Skip to main content

TRB - உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் சிக்கல்? : பட்டதாரிகள் பதற்றம்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நியமிக்கப்பட உள்ள 2340 இடங்களுக்கு உச்சநீதி மன்ற தீர்ப்பு மற்றும் பல்கலைக் கழக மானியக் குழுவின் விதிகளை பின்பற்றாமல் நியமனம் செய்தால் ஆசிரியர் தேர்வு வாரியம் மீண்டும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2340 உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 81 பணியிடங்கள் பின்னடைவு இடங்கள். பற்றாக்குறை இடங்கள் 4, தற்போது நடைமுறையில் உள்ள இடங்கள் 2252, மாற்றுத் திறனாளிகளுக்கான இடங்கள் 3, என மொத்தம் 2340 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த இடங்களில் புதிய நபர்கள் நேரடியாக நியமிப்பதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் தனது இணைய தளத்தில் கடந்த 28ம் தேதி வெளியிட்டது. மேற்கண்ட உதவி பேராசிரியர் பணிகளுக்கு செப்டம்பர் 4ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களும் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தற்போது அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடத்துக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்க தயாராகி வருகின்றனர். ஆனால் மேற்கண்ட உதவி பேராசிரியர் நியமனங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1070 உதவிப் பேராசிரியர்களுக்கான அறிவிப்பு கடந்த 2013ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதற்கான பணி நியமனங்கள் 2015ம் ஆண்டு நடந்தது. இந்த நியமனத்தின்போது செட், நெட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் வெறும் பிஎச்டி (முனைவர் பட்டம்) கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்தவர்களுக்கு சிக்கலை உண்டாக்கும் வகையில் ஏற்கெனவே உச்சநீதி மன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் சென்னை உயர்நீதி மன்றமும் 8.11.2017ம் ஆண்டு ஒரு தீர்ப்பளித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 28ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள 2340 பணியிடங்களுக்கான அறிவிப்பிலும் மேற்கண்ட தீர்ப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கருத்தில் எடுத்துக் கொண்டுதான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சில பட்டதாரிகள் பல்கலைக் கழக மானியக்குழுவிடம் இருந்து பதில்கள் பெற்றுள்ளனர். மேலும் பல பல்கலைக் கழகங்களில் இருந்தும் பல பதில்களை பெற்றுள்ளனர். இதன்படி 2009ம் ஆண்டு ரெகுலேஷன், பிஎச்டி தொடர்பாக நீதி மன்றங்கள் அளித்த தீர்ப்புகளால் சிக்கல் எழுந்துள்ளது.

ஒவ்வொரு பல்கலைக் கழகமும்2009ம் ஆண்டு ரெகுலேஷன் பிஎச்டி பட்டப் படிப்பை, எந்த ஆண்டு அமல்படுத்தி பட்டங்களை வழங்கியுள்ளன என்றும் பதில்களை பெற்றுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள பதில்கள் மற்றும் விவரங்களால் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு சிக்கல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல காலி பணியிடங்களை நிரப்பு வதற்கான அறிவிப்பை வெளியிட்டதிலும் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதாவது, குறிப்பிட்ட பல்கலைக் கழகங்களில் 2009ம் ஆண்டு ரெகுலேஷனை அமல்படுத்துவதற்கு முன்பாக அந்த பல்கலைக் கழகங்களில் இருந்து பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் கட்டாயம் செட் அல்லது நெட் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்று கடந்த 16.3.2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஆர்டிஐ தவலின் மூலம் பெறப்பட்ட பதில்களில், சென்னைப் பல்கலைக் கழகம் 1.7.2010, சேலம் பெரியார் பல்கலைக் கழகம் 23.4.2013, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் 5.11.2009, அழகப்பா பல்கலைக் கழகம் 3.11.2011, அன்னை தெரசா பல்கலைக் கழகம் ஜூன் 2009 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தியுள்ளன என்று தெரியவருகிறது.

எனவே, மேற்குறிப்பிட்ட தேதிக்கும் முன்பாக பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் மற்றும் 2009ம் ஆண்டு ரெகுலேஷன்களை நடைமுறைப்படுத்துவதற்கு முந்திய தேதியில் பிஎச்டி பட்டம் பெற பதிவு செய்தவர்கள் கட்டாயம் செட் மற்றும் நெட்தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக் குழுவும், உச்சநீதி மன்றமும் எச்சரித்துள்ளன. இதைவிட்டு, உயர்கல்வித்துறையும், ஆசிரியர் தேர்வு வாரியமும் கடந்த முறைபோல உதவி பேராசிரியர் நியமனத்தில் விதிகளை பின்பற்றாமலும், உச்ச நீதி மன்ற தீர்ப்பை பின்பற்றாமல் நியமனம் செய்தால் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இது இது தவிர பல்கலைக் கழக அதிகாரிகளும் சிக்கலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என்று கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...