Skip to main content

நல்லகண்ணு..

1940களில் ஒரு வடமாநில இளைஞன் ஆங்கிலேய நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறான்.

சுதந்திரம் கேட்டுப் போராடினாயா "நீதிபதி கேட்கிறார்."

இல்லை,

நான் போராட வில்லை என்னை விட்டுவிடுங்கள் என்று சொன்னவன் அத்தோடு நிற்கவில்லை, இவர்கள்தான் போராடினார்கள் என்று போராளிகளையும் காட்டிக்கொடுக்கிறார்!

அதே காலகட்டத்தில் தெற்கே தமிழகத்தில் விடுதலைப் போரில் பங்கேற்ற ஒரு இளைஞனை காவல்துறை கைது செய்கிறது!

சிறையில் வைத்து சித்ரவதை செய்கிறார்கள். எத்தனையோ கொடுமைகளுக்குப் பிறகும் அவனிடமிருந்து எதையும் பெற முடியவில்லை. போராளிகள் ஒருவரைக்கூட அவன் காட்டிக்கொடுக்கவில்லை!

கோபத்தின் உச்சத்தில் அதிகாரி ஒருவன் அந்த இளைஞனின் மீசையை தன் கையிலிருந்த சிகெரெட்டால் சுட்டுக் கருக்குகிறான். அந்த இளைஞனின் நெஞ்சுறுதியை குலைக்க முடியவில்லை.
தண்டனை வாங்கிக் கொண்டு, விடுதலை கனல் நெஞ்சில் எறிய சிறை புகுகிறான் அந்த இளைஞன்!

நாடு விடுதலை அடைகிறது...!
50 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தமண்ணில் தேர்தல் நடக்கிறது. அன்று காட்டிக் கொடுத்த அந்த வடநாட்டு இளைஞன் இந்தியாவின் பிரதமர் ஆகிறார்.

அந்த வடநாட்டு இளைஞன் வாழ்வின் எல்லா வசதிகளையும் அனுபவிக்கிறான்.

இவனோ, துறவி போல மக்கள் நல அரசியலை இன்றைக்கும் முன்னெடுத்துப் போராடுகிறான்.

அவன், ஒரு குறிப்பிட்ட வயதோடு அரசியல் போதும் என்று ஓய்வெடுத்துக் கொள்கிறான். இவனோ, மரணிக்கும் வரையும் ஓய்வு கிடையாது என்று சொல்லி, மண்ணின் வளம் கொள்ளை போவதையும், நதிகளை மீட்கவும் காலம் பார்க்காமல் இன்றைக்கும் ஓடி ஓடி உழைக்கிறான்!

90 வயது முடியும் போது, ஓய்வில் இருந்த அந்த வடநாட்டு இளைஞனுக்கு "பாரத ரத்னா" விருது கிடைக்கிறது! இந்த தமிழ்நாட்டு இளைஞனுக்கு பிழைக்கத் தெரியாதவன் என்னும் பழிச்சொல் பரிசாகக் கிடைக்கிறது!

இதுதான் இந்தியாவின் அரசியல்! தர்மம் வெல்லும்...

1924 டிசம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் அந்த வடநாட்டு இளைஞர். 1925 டிசம்பர் 26ஆம் நாள் பிறந்தவர் இந்தத் தென்னாட்டு இளைஞர்.

அவர் அடல் பிகாரி வாஜ்பாய்...

இவர் அருமை அய்யா நல்லகண்ணு!!!

அன்று அவர் தேசத் துரோகி, இவர் விடுதலைப் போராட்ட தியாகி.

இன்று அவர் தேசபக்தர்... இவர் தேச விரோதி!!

பாரத் மாத்தாக்கி ஜே!!

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். - குறள் 510

குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும்.

பக்தருக்கும் , பதருக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க தெரியாத தேசம், தியாகங்களை மதிக்கத் தெரியாத தேசம் அல்லலுறும்.

அழிந்து_போகும்!!!!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. வணக்கம் தல

    ReplyDelete
  3. என்ன மேடம் நம்ம அமைச்சர் ஏதோ சொல்லிருக்காரு போல

    ReplyDelete
    Replies
    1. Avaruku ippo matum enga irundhu 4000 posting vandhuchunu avar dhan sollanum..

      Delete
    2. அந்த ஆளு தான் சொல்லி தொலைய மாட்டாரே மேடம்

      Delete
  4. கனவு கிணவு கண்டுருப்பாரு

    ReplyDelete
  5. Ano mam is that news true or this also fake????????

    ReplyDelete
    Replies
    1. Not a fake news for sure, but we need to wait till it become true..

      Delete
    2. We are waiting only madam

      Delete
  6. Avaru kanavu kanavaa nama tet pass panom

    ReplyDelete
  7. அருள் நண்பரே அமைச்சர் என்ன தான் சொல்ல விழைகிறார்

    ReplyDelete
    Replies
    1. சரவணன் அவர்களே இந்த ஆண்டின் கடைசி அறிக்கை அதனால் அதை எல்லாம் பெருசா எடுத்துக்கொள்ள கூடாது மீண்டும் புது வருடத்தில் புது அறிக்கை வரும் காத்திருக்கவும்

      Delete
    2. நீங்கள் சொல்வதும் சரி தான் நண்பரே

      Delete
  8. https://chat.whatsapp.com/JuIY6ftyeau2XhvYOBuHJo

    *💢🔴🔴🔴💢விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்*

    *♦♦அரசுப் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.*

    *⭕⭕ஈரோடு மாவட்டம், கோபியில் அவர் கூறியதாவது:*

    *♦♦அரசுப் பள்ளிகளில், காலங்காலமாக கரும்பலகையே நடைமுறையில் உள்ளது. வரும் பிப்., மாதத்துக்குள், 72 ஆயிரம் பள்ளிகளில், 'ஸ்மார்ட் போர்டு' வசதி செய்யப்பட உள்ளது. பின், 7,200 பள்ளிகளில், ஸ்மார்ட் கிளாஸ் கொண்டு வரப்படும்.மேலும், 1,000 வார்த்தைகளை கொண்டு, மாணவ - மாணவியர் சரளமாக ஆங்கிலம் பேச, வாரத்தில் ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படும்.*

    *♦♦ஒரு மாணவன், இன்னொரு மாணவனுடன் ஆங்கிலத்தில் உரையாடும் போது, அதில் தவறு இருந்தால், ஆசிரியர்கள் வழிகாட்டியாக இருந்து, பயிற்சி அளிப்பர்.*

    *♦♦பள்ளிக்கல்வித் துறையின் நலத் திட்டங்களால், அரசுப் பள்ளிகளில், மாணவர் சேர்க்கைஅதிகரித்து வருகிறது. இதுவரை, 2 லட்சம் பேர் கூடுதலாக சேர்ந்துள்ளனர்.அடுத்த கல்வியாண்டில், இது, 3 லட்சமாக உயரும்.*

    *♦♦தமிழகத்தில், 7,000 ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். சில பாடங்களுக்கு மட்டும், ஆசிரியர்கள் இல்லாதநிலை உள்ளது.*

    *♦♦விரைவில், 4,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.ஐந்தாம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ - மாணவியருக்கு, வாரத்தில் ஒரு நாள், நடனம் மற்றும் பாட்டு பயிற்சி அளிக்கப்படும். பிப்., மாதத்துக்கு மேல், தனியாரை மிஞ்சும் அளவுக்கு, அரசுப் பள்ளிகள் மேம்படுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.*

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here