சென்னை: தமிழக அரசு அருங்காட்சியகங்களில், விரைவில், நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளன.தமிழக தொல்லியல் துறை, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மற்றும் அகழாய்வு களை செய்து வருகிறது.
அப்போது, கண்டுபிடிக்கும் தொல்பொருட்களை பற்றி, ஒப்பீட்டாய்வு அடிப்படையில், ஆய்வறிக்கைகள் தயாரிக்கப்பட்டு, புத்தகங்களாக வெளியிடுகின்றன.அவை, சென்னை, எழும்பூர், தமிழ் வளர்ச்சி வளாகத்தில் உள்ள, தொல்லியல் துறை நுாலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை, ஆய்வாளர் கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், &'மாவட்டங்களில் உள்ள, அருங்காட்சியகங்களில், அந்த நுால்களை வைக்க வேண்டும்&' என, ஆய்வாளர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்த செய்தி, நமது நாளிதழிலும் வெளியானது.இந்நிலையில், தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், சட்டசபையில், மானியக் கோரிக்கையின் போது, &'மாவட்ட அருங்காட்சியகங்கள் மற்றும் அகழ் வைப்பகங்களில், நுாலகங்கள் அமைக்கப்படும். &'நுாலகம் அமைக்க, எட்டு லட்சம் ரூபாயும், நுால்கள் வாங்கி பராமரிக்க, இரண்டு லட்சம் ரூபாயும் ஒதுக்கப்படும்&' என, தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதிக்குள், 14 அகழ் வைப்பகங்களில், வரலாற்று நுாலகங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், இவற்றில், தமிழக தொல்லியல் துறையின் நுால்கள் இடம்பெறும் எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை, வரலாற்று ஆய்வாளர்கள் வரவேற்று உள்ளனர்.
"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!! "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்....., "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே..., " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது"....., " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...
Comments
Post a Comment