கோபிசெட்டிபாளையம், ''தேர்தல் முடிந்து, பள்ளி துவங்கியதும், தமிழகத்தில் ஆங்கில
பள்ளி கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், கோபியில் நேற்று பேசினார்.ஈரோடு மாவட்டம், கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அமைச்சர், செங்கோட்டையன் நேற்று பிரசாரம் செய்தார்.அப்போது அவர்பேசியதாவது:எட்டு முதல், 10 வகுப்புக்கும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் முடித்து செல்லும், 28 லட்சம் மாணவ - மாணவியருக்கு, ஜூன்.,15க்குள் லேப்டாப் வழங்கப்படும். தேர்தல் முடிந்து, பள்ளிகள் துவங்கியதும், தமிழகத்தில், ஆங்கில பள்ளியும் கொண்டு வரப்படும்.இவ்வாறு, அவர்பேசினார்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment