Skip to main content

தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்...


தேர்வு எழுதுவதில் நேர நிர்வாகம்
மூன்று மணிநேரத்தில் நீங்கள் அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் பெறலாம் . அதாவது 180 நிமிடங்களில் 100 மதிப்பெண்கள் . அப்படியென்றால் ஒரு மதிப்பெண்ணுக்கு 1 . 8 நிமிடங்கள் . இதை ஒன்றரை நிமிடம் என்று வைத்துக்கொள்வோம் . அதாவது ஒரு மதிப்பெண்ணுக்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் . இப்படிச் செய்தால் இரண்டரை மணிநேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிடலாம் . மீதமுள்ள நேரத்தில் விடைகளைச் சரிபார்த்துக்கொள்ளப் பயன்படுத்தலாம் .




தேர்வின் முந்தைய நாள் செய்யவேண்டியவை
1 . புதிதாக எதையும் படிக்காதீர்கள் .
2 . குறிப்புகளை வைத்துப் படியுங்கள் .
3 . படித்த அனைத்தையும் தூங்கும் முன் நினைவுகூருங்கள் .
4 . இரவு கண்டிப்பாக ஐந்து மணிநேரமாவது தூங்குங்கள் .
5 . மறு நாள் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைப் பட்டியலிட்டு , அனைத்தையும் மறக்காமல் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் .
தேர்வு அன்று . . . 1 . அதிகாலை எழுந்ததும் இரவில் நினைவுகூர்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பாருங்கள் .
2 . குளித்து , உடுத்து , உண்டு , வணங்கித் தன்னம்பிக்கையோடு தேர்வுக்குச் செல்லுங்கள் .
3 . அரைமணி நேரம் முன்னதாகவே தேர்வு நடக்கும் இடத்துக்குச் சென்றுவிடவும் . நண்பர்களிடம் அதிகம் பேச வேண்டாம் . பதற்றம் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்கவும் .




4 . தேர்வு முடிந்த பின் , வீட்டுக்குச் சென்று ஓய்வெடுத்துவிட்டு , அன்றைய தேர்வில் செய்த தவறுகளை நினைத்து மனம் வருந்தி காலத்தை விரயமாக்காமல் , அடுத்த தேர்வுக்கு மனஉறுதியுடன் படிக்கத் தொடங்குங்கள்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...