்கு 113 மதிப்பெண் பெற்றுள் ளனர் . இது எப்படி நடந் தது . காலை தேர்வில் 16 மதிப்பெண் பெற்ற ஒருவர் மதியம் நடந்த தேர்வில் 114 மதிப்பெண் பெற்றுள்ளார் . இந்த இரண்டு நபர்கள் ஆசிரியர் தேர்வு எழுதியது ஒரே தேர்வு மையம் , ஒரே தேர்வு அறை என்பதை மறுக்கமுடியாது . அதில் முதலிடம் பிடித்த தேர்வர் அந்த தேர்வு கடினமாக இருந்ததாக பேட்டி அளித் தார் . ஆனால் அவர் 150க்கு 142 மதிப்பெண் பெற்றுள் ளார் . அவர்களுக்கு ஆசி ரியர் பணி வழங்கப்பட் டுள்ளது . அதற்கு பிறகு நடந்த ஆசிரியர் தேர்வுகளில் 3 மணி நேரம் கால அளவு நீட்டிக்கப்பட்டாலும் , 142 மதிப்பெண் பெற்றவ ரைப் போல இது வரை யாராலும் அந்த மதிப் பெண்ணை பெற முடிய வில்லை என்பது தான் வேடிக்கை . அரசுப்பணிக ளுக்கான விதிமுறைகளை மீறி ஆசிரியர் தேர்வு வாரி யம் செயல்பட்டுள்ளதாக தெரிகிறது .

இந்நிலையில் , 2013ம் ஆண்டு நடந்த ஆசி ரியர் தகுதித் தேர்வில் 70 ஆயிரம் பேர் தேர்ச்சிபெற் றும் இது வரை எங்களுக்கு பணி நியமனம் வழங்க வில்லை . ஆனால் முன்பு நடந்த தேர்வுகளில் முறை கேடாக செயல்பட்டு தகு தியற்ற நிலையில் உள்ளே நுழைந்து பணி நியமனம் பெற்று எங்கள் வாழ்வாதா ரத்தை கேள்விக்குறியாக்கி யுள்ளனர் . இது போல ஊழல் செய்து உள்ளே நுழைந்த வர்களை அடையாளம் காட்டியும் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை . இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டில் நடந்த தேர்விலும் முறை கேடு நடந்துள்ளது . இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட் டது . அதன்பேரில் பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கும் , ஆசிரியர் தேர்வு வாரியத் துக்கும் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது . ஆனால் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யவில்லை . தற்போது பல் வேறு தேர்வுகளில் நடந்த முறை கேடுகள் குறித்து செய்திகள் வெளியாகி பரபரப்பு ஏற் பட்டுள்ள நிலையில் புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரி யர் தேர்வு வாரியம் தெரி வித்துள்ளது .

அதனால் நீதிமன்றம் தானாக முன் வந்து போட்டித் தேர்வு சார்ந்த அனைத்து முறை கேடுகளையும் விசாரிக்க வேண்டும் . சிபிஐ விசார ணையும் வேண்டும் . அப் படி விசாரித்தால் எங்களி டம் உள்ள ஆதாரங்களை கொடுப்போம் .

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here