Skip to main content

மாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..!



உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மாறி வரும் உணவுப்பழக்கவழக்க முறைகளினால் இன்று மாரடைப்பு என்பது சாதாரணமாகி விட்டது. பெரும்பாலும் உணவு முறைகளால்தான் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறும் நிலையில், உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.




பிரிட்டிஷ் இதழான பி.எம்.ஜேவில் வெளியிடப்பட்ட ஆய்வில் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சோடியம் அதிகளவில் உடலில் சேருவது என கண்டறியப்பட்டுள்ளது.
சோடியம் குளோரைடு(உப்பு) பொதுவாகவே அனைத்து உணவுகளிலும் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. அனைத்து தயாரிப்புகளிலும் சேர்க்கப்படுவதால் நாம் எதிர்பாராத விதத்தில் உடலில் உப்பு சேருகிறது.
உப்பு அதிகளவில் உடலில் சேரும்போது, முதற்கட்டமாக உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தினால் இதயத்திற்கு ஆக்சிஜன், உணவைக் கொண்டு செழுலும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு வர காரணமாகிறது.




நியூயார்க்கின் மவுண்ட் சினாய் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஐசில்மா பெர்கஸ் இந்த ஆய்வு குறித்து கூறுகையில், 'உடலில் ஏற்படும் பல பிரச்னைகளுக்கு சோடியம் காரணமாக இருப்பது இந்த ஆய்வின் மூலமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. சாதாரணமாக, சோடியம் குறைவதால் ரத்த அழுத்தம் குறைகிறது. உலகளாவிய மக்களிடையே பலதரப்பட்ட தரவுகள் மற்றும் ஆய்வுகளின் அடிப்படையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.




நமது உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். 120/80mmHg என அளவில் இருக்க வேண்டும். இதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருந்தால் முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி, எந்த ஒரு நோயும் வருவதற்கு முன்னரே தடுக்க வேண்டும். எனவே, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பின் அளவை குறைப்பது நல்லது' என்று தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here