சென்னை: தமிழக அரசு அருங்காட்சியகங்களில், விரைவில், நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக தொல்லியல் துறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மற்றும் அகழாய்வு களை செய்து வருகிறது.
அப்போது, கண்டுபிடிக்கும் தொல்பொருட்களை பற்றி, ஒப்பீட்டாய்வு அடிப்படையில், ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடுகின்றன.அவை, சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஆய்வாளர் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், &'மாவட்டங்களில் உள்ள, அருங்காட்சியகங்களில், அந்த நுால்களை வைக்க வேண்டும்&' என, ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்த செய்தி, நமது நாளிதழிலும் வெளியானது.இந்நிலையில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, &'மாவட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் அகழ் வைப்பகங்களில், நுாலகங்கள் அமைக்கப்படும். &'நுாலகம் அமைக்க, எட்டு லட்சம் ரூபாயும், நுால்கள் வாங்கி பராமரிக்க, இரண்டு லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படும்&' என, தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், 14 அகழ் வைப்பகங்களில், வரலாற்று நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இவற்றில், தமிழக தொல்லியல் துறையின் நுால்கள் இடம்பெறும் எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை, வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்று உள்ளனர்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment