Skip to main content

அரசின் தவறான கொள்கையால், 60,000 கணினி ஆசிரியர்கள் நிலை கேள்விக்குறி


1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 6வது பாடமாக சேர்க்கப்படுமா?

சிறப்பு செய்தி
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சமச்சீர் பாடத்திட்டத்தை உருவாக்கி, அதில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்து செயல்படுத்தினார். பின்னர் வந்த அதிமுக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கருணாநிதி கொண்டு வந்த கணினி அறிவியல் பாட புத்தகம் தவறாக உள்ளது என கூறி பல லட்சம் புத்தகங்களை வெளியில் விடாமல் அழித்தார். அதன் பிறகு தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கணினி பாடத்தை அறிவியல் பாடத்துடன் மூன்று பக்கமாக இணைத்து, வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் கடந்த 1992 முதல் 2019 வரை சுமார் 60 ஆயிரம் கணினி ஆசிரியர்கள் படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருக்கின்றனர். தமிழக அரசு, கடந்த 2014ம் ஆண்டு கணினி ஆசிரியர்களை, கணினி பயிற்றுனர்கள் என கூறி, பணியில் சேருவதற்கு இளங்கலை மட்டும் இருந்தால் போதுமானது என்றனர். ஆனால், கடந்த மார்ச் மாதம் முதுகலை படிப்பு வேண்டும் என அரசாணையை மாற்றினர். இதனால் சுமார் 30 ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
இதனால் உரிய வேலை கிடைக்காததால் கணினி படித்து முடித்துள்ள ஆசிரியர்கள் பெரும்பாலானோர் மாற்று வேலைக்கு சென்று விட்டனர். மத்திய அரசு கடந்த 2011ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்திற்கு என ரூ.900 கோடி நிதி ஒதுக்கியது. ஆனால், அந்த நிதியை கொண்டு 2019ல் தான் 7 ஆயிரம் பள்ளிகளில் ஆய்வகத்தை அமைத்தனர். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் மத்திய அரசு நிதியை கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் தனிப்பாடமாக உள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளில் கேரளா மாநிலத்தில் அரசு பள்ளிகளில் சுமார் 4.30 லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளது. ஆனால், தமிழகத்தில் கணினி அறிவியல் பாடங்களை பற்றி, அரசு பள்ளிகளில் இல்லாதால், சுமார் 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கை குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான பள்ளிகள் மூடு விழா நடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் என 5 பாடங்கள் உள்ளன. மற்ற மாநிலங்களில் கணினி பாடத்தை 6 வது பாடமாக கூடுதலாக சேர்த்துள்ளனர். அங்கு 1 முதல் 12ம் வகுப்பு வரை கணினி பாடம் இருக்கும் நிலையில், கணினி பாடத்தை தமிழ், ஆங்கிலம் பாடம் போல் கட்டாயமாக்கியுள்ளனர்.
கணினி பாடத்தில் தேர்ச்சி பெற்றால் தான் 11 ஆம் வகுப்பிற்கு செல்ல முடியும் என்ற உத்தரவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்தளவிற்கு மற்ற மாநிலங்களில் கணினி அறிவியல் பாடத்தை மாணவர்களுக்கு, அம்மாநில அரசுகள் ஊக்கப்படுத்தி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் 6 முதல் 10ம் வகுப்பு வரை கணினி பாடம் இருந்தாலும், அறிவியல் பாடப்புத்தகத்தில் மூன்று பக்கங்களை மட்டும் இணைத்துள்ளனர். அதிலும் தனியார் பள்ளிகளில் எல்கேஜி படிக்கும் மாணவர்களுக்குள்ள கணினி பாடங்கள் மட்டுமே, தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உள்ளது. மாணவன், அடிப்படை கணினி அறிவை, 10ம் வகுப்பு வரை படிக்காமல் வந்து விட்டு, 11ம் வகுப்பிற்கு செல்லும் போது, கணினியை பற்றி தெரியாததால், தேர்ச்சி பெறமுடியாத நிலை உள்ளது. இதனால் தனியார் பள்ளிகளுடன், அரசு பள்ளி மாணவர்கள் போட்டி போட முடியாமல் அரசு பள்ளி மாணவர்கள் வாழ்க்கையை இழந்து தவிக்கிறார்கள். தனியார் பள்ளிகளில், கணினி லேப் உள்பட அனைத்து வசதிகள் உள்ளதால், பெரும்பாலான பெற்றோர், தங்கள் குழந்தைகள் வருங்காலத்தில் கணினி படிப்பில் உயர வேண்டும் என தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், அரசு பள்ளிகளில் பெருமளவு சேர்க்கை குறைந்து விடுகிறது.
தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை கொண்டு வந்தாலும், கூடுதலாக கணினி பாடத்தை சேர்க்காததால், அரசு பள்ளி மாணவர்கள் மற்ற தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட சிரமப்படுகிறார்கள். கணினி படிப்பிற்காக மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்கியும், தமிழக அரசு, அந்த நிதியை உரிய முறையில் நடைமுறைப்படுத்தாமல், கிடப்பில் போட்டு வருவது, மாணவர்களின் கணினி அறிவை முடக்குவதாகும். கேரளா போன்ற மற்ற மாநிலங்களில் உள்ளது போல் 1ம் வகுப்பு முதல் கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக உருவாக்க வேண்டும். அப்போது தான் வருங்காலத்தில் வெளி மாநிலத்தோடும், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு துறைகளில் போட்டிபோட முடியும். அடிப்படை கணினி அறிவியல் பாடம் தெரிந்த ப்ளஸ் 2 படித்து முடித்த மாணவனுக்கு தமிழக அரசு வழங்கும் கணினி பயன்படும். ஆனால் கணினி அறிவியல் பற்றி தெரியாததால், பெரும்பாலான மாணவர்கள், தமிழக அரசு வழங்கும் கணினியை கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும், படம், சினிமா பாட்டுக்கள் கேட்பதற்கும் தான் பயன்படுத்துகின்றனர்.
தற்போது, தமிழக அரசு கணினி லேப் உள்ள பள்ளிகளில், கணினி ஆசிரியரை நியமிக்காமல், ஏற்கனவே உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்து கணினி பாடத்தை, மாணவர்களுக்கு வகுப்பெடுக்க முடிவு செய்துள்ளனர். இதனால் அந்த ஆசிரியருக்கு கூடுதல் பணிச்சுமையுடன், மாணவர்களுக்கு தரமான முறையில் கணினி பாடத்தை பற்றி கூற முடியாது. உலகம் முழுவதும் கணினி அறிவியல் மயமாகி, முன்னேறி வருகிறது. ஆனால், தமிழகம் மட்டும் தான் கணினியில் பின்னோக்கியுள்ளது. கணினி பாடத்தை தமிழக அரசு ஏன் ஊக்கப்படுத்துவதற்கு முயற்சி எடுக்க தயங்குகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 12ம் வகுப்பு வரை 6 வது பாடமாக கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வர வேண்டும், அனைத்து பள்ளிகளிலும் கணினி ஆசிரியரை நியமனம் செய்ய வேண்டும் என பல ஆண்டுகளாக கணினி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும், கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனுக்கள் வழங்கியும், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாததால், தமிழகத்திலுள்ள 60ஆயிரம் கணினி ஆசிரியர்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
SOURCE: www.dinakaran.com/News_Detail.asp?Nid=544620

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here