Skip to main content

ஒரு தோழியின் டைரியிலிருந்து..

வீடு_முழுவதும்_தோரணங்கள்,
கல்யாண அலங்காரங்கள்,
வீட்டில் முதல் திருமணம்!
மகளின் திருமணம்!
திருமணமாகி இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது!

என்னைத்தவிர எல்லோருக்கும் சந்தோஷம்!
எப்படி பிரிந்து இருக்கப்போகிறேன்
என்பது தான் என் கஷ்டமும் கவலையும்!

இவ்வளவு பெரிய வீட்டை கட்ட
முதல் செங்கல் எடுத்து கொடுத்தது அவள்தான்!
அவள் பிஞ்சு கைகளை
செங்கல் சிராய்த்து விடும் என்று
கைமுழுவதும் துணியால் சுற்றி
எடுத்து கொடுக்க சொன்னேன்!

இன்று அவளை அனுப்புவதற்காக
வாங்கிய விலையுயர்ந்த காரும்
ரோஜாக்களால் சுற்றப்பட்டு இருக்கிறது!
விடிய விடிய நானே தான் விரும்பி
சுற்றி அலங்கரித்தேன்!
இப்போது வழியனுப்ப முடியாமல்
ரூமுக்குள் அடைந்து உட்கார்ந்து இருக்கிறேன்!

இதழ்களும் இமைகளும் மட்டுமே
வெடிக்கும் அழுகைக்கு வேலி போட்டு
காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன!
கிளம்ப தயாராகி விட்டார்கள்,
யாரும் என்னை கூப்பிட வேண்டாம் என்று
சொல்லிவிட்டேன்!
எல்லோருக்கும் என்னை புரியும்,
அதனால் கட்டாய படுத்தமாட்டார்கள்!

கிளம்புவதற்கு முன் என் குழந்தை வந்தது!
அவள் குழந்தையாக இருக்கும்போது
அம்மா திட்டிவிட்டாள் என்று
இதேபோல் தான் வந்து ரூமுக்குள் வந்து
உட்கார்ந்து கொள்வாள் நான் வரும்வரை!
பார்த்த உடன் அவ்வளவு துக்கம்
எங்கிருந்து வருமோ தெரியாது,
அப்படி பொங்கிக்கொண்டு வரும் அழுகை!
காரணம் பெரிதாக இருக்காது,
இவள் சாக்லேட் கேட்டிருப்பாள்,
அவள் கொடுத்திருக்க மாட்டாள் அவ்வளவுதான்!
அதற்கு அவ்வளவு பெரிய ஆர்ப்பாட்டம்!
அதற்கு கொஞ்சமும் குறைவில்லாத
ஆர்ப்பாட்டமாக தெரியும் என்னுடைய
இந்த ஆர்பாட்டமும்!

"வெறும் பன்னெண்டு கிலோமீட்டர் தானேப்பா,
எப்போ வேணா ஓடி வந்துடுவேன்,
உங்களுக்கு கூட ஆபீஸ் போற வழிதானே,
எப்போ வேணா வந்து பாத்துட்டு போலாம்,
feel பண்ணாதீங்கப்பா,
அப்புறம் நான் அழ ஆரம்பிச்சேன்னா
எவ்ளோ கஷ்டம்னு உங்களுக்கே தெரியும்,
வந்து tata சொல்லுங்க என்று
கையை பிடித்து  அழைக்க,
எந்த மறுப்பும் சொல்லாமல் எழுந்து நடந்தேன்!
காரில் ஏறினாள்,
கார் கிளம்பி தெருவை கடக்கும் வரை
கையசைத்து கொண்டே இருந்தேன்.

யாரோடும் பேசாமல்
படியேறி அவளுக்கென்று
வடிவமைத்த அறைக்குள் நுழைந்தேன்!
அறை முழுவதும் அவளுக்காக
வாங்கி கொடுத்த உடைகள்.
அவள் துப்பட்டாக்களை எடுத்து
போர்த்திக்கொண்டு அழவேண்டும் போல்
தோன்றியது.
பீரோவைத்  திறந்தேன்,
உள்ளே ஒரு கடிதம்!

"அப்பா, என்னை வழியனுப்பியதும்
இங்குதான் வருவீர்கள் என்று தெரியும்,
என் துப்பட்டாவை தேடுவீர்கள் என்றும் தெரியும்!
கொஞ்ச நாள் என்னுடைய அறையில் தான்
தூங்குவீர்கள் என்று தெரியும்,
உங்களுடைய மாத்திரைகள்,
டைரி, புத்தகங்கள் எல்லாவற்றையும்
என்னுடைய அறையிலேயே வைத்துவிட்டேன்!
என்னை நினைச்சி கவலைப்பட கூடாது.

இவர் நீங்க பாத்த மாப்பிள்ளை,
கண்டிப்பா என்னை  ரொம்ப நல்லா பாத்துக்குவாரு, உங்கள விட என் life ல யாருக்குப்பா அக்கறை இருக்க முடியும்!
அதுனால கண்டிப்பா சந்தோஷமா தான்
இருப்பேன்!

ஒரு நல்ல அப்பாவாக  எல்லாத்தையும்
எனக்கு கொடுத்துட்டீங்க,
ஒரு பெஸ்ட் மகளா எப்பவுமே
உங்க பேரை காப்பாத்துவேன்!

என் friends எல்லாரும் லவ் marriage.
நா எதுக்கு லவ் பண்ணணும்?
உங்களுக்கு தெரியாதா? என் life எப்படி இருக்கனும்னு?

எனக்கு வந்த எல்லா proposal greetings ம்
மூணாவது கப்போர்ட்ல இருக்கு,
போரடிக்கும்போது படிங்க!
Engagement க்கு அப்புறம் கூட
நாலு பேரு propose பண்ணாங்க,
எங்க அப்பாவை பாத்து பேசுங்கன்னு
சொல்லிட்டேன்,
வந்து பாத்தா நல்ல பதிலா
சொல்லி அனுப்புங்கப்பா..

அப்புறம் இன்னொரு விஷயம்,
உங்களோட light orange shirt,
மருதாணி பூசுன fullent  white shirt,
எனக்கு புடிச்ச Sky blue shirt,
உங்களோட Hero pen,
இதெல்லாம் காணோம்னு தேடாதீங்க,
எல்லாத்தையும் நான் எடுத்துட்டு வந்துட்டேன்,
உங்களை பிரியும் வலி எனக்கு மட்டும் இருக்காதா?
Love you more than
anything in this world அப்பா😘😘😘 "
இப்படிக்கு,
ஆயிரம் முத்தங்களுடனும்  அன்பு கண்ணீருடனும் உங்களின் அன்பு மகள்...


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. Mam monday trb office poitu poratam pana porankalam.

    ReplyDelete
  4. என்ன போராட்டம்

    ReplyDelete
  5. Porattam vetri Aadaiya vazhthukal. But solli iruntha nangalum vanthu irupom

    ReplyDelete
  6. அப்படியாவது முடிவு வரட்டும்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...