சென்னை, :தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அனைத்து பொது தேர்வுகளும்
நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதமாக நடந்த தேர்வின், விடை தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தமிழக பள்ளிக்கல்வி பாட திட்டத்தில், ௧௦ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான பொது தேர்வுகள், 2018, ஜூனில் அறிவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி, மார்ச், 1ல் தேர்வுகள் துவங்கின.பிளஸ் 2 தேர்வுகள், மார்ச், 1ல் துவங்கி, மார்ச், 19ல் முடிந்தன. பிளஸ் 1 தேர்வுகள், மார்ச், 6ல் துவங்கி, மார்ச், 22ல் முடிந்தன. பத்தாம் வகுப்பு தேர்வுகள், மார்ச், 14ல் துவங்கி, நேற்றுடன் முடிந்தன. ஒரு மாதம் நடத்தப்பட்ட பொது தேர்வுகள், எந்த குளறுபடியும் இன்றி, வினாத்தாள், 'லீக்' ஆகாமல், முடிந்துள்ளன.பிளஸ் 2 வினா தாள்கள் எளிதாக இருந்தன. ஆனால், பிளஸ் 1 தேர்வுகளில், கடின வினாக்களால் மாணவர்கள் திணறினர். பத்தாம் வகுப்பு தேர்வில், எப்போதும் இல்லாத அளவுக்கு, கணிதம், அறிவியல் தேர்வுகள் மிக கடினமாக இருந்தன. மற்ற பாடங்கள் எளிதாக இருந்தன.இந்த தேர்வுகளுக்கான விடை தாள் திருத்தம், படிப்படியாக துவங்க உள்ளது. முதலில், பிளஸ் 2 விடைத் தாள் திருத்தம், நேற்று துவங்கியது.தேர்வு முடிவுகள், பிளஸ் 2வுக்கு, ஏப்.,19; பிளஸ் 1க்கு, மே, 8; பத்தாம் வகுப்புக்கு, ஏப்., 29ம் தேதிகளில் வெளியாகும் என, தேர்வு துறை அறிவித்துள்ளது.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment