Skip to main content

விற்பனை தந்திரம்!!

பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்யும் முதியவர் ஒருவர், அந்தப் பேருந்தில் பழக் கூடையுடன் ஏறினார். “ஐந்து பழங்கள் பத்து ரூபாய்..” என்று கூவி, பழங்களை விற்க முயன்றார். எவரும் பழம் வாங்க முன்வரவில்லை. 

சுமக்க முடியாமல் சுமந்தபடி முதியவர் கீழே இறங்கியதும், இளைஞன் ஒருவன் பேருந்தில் ஏறினான். அவன் “ஆறு பழங்கள் பத்து ரூபாய்” என்று கூவினான். அவனுக்கு நல்ல விற்பனை!

மற்றொரு பேருந்தில் ஏறிய முதியவர் அங்கும், “ஐந்து பழங்கள் பத்து ரூபாய்...” என்று விற்க முயன்றார். பலன் இல்லாமல் போகவே, கீழே இறங்கி விட்டார். 

அடுத்து, “ஆறு பழங்கள், பத்து ரூபாய்...” என்று கூவியபடி அந்தப் பேருந்தில் ஏறிய இளைஞன், அதிகமாக விற்பனை செய்தான்.

மிகப் பெரிய கம்பெனியின் விற்பனை ஆலோசகரான ஒருவர் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தார்.

முதியவரை அருகில் அழைத்தவர், “அந்த இளைஞனின் சாமர்த்தியம் உங்களிடம் இல்லையே... அவனுக்குப் போட்டியாக நீங்களும் ஆறு பழம் பத்து ரூபாய் என்று விற்றால்தானே உங்களுக்கு விற்பனை ஆகும். 

அதிகக் கொள்முதல் மூலம் குறைந்த விலைக்குப் பழங்களை வாங்கி, லாபத்தைக் குறைத்து அதிக விற்பனை செய்யப் பழகுங்கள் தாத்தா..." என்று தனது ஆலோசனைகளை அள்ளி விட்டார்.

முதியவர் சிரித்தபடி, “போய்யா... அவன் என் மகன். இந்தப் பழமும் அவனதுதான். “ஆறு பழம் பத்து ரூபாய்”னு விற்றால்... சட்டுன்னு வாங்குவதற்கு, நம்ம சனத்துக்கு மனசு வராது.

 அதனால் நான், “ஐந்து பழம் பத்து ரூபாய்...”'ன்னு கூவிகிட்டுப் போவேன். அப்புறமா, “ஆறு பழம் பத்து ரூபாய்...”னு அவன் வந்து சொன்னதும்... 

“அடடே லாபமா இருக்கே..”ன்னு சனங்க சட்டுன்னு வாங்கிடுவாங்க. அவன்தான்யா நிசமான வியாபாரி. சனங்களோட மனசை மாத்தறதுக்குத்தான் என்னை முன்னாடி அனுப்புறான்...” என்றார் முதியவர்.


அந்த விற்பனை ஆலோசகர் அசந்து நின்றார்.. 

வாழ்க்கையும் இப்படி தான் நம்மை சுற்றி இருக்கும் பல நல்ல வாய்ப்புகளை நாம் இவ்வாறு தான் இழக்கிறோம், ஏமாற்றப்படுகிறோம்.. 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்

    செய்திக் குறிப்பு

    · கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர் போன்ற பதவிகளை உள்ளடங்கிய 9,398 பணியிடங்களுக்கு 01.09.2019 அன்று தொகுதி IV தேர்வு பல்துறைகளைச் சார்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட அலுவலர்களின் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்டது. 16,29,865 விண்ணப்பதாரர்களுக்கு நடைபெற்ற தேர்வு முடிவுகள் 12.11.2019 அன்று வெளியிடப்பட்டு 24,260 நபர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.



    · கடந்த 05.01.2020 அன்று சமூக வலைதளங்களிலும் பிறகு ஊடகங்களிலும் இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை மையங்களில் பிற மாவட்டங்களிலிருந்து வந்து தேர்வு எழுதியவர்கள் தரவரிசைப்பட்டியலில் முதல் நூறு இடங்களுக்குள் அதிகப்படியாக தெரிவாகியுள்ளதாக செய்தி வெளிவந்தது.



    · இதையடுத்து தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில் 99 தேர்வர்கள் இடைத்தரகர்களின் ஆலோசனையின் பேரில் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் தேர்வு மையங்களைத் தேர்வு செய்ததாகவும் தேர்வுக்காக மேற்படி தேர்வர்கள் இடைத்தரகர்களிடமிருந்து பெற்ற விடைகளைக் குறித்தவுடன் சில மணி நேரங்களில் மறையக்கூடிய சிறப்பு மையினாலான பேனாவினால் விடைகளைக் குறித்துவிட்டு வந்ததாகவும் தெரிய வருகிறது.



    · மேலும் சந்தேகத்திற்குரிய இடைத்தரகர்கள் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த நபர்களின் துணையுடன் 52 தேர்வர்களின் விடைத்தாள்களில் திருத்தம் செய்து மாற்று விடைகளைக் குறித்து, அதே விடைத்தாள் கட்டுகளில் சேர்த்து வைத்துள்ளதும் தெரிய வந்துள்ளது. இதில் 39 தேர்வர்கள் முதல் 100 தரவரிசைக்குள் வந்துள்ளனர்.



    · இத்தேர்வு குறித்து தேர்வாணையம் சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் தீவிர ஆய்வு செய்தும், சம்பந்தப்பட்ட தேர்வுக்கூடங்கள் மற்றும் கருவூலங்களைத் தலஆய்வு செய்தும், தேர்வுப்பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தேர்வர்களிடம் நேரடி விசாரணை செய்ததன் அடிப்படையில் மேற்கண்ட தவறுகள், இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் மையங்களில் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டுள்ளது.



    · மேற்கூறிய மையங்களைத் தவிர வேறு எந்த இடத்திலும் வேறு எந்தவிதமான தவறும் நடைபெறவில்லை என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது.



    · மேலும், தேர்வாணையம் வெளியிடும் தேர்வு அறிவிக்கைகளிலும் தேர்வாணைய இணையதளம், தேர்வர்களுக்களுக்காக வெளியிடப்பட்டுள்ள அறிவுரைகள் போன்ற அனைத்து தளங்களிலும்

    1. தேர்வாணையத்தின் தெரிவுகள் அனைத்தும் விண்ணப்பதாரர்களின் தர வரிசைப்படியே மேற்கொள்ளப்படுகின்றன.

    2. பொய்யான வாக்குறுதிகளை சொல்லி, தவறான வழியில் வேலை வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள்.

    என்பன போன்று பல வழிகளில் அறிவுறுத்தியும் இதுபோன்ற தவறுகளில் ஒரு சில தேர்வர்களே ஈடுபட்டிருப்பது தேர்வாணையத்திற்கு வருத்தமளிப்பதாகவும் தேர்வாணையத்தின் மாண்பைக் குலைப்பதாகவும் உள்ளது.

    · எனவே மேற்படி காரணங்களின் அடிப்படையில் தேர்வாணையம் கீழ்கண்ட முடிவுகளை எடுத்துள்ளது.

    1. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. .

    2. தரவரிசைப்பட்டியலில் வந்துள்ள 39 தேர்வர்களுக்கு பதில் தகுதியான வேறு 39 நபர்களைத் தெரிவு செய்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது..

    3. சம்பந்தப்பட்ட 99 தேர்வர்கள் மற்றும் இடைத்தரகர்களாக செயல்பட்ட சந்தேகத்திற்குரிய நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டுள்ளது.

    4. சான்றிதழ் சரிபார்த்தல் அடிப்படையில் தகுதியான தேர்வர்களுக்கு உடனடியாக கலந்தாய்வு நடத்தப்படும்.

    5. இனிவரும் காலங்களில் எவ்விதமான தவறுகளும் நிகழாவண்ணம் தேர்வு நடைபெறும் முறையில் தகுந்த சீர்திருத்தங்கள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



    · தேர்வாணையத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றி நடைபெறுகிறது. எனவே தேர்வர்கள் தேர்வாணையத்தின் மீது நம்பிக்கைவைத்து நேர்மையான முறையில் தேர்வினை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்





    செயலாளர்.

    24.01.2020

    ReplyDelete
    Replies
    1. இவங்களே குண்டு வப்பாங்களாம் அப்புறம் இவங்களே போய் எடுப்பங்களாம்

      Delete

  4. Wats app mge


    *♦கல்வித்துறை தனியார்மயத்தை நோக்கி நகர்கிறதா?- தமிழகத்தில் 1706 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து!*

    *📍தமிழ்நாட்டில் சமீப ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்துள்ளது. தரமான கல்வி அரசுப் பள்ளிக் கூடங்களில் கிடைக்காததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.*

    *📍இதைக் காரணம் விரைவில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக அடைக்கப்பட்டு, கல்வித் துறை முழுவதுமாக தனியார் மயமாக்கப்படும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.*

    *📍இந்த குற்றச்சாட்டுகளை உறுதிப் படுத்தும் வழியிலே தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடந்து கொள்கிறது. கடந்த ஆண்டு நூற்றுக் கணக்கான பள்ளிகளை மூடிய தமிழ்நாடு அரசு தொடர்ந்து அரசு ஆசியர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.*

    *📍அதன் தொடர்ச்சியாக இப்போது புதிய அறிவிப்பு ஒன்றைத் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்கள் தொடர்பான தகவலைத் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியிருந்தது.*

    *📍அதைத் தொடர்ந்து, மாநிலத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் பட்டதாரி ஆயிரத்து 706 என்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள புதிய உத்தரவில், “அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நிரப்பப்படாமலிருக்கும் ஆயிரத்து 706 காலி பணியிடங்களை ரத்து செய்யப்பட்டுள்ளது” எனக் கூறப்பட்டுள்ளது.*

    *📍இந்த பணியிடங்களில் இனி ஆசிரியர் தேர்வு நடத்தப்படாது என்பது இந்த உத்தரவின் மூலம் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது.*

    *♦Friends Social Media*

    ReplyDelete
    Replies
    1. நீங்க நடத்திட்டாலும்

      Delete
    2. நடத்தி அப்புடியே போஸ்டிங்க போட்டுட்டாளும்

      Delete
  5. Sister. Pgtrb counselling june la thaan varumnu HM sir oruthar sonnar.. ungalukku edhum thagaval irukkaa???

    ReplyDelete
    Replies
    1. Brother..

      Ungalukku kedacha thagaval general ah solirpanganu naa nenaikraen, bcz next month practicals, board exams, correction nu poidum so june la dhan apdinu solirpanga..

      Bt 75% apdi nadakka chances ila, court vera revived list pathi solirkanga so seekiram mudiya chances iruku..

      Delete
  6. வணக்கம் அட்மின் அவர்களே

    ReplyDelete
  7. Trt தேர்வுக்கு pgtrb போலவே பாடத்திட்டம் இருக்கும் என்று தகவல். உண்மையா மேடம்?

    ReplyDelete
    Replies
    1. My assumption current affairs and g.k 20 marks to 30 marks, methodology 20 marks. Vara வாய்ப்பு இருக்கு... Content questions குறைவாக தான் வரும்

      Delete
    2. Exact ah pg madhiri varadhu sir.. Ivlo naal wait panom, evalavo paathutom, idhayum paathrulam..

      Delete
    3. நன்றி மேடம்

      Delete
    4. நன்றி சு. ரா நண்பா

      Delete
  8. Mam epa syllabus varum any idea?

    ReplyDelete
  9. Replies
    1. எப்போது வேண்டுமானாலும் வரலாம் நண்பா..

      Delete
    2. Thanks for reply sir

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here