சென்னை, பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள, வட்டார கல்வி அதிகாரி இடங்களை நிரப்பும் விதிகள் மாற்றப்பட்டுள்ளன.தமிழக பள்ளி கல்வி துறையில், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு கீழ், வட்டார கல்வி அதிகாரிகள் பணியாற்றுகின்றனர். மாநிலம் முழுவதும், 60க்கும் மேற்பட்ட வட்டார கல்வி அதிகாரிகள் பணியிடங்கள் காலியாக உள்ளதாக, பள்ளி கல்வி துறை பட்டியல் எடுத்துள்ளது.இந்த இடங்களில், 50 சதவீதத்தை, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழியாகவும், மற்ற இடங்களை, ஆசிரியர் தேர்வு வாரிய போட்டி தேர்வு வழியாகவும் நிரப்ப, பள்ளி கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் உத்தரவிட்டுள்ளார்.ஏற்கனவே, இந்த பணியிடங்கள், 70 சதவீதம் பதவி உயர்வு வழியாக, நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், தற்போதைய உத்தரவால் இனி, பதவி உயர்வுக்கான வாய்ப்புகள், 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment