Skip to main content

கன்றுக்குட்டி..

ஒரு செல்வந்தர் வீட்டில் நடந்த திருமணத்தை நடத்தி வைக்க அந்தணர் வந்தார்.._

_அந்த வீட்டில் நிறைய கன்றுகுட்டிகள் இருந்தன.._

_*அதில் ஒரு கன்றை எனக்குத் தாருங்கள்.. அதை வளர்த்து, பால் கறக்கும் பருவத்தில், கடவுளின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தி கொள்கிறேன்..*_ _என்று செல்வந்தரிடம் கேட்டார்.._

_அவரும் கொடுத்து விட்டார்.._

_மிகச்சிறிய அந்தக் கன்று, தன் ஊர் வரை நடந்து வர சிரமப்படும் என்று இரக்கப்பட்ட அந்தணர், அதை தோளில் சுமந்தபடி நடந்தார்.._

_வழியில் மூன்று திருடர்கள் வந்தனர்.._

_கன்றைப் பறிக்க எண்ணிய அவர்கள் ஒரு ஓரமாகப் பதுங்கினர்.._

_முதலில் ஒருவன் வெளியே வந்து.._ _*சாமி! யாராவது பன்றிக்குட்டியைச் சுமப்பார்களா..? நீங்கள் சுமக்கிறீர்களே..?*_ _என்று கேட்டான்.._

_*மடையா..! மடையா..! இந்த கன்றுகுட்டியாடா..! பக்கத்து ஊர் செல்வந்தர் எனக்கு பரிசாகக் கொடுத்தார்..*_ _என்றதும் அவன் போய்விட்டான்.._

_அடுத்தவன் வந்தான்.._
_*யாராவது பன்றிக்குட்டியை சுமப்பார்களா..? நீர் சுமக்கிறீரே..?*_ _என்றதும், அவனுக்கும் தகுந்த பதிலை சொன்னார் அந்தணர்.._

_மூன்றாமவன் வந்தான்.._
_*சாமி..! நீர் தான் இறைச்சி சாப்பிடமாட்டீரே..! பிறகேன், பன்றிக்குட்டியை சுமந்து செல்கிறீர்..?*_ என்றான்..

_அந்தணருக்கு பயம் வந்து விட்டது.._ _அந்த செல்வந்தர் கருமி போலும்..! என்னை ஏமாற்ற ஏதோ ஒரு பன்றியை மந்திரம்வைத்து கன்றுபோல மாற்றி தந்து விட்டார் என நினைக்கிறேன்.. உண்மையிலேயே இது பன்றிக்குட்டியாகத்தான் இருக்கும்.. என் கண்ணில் மட்டும் கன்றுக்குட்டி போல தெரிகிறது.. யாருமே இதைக் கன்று எனச் சொல்லவில்லையே என நடுங்கியவர், கன்றைகீழே இறக்கி விட்டுச் சென்றார்.._

_அதன்பிறகு.. திருடர்கள் எளிதாகத் கன்றுக்குட்டியை தூக்கிச் சென்று விட்டனர்.._

👇
*மற்றவர்கள் கூறுகிறார்கள் என்பதற்காக.. நாம், நமது நல்ல முடிவுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமே  இல்லை..*

*நம் முடிவில், நாம் உறுதியாக இருக்க வேண்டும்..*

*சுயபுத்தி தான் மனிதனுக்கு மிக முக்கியம்..*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Friends..

    PG exam kandippa varumam, feb kulla notification vandhu may la exam vara chances irukam, so those who are preparing, go ahead confidently..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...