Skip to main content

பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை நிறைவேற்றிய புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா








புதுக்கோட்டை,மார்ச்.29: பார்வையற்ற குழந்தைகளின் விருப்பத்தை புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா நிறைவேற்றியதால் அப்பள்ளி ஆசிரியர்களும் ,குழந்தைகளும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 புதுக்கோட்டையில் பார்வைத்திறன் குறையுடையோர்களுக்கான அரசுப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் மொத்தம் 43 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா சென்றுள்ளார்.அப்பொழுது அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடி உள்ளார் .அப்பொழுது அக்குழந்தைகள் தாங்கள் கல்வி கற்க ஏதுவாக கணினி வாங்கி கொடுங்கள் அம்மா என கோரிக்கை விடுத்துள்ளார்கள்.உடனே அவர்களது கோரிக்கையை ஏற்று இன்று அக்குழந்தைகளுக்கு தன் சொந்த பணத்தில் கணினி வாங்கி கொடுத்ததோடு  மட்டுமல்லாமல் அக்குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கியும் அவர்களோடு சிறிது நேரம் கலந்துரையாடினார்.பின்னர் சிறிது நேரம் அவர் கணினி வழிக் கல்வி கற்கும் முறை குறித்து  ஆசிரியர்களிடமும் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டார். 

இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: நாம் அனைவரும்  நமக்கு பார்வை இருப்பதால் இந்த உலகத்தை பார்த்து வருகிறோம்.ஆனால் பார்வை இல்லாத குழந்தைகள் பார்வை இல்லாமலேயே இந்த உலகத்தை பார்த்து வருகிறார்கள் .ஒரு முறை இங்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்துரையாடும் போது அக்குழந்தைகள் என்னிடம் கணினி வேண்டும் என கேட்டனர்.அவர்களது ஆசையை நிறைவேற்றும் வகையில் இன்று கணினி வாங்கி வந்து கொடுத்துள்ளேன்...தற்பொழுது எனக்கு அவர்கள் ஆசையை நிறைவேற்றியதை நினைக்கும் பொழுது என் மனம் மகிழ்வாக உள்ளது என்றார்.

பள்ளியின் ஆசிரியர் சரவண மணிகண்டன் கூறியதாவது: பார்வை உள்ளவர்கள் பார்வை அற்றவர்களோடு தொடர்பு கொள்ள உதவும் மிகப்பெரிய சாதனம் கணினி.எம் பள்ளியில் பார்வையற்ற குழந்தைகளுக்கு இடைநிலைக் கல்வி திட்டத்தில் 6 ஆம் வகுப்பு முதல் கணினி பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது்.எனவே இப்பயிற்சிக்கு தேவைப்படும் கணினி ஒன்றை எம் குழந்தைகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா அவர்களிடம் கேட்டிருந்தார்கள்.அவர்களும் மனமுவந்து வந்து எங்களுக்கு வாங்கி தந்து மாணவர்களுடைய நலனில் பெரிதும் அக்கறை கொண்ட நிகழ்வை நினைக்கும் பொழுது பெருமையாக உள்ளது என்றார்.

பார்வையற்ற 7 ஆம் வகுப்பு  மாணவன்  ஹரிஹரன் கூறியதாவது: ஒரு முறை எங்கள் பள்ளிக்கு சி.இ.ஓ அம்மா வந்தாங்க.நாங்கள் ஏற்கனவே பழுதான கம்யூட்டரை சரிபார்த்து தான் கணினி கற்று வந்தோம்.அதனால் சி.இ.ஓ  அம்மாவிடம் கணினி கேட்டோம்.அவர்களும் எங்களுக்கு இப்போ புது கம்யூட்டர் வாங்கி கொடுத்ததோடு மட்டுமல்லாமல் இனிப்புகள் வழங்கி உங்களோடு பேசியதை நினைக்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அவர்களுக்கு பார்வையற்ற குழந்தைகள் சார்பில் நன்றி என்றான்.


நிகழ்வின் போது மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு,தலைமை ஆசிரியை விசித்ரா,ஆசிரியர் பாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Comments

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...