Skip to main content

பள்ளிகளில் மாணவர்களின் உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கலாமே.... சுறுசுறுப்பு குறைந்து மனநிலை மாறுவதால்...

விருதுநகர் மாவட்டத்தில், பெரும்பாலான பள்ளிகளில் உடற்கல்விக்கு முக்கியத்துவம்கொடுக்காததால், மாணவர்கள் இறுக்கமான மனநிலையில், சுறுசுறுப்பு குறைந்துவருவதால், உடற்கல்வி வகுப்பில், பல்வேறு விளையாட்டுகளை கற்றுத்தர ஆசிரியர்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இட நெருக்கடியில் இயங்குகின்றன.மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும், பள்ளியின் தரத்தைஉயர்த்துவதிலும் குறிக்கோளாக இருப்பர்.பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம் இருப்பதில்லை. இருந்தாலும் அவற்றை பராமரிப்பது கிடையாது. உடற்கல்விஆசிரியர் இருப்பர். கற்றுத்தர முன்வருவதில்லை. உடற்கல்வி வகுப்பில் ஏதாவது ஒருபாடத்தை நடத்துவர். எப்போதும் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி கூடுதல் சுமைகளை திணிக்கின்றனர்.இதனால் வாட்டி வதைக்கப்படும் மாணவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.மாணவப் பருவத்தில் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.அறிவு வளர்ச்சிக்கு கல்வி, உடல் ஆரோக்கியத்திற்கு உடற்பயிற்சி கட்டாயம் தேவை. தற்போது,போட்டி மனப்பாண்மையால் படிப்பில் அதிக கவனம் செலுத்தி, கூடுதல் மதிப்பெண்கள்எடுத்தால்தான் சிறந்த மாணவர்கள் என பாராட்டுகின்றனர். உடல் ரீதியாகபாதிக்கப்படுவார்கள் என்பதை பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.சுறுசுறுப்பில்லாமல் தவிக்கும் மாணவர்கள் சிறிது துாரம்கூட நடக்க முடியவில்லை. பள்ளியில்தான்இந்த கொடுமை என்றால் வீட்டிற்கு வந்தாலும் டியூசனுக்கு அனுப்பி வதைப்பதால், உடல் ரீதியாக பாதிக்கின்றனர்.விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு யோகாவிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. விளையாட்டுடன் யோகாவும் கற்றுத்தரஉரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.சிவக்குமார், காரியாபட்டி: பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டு மைதானம்நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டது. இடமதிப்பு கூடுதல் காரணமாக,நன்கொடையாளர்கள் குறைந்துவிட்டனர். தற்போது,நுாறு சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என மாணவர்களை விளையாட அனுப்புவதில்லை. தற்போதையமாணவர்கள் சுறுசுறுப்பில்லாமல் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். உடற்கல்விக்காக வாங்கப்பட்ட உபகரணங்கள்பெரும்பாலான பள்ளிகளில் பயன்பாடற்று கிடக்கின்றன. கல்வி மட்டும் முக்கியமல்ல, உடல்ஆரோக்கியமும் முக்கியம் என்பதை உணர வேண்டும். சிறு வயது முதிர்வை தவிர்க்க, உடற்பயிற்சி அவசியம்என்பதை உணர்ந்து அனைத்து பள்ளிகளிலும் விளையாட்டு மைதானங்களைசீர் செய்து, மைதானம் இல்லாத பள்ளிகளுக்கு மைதானம் ஏற்படுத்தி, உடற்பயிற்சி கற்றுத்தர கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here