Skip to main content

இந்த வருடம் விட்டு விட்டீர்கள் என்றால் அடுத்தது 2031 தான்.. மிஸ்பண்ணி விடாதீர்கள்..!!



பூமிக்கும் - சூரியனிற்கும் இடையேயான நேர்கோட்டில் சந்திரன் வரும் நேரத்தில்., சூரியன் மறைக்கப்படுகிறது. சரியாக கூற வேண்டும் என்று கூறினால்., சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வே சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சந்திரன் முழுவதுமாக மறைத்துக்கொண்டு இருந்தால் முழு சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.




சூரியனுடைய மைய பகுதியினை மட்டும் சந்திரன் மறைத்து விளிம்பு பகுதியில் வலயம் போல ஒளியானது தெரியும் வேளையில் சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு அபூர்வமான மற்றும் அற்புதமான நிகழ்வாகும். இந்த வளைய சூரிய கிரகணம் வரும் டிசம்பர் 26 ஆம் தேதியான வியாழக்கிழமை (26/12/209) அன்று ஏற்படவுள்ளது.




இந்த சூரிய கிரகணம் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்துடைய தென் பகுதியிலும்., கேரளா மாநிலத்தின் வடபகுதியில் தெரியும். இக்கிரகணத்தை தமிழ்நாட்டில் அதிகளவு பார்க்க இயலும். வரும் 26 ஆம் தேதி காலை 8 மணிமுதலாக காலை 11 மணிவரையிலும் இதனை காணலாம்.
தமிழகத்தில் குறிப்பாக கோயம்புத்தூர்., புதுக்கோட்டை., ஈரோடு., திருச்சி., நீலகிரி., திருப்பூர்., கரூர்., திண்டுக்கல்., மதுரை மற்றும் சிவகங்கை போன்ற 10 மாவட்டங்களில் முழுமையாக காண இயலும். பிற இடங்களில் பகுதி சூரிய கிரகணத்தை காண இயலும்.
இந்த சூரிய கிரகணத்தை காணுவதற்கு தமிழகத்தில் 11 இடங்கள் விஞ்ஞான் ப்ராசசர் மற்றும் அறிவியல் பலகை., கணித அறிவியல் நிறுவனம் தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மையத்தின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.





இது தொடர்பாக விஞ்ஞான அதிகாரிகள் தெரிவித்த சமயத்தில்., கடந்த 2010 ஆம் வருடத்தின் போது கன்னியாகுமரியில் பொங்கல் தினத்தன்று சூரிய கிரகணம் தெரிந்தது. அந்த நேரத்தில் பொங்கல் சூரிய கிரகணம் என்று அழைத்தோம். தற்போது இவ்வருடத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையினையொட்டி சூரிய கிரகணம் ஏற்படுவதால்., கிறிஸ்துமஸ் சூரிய கிரகணம் என்று அழைக்கிறோம்.
இக்கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது நல்லதல்ல. இதற்காக இருக்கும் பிரத்தியேக கண்ணாடியின் வழியாக காணலாம். இதற்க்காக தமிழகத்தில் முழு சூரிய கிரகணம் தெரியும் 10 இடங்களில் பார்வையிடவும்.,



தலைநகர் சென்னையில் பகுதியாக தெரிந்தாலும் அங்கும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கிரகணம் அடுத்தபடியாக ஏற்படும் 2020 ஆம் வருடத்தில் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலத்திலும்., வரும் 2031 ஆம் வருவதில் தமிழகத்தின் மதுரை மற்றும் தேனீ மாவட்டத்தில் சூரிய கிரகணத்தை காணலாம் என்று தெரிவித்தனர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...