Skip to main content

ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் ஒருங் கிணைந்த 4 ஆண்டு கால பிஎஸ்சி.பிஎட் படிப்புக்கான நுழைவுத்தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்கு ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடியில் அமைந்துள்ளது. இங்கு,பிளஸ் 2 முடித்தவர்கள்நேரடியாக சேரும் வகையில் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த எம்எஸ்சி (வேதியியல், கணிதம், வாழ்வியல், இயற்பியல்) மற்றும் எம்ஏ (பொருளாதாரம்) படிப்புகளும், கணிதத்தில் 5 ஆண்டு கால பிஎஸ்சி, பிஎட்படிப்பு உட்பட பல்வேறு படிப்புகளும் வழங்கப்படுகின்றன. ஒருங்கிணைந்த முதுகலை படிப்பில் தலா 30 பேரும், பிஎஸ்சி.பிஎட் படிப்பில் 5 பேரும் சேர்க்கப்படுகிறார்கள்.
4 ஆண்டுகளில்...

இங்கு வழங்கப்படும் படிப்புகளில் பிஎஸ்சி,.பிஎட். படிப்பு முக்கியமானதாக கருதப்படுகிறது. சாதாரணமாக பிஎஸ்சி கணிதம் முடித்துவிட்டு பிஎட் படித்தால் 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பை 4 ஆண்டுகளில் முடித்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர் பணியில் சேர விரும்பும் பிளஸ் 2 மாணவர்களுக்கு இப்படிப்பு ஒரு வரப்பிரசாதமாக அமையும். 12-ம்வகுப்பில் கணிதம், இயற்பியல்,வேதியியல் பாடங்களை படித்தவர்கள் இந்த படிப்பில் சேரலாம். ஒருங்கிணைந்த படிப்புகள் உட்பட இப் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.மே 25, 26-ம் தேதிகளில்அந்த வகையில், தற்போது 2019-2020-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. நுழைவுத்தேர்வு மே 25 மற்றும் 26-ம் தேதிகளில் நடைபெற உள்ளது.தேர்வு முடிவுகள் ஜூன் 21-ம் தேதி அன்று வெளியிடப்படும். ஒருங்கிணைந்த எம்எஸ்சி மற்றும் எம்ஏ படிப்புகள், ஒருங்கிணைந்த பிஎஸ்சி.பிஎட் படிப்பு உள்ளிட்ட இதர படிப்புகளில் சேர விரும்புவோர் ஏப்ரல் 13-ம் தேதிக்குள் ஆன்லைனில் (www.cucetexam.in) விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மத்தியபல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இப்பல்கலைக்கழகத்தில் வழங் கப்படும் பல்வேறு படிப்புகள் குறித்த விவரங்களை www.cutn.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
மேலும், மாணவர் சேர்க்கை தொடர்பான சந்தேகங்களுக்கு 04366 - 277337, 277261 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டும் விளக்கம் பெறலாம்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

நீங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற்று விட்டீர்களா என்பதை கண்டுபிடிக்க ஒரு சுலபமான வழிமுறை..

ஒரு பேனாவையும் பேப்பரையும் எடுத்துக்கொள்ளுங்கள். கேட்கிற ஐந்து கேள்விக்கு உடனே பதில் கிடைத்தால் அதுல பதிலை எழுதுங்க. ரொம்ப நேரம் எடுத்துக்கக்கூடாது. ரொம்ப மண்டையை போட்டு பிச்சுக்கக்கூடாது. உங்களால முடியலேன்னா அடுத்த கேள்விக்கு உடனே போயிடுங்க. அதுவும் முடியலியா…. படிச்சிகிட்டே போங்க…. ரெடியா..... 1. உலகத்திலேயே மிகப் பெரிய பணக்காரர்கள் ஒரு ஐந்து பேரை சொல்லுங்க பார்க்கலாம்.. 2. 2004 மற்றும் 2009 பாராளுமன்ற தேர்தல்ல பிரபல தலைவர்களை தோற்கடித்தவர்களில் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… 3. சர்வதேச அளவில் நடக்குற அழகிப் போட்டிகளில் ஜெயிச்ச இந்திய பெண்கள் ஒரு நாலு பேர் பெயரை சொல்லுங்க…. 4. நோபல் பரிசு வாங்கிய உங்களுக்கு தெரிந்த ஒரு பத்து பேர் பெயரை சொல்லுங்க….. 5. கடைசியா ஆஸ்கார் அவார்ட் வாங்கிய ஐந்து நடிகர் மற்றும் நடிகைகள் பெயரை சொல்லுங்க பார்க்கலாம்… உங்கள் பதில் உங்களுக்கே திருப்தியா இருந்ததா? இல்லே தானே? நாம் யாருக்குமே கடந்த காலத்தின் தலைப்பு செய்திகளோ அல்லது தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தவர்களோ நினைவில் இருப்பதில்லை. இத்தனைக்கும் இவங்கள...