Skip to main content

பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா








புதுக்கோட்டை,மார்ச்.29: பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நிறைவேற்றியதால் அப்பள்ளி ஆசிரியர்களும் ,குழந்தைகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோர்களுக்கான அரசுப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 43 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா சென்றுள்ளார்.அப்பொழுது அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளார் .அப்பொழுது அக்குழந்தைகள் தாங்கள் கல்வி கற்க ஏதுவாக கணினி வாங்கி கொடுங்கள் அம்மா என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.உடனே அவர்களது கோரிக்கையை ஏற்று இன்று அக்குழந்தைகளுக்கு தன் சொந்த பணத்தில் கணினி வாங்கி கொடுத்ததோடு  மட்டுமல்லாமல் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.பின்னர் சிறிது நேரம் அவர் கணினி வழிக் கல்வி கற்கும் முறை குறித்து  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: நாம் அனைவரும்  நமக்கு பார்வை இருப்பதால் இந்த உலகத்தை பார்த்து வருகிறோம்.ஆனால் பார்வை இல்லாத குழந்தைகள் பார்வை இல்லாமலேயே இந்த உலகத்தை பார்த்து வருகிறார்கள் .ஒரு முறை இங்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துரையாடும் போது அக்குழந்தைகள் என்னிடம் கணினி வேண்டும் என கேட்டனர்.அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று கணினி வாங்கி வந்து கொடுத்துள்ளேன்...தற்பொழுது எனக்கு அவர்கள் ஆசையை நிறைவேற்றியதை நினைக்கும் பொழுது என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார்.

பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் கூறியதாவது: பார்வை உள்ளவர்கள் பார்வை அற்றவர்களோடு தொடர்பு கொள்ள உதவும் மிகப்பெரிய சாதனம் கணினி.எம் பள்ளியில் பார்வையற்ற குழந்தைகளுக்கு இடைநிலைக் கல்வி திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது்.எனவே இப்பயிற்சிக்கு தேவைப்படும் கணினி ஒன்றை எம் குழந்தைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களிடம் கேட்டிருந்தார்கள்.அவர்களும் மனமுவந்து வந்து எங்களுக்கு வாங்கி தந்து மாணவர்களுடைய நலனில் பெரிதும் அக்கறை கொண்ட நிகழ்வை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார்.

பார்வையற்ற 7 ஆம் வகுப்பு  மாணவன்  ஹரிஹரன் கூறியதாவது: ஒரு முறை எங்கள் பள்ளிக்கு சி.இ.ஓ அம்மா வந்தாங்க.நாங்கள் ஏற்கனவே பழுதான கம்யூட்டரை சரிபார்த்து தான் கணினி கற்று வந்தோம்.அதனால் சி.இ.ஓ  அம்மாவிடம் கணினி கேட்டோம்.அவர்களும் எங்களுக்கு இப்போ புது கம்யூட்டர் வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வழங்கி உங்களோடு பேசியதை நினைக்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அவர்களுக்கு பார்வையற்ற குழந்தைகள் சார்பில் நன்றி என்றான்.


நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,தலைமை ஆசிரியை விசித்ரா,ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...