திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை முகாம் அலுவலர்களாக நியமித்தால், பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது.
மாநில தலைவர் மணிவாசகம் கூறியதாவது: வழிகாட்டு முறைப்படி இருப்பிடத்தில் இருந்து 20 கி.மீ., தூ ரத்திற்குள்தான் தேர்வு பணி வழங்க வேண்டும். ஆனால் 50 முதல் 60 கி.மீ., சுற்றளவில் பணி வழங்குகின்றனர்.
விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பட்டதாரி ஆசிரியராக இருந்து மாவட்ட கல்வி அதிகாரியானவர்களை, முகாம் அலுவலர்களாக நியமிக்க கூடாது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால், அந்த முகாம் பணியை புறக்கணிப்போம்.
விடைத்தாள் திருத்தல், தேர்வறை பணிக்கு ஊதிய உயர்வு அளித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும், என்றார். மாநில பொது செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன், மாவட்ட தலைவர் சலேத்ராஜா பங்கேற்றனர்.
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...
Comments
Post a Comment