கடின வினாத்தாள் காரணமாக, பிளஸ் 1 பொது தேர்வில், 40 சதவீத மாணவர்கள், &'ஜஸ்ட் பாஸ்&' என்ற, தேர்ச்சிக்கான மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாடத்திட்டத்தில், இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வில், பெரும்பாலான வினாக்கள், நீட், ஜே.இ.இ., போன்ற நுழைவு தேர்வுகளின் வினாக்களை போல், நுண்ணறிவை ஆய்வு செய்யும் வகையில் இடம் பெற்றன. அதனால், பெரும்பாலான மாணவர்கள் விடை எழுத திணறினர்.
இந்நிலையில், பிளஸ் 1 தேர்வுக்கான, மொழிப்பாடத்துக்கு, ஒரு வாரத்திற்கு முன்பும், முக்கிய பாடங்களுக்கு, நேற்று முன்தினமும், விடைத்தாள் திருத்தம் துவங்கியது. இந்த விடைத்தாள் திருத்தத்தில், பெரும்பாலான மாணவர்கள், தேர்ச்சி மதிப்பெண் மட்டுமே பெற முடியும் என, தகவல்கள் வெளியாகிஉள்ளன. விடைத்தாள் திருத்தத்திற்கான, விடைக்குறிப்பில், அரசு தேர்வுத்துறை பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.ஒவ்வொரு கேள்வியிலும், சில குறிப்பிட்ட விடை அம்சம் இருந்தால் மட்டுமே, மதிப்பெண் வழங்க வேண்டும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது.
அதனால், &'சென்டம்&' என்ற, 100க்கு, 100 முழு மதிப்பெண்கள் பெறும் மாணவர் எண்ணிக்கை, பெருமளவு குறையும் என, கூறப்படுகிறது.&'தமிழ் வழி மாணவர்களில், 40 சதவீதம் பேருக்கு, தேர்ச்சி மதிப்பெண் குறைகிறது; 40 சதவீதம் பேர், &'ஜஸ்ட் பாஸ்&' மதிப்பெண் மட்டுமே பெறுகின்றனர்; 20 சதவீதம் பேர் மட்டுமே, 70 சதவீதம் வரை மதிப்பெண் பெறுவர்&' என, விடைத்தாளை திருத்தும் ஆசிரியர்கள், அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறுகையில், &'இந்த ஆண்டு, பிளஸ் 1 வினாத்தாள் முறையை மாற்றியதால், வெறும் மனப்பாட கல்வி முறைக்கு, முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.&'நுண்ணறிவுடன், பாடங்களை புரிந்து படித்த மாணவர்கள் மட்டுமே, தேர்வில் அதிக மதிப்பெண் பெற வழி ஏற்பட்டுள்ளது. ஆனாலும், அரசு எதிர்பார்க்கும் தேர்ச்சி சதவீதம் குறையாது&' என்றனர்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
அரசு எதிர்பார்க்கும் தேர்ச்சி சதவீதம் குறையாதா ?? அடப்பாவிகளா இப்போ வரைக்கும் நா திருத்துன 20 பேப்பர்ல 6பேர் fail.. 4 பேருக்கு தர்ம பாஸ் போட்ருக்கேன்.. meethi10 பேர்ல 4 பேர் தான் 25கு மேல.. அப்புறம் எப்படி பாஸ் percentage increase ஆகும்.. ஒரு வேலை மார்க் என்ட்ரில பாஸ் போட்டுட்டு % increase ஆனதா காட்டுவானுங்கனு நெனைக்கிறேன்..
ReplyDelete