Skip to main content

யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரமின் மாத வருமானம் சுமார் ரூ.21 கோடியா?

தென் கொரியாவைச் சேர்ந்த யூ டியூப் நட்சத்திரமான 6 வயது சிறுமி போரம் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என்றும், சியோலில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடும் வாங்கியுள்ளார்.

தென் கொரியாவைச் சேர்ந்த ஆறு வயது யூ டியூப் நட்சத்திரம் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. ஒரு சேனலில், உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மதிப்பாய்வு கூறுவதுதான் இவருடைய பணி. அதற்காக 13.6 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளார். மற்றொன்று 17.6 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட வலைப்பதிவு.

குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு மழலை வார்த்தைகளால் இவர் கூறும் ரிவ்யூவை கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.

இவர் அனைவரது மனதிலும் யூ டியூப் நட்சத்திரமாகவே வளம் வருகிறார்.

இந்த சேனல்கள் மூலம் தென் கொரியாவில் மிகவும் பிரபலமான போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமானவர்கள். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.

இவரது பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு (8 மில்லியன் டாலர்) 5 அடுக்கு மாடிகள் கொண்ட வீடு ஒன்றையும் போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர்.

யூ டியூப் நட்சத்திரமான போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும், அபார வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

இதில், போரமின் சேனலை 31 மில்லியன் சந்தாதாரர்களையும், ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளது. அவர்கள் அனைவரும் ஆக்டிவில் உள்ளனர். இதனால் போரமின் மாத வருமானம் 3.1 மில்லியன் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.21 கோடி) என குறிப்பிட்டுள்ளனர்.

'சமையல் பொரோரோ பிளாக் நூடுல்' (Cooking Pororo Black Noodle) என்பது போரமின் முக்கியமான வீடியோக்களில் ஒன்றாகும், இது யூ டியூபில் மிகவும் பிரபலமாக உள்ளது, ஏனெனில் இது 376 மில்லியன் தடவைகளுக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...