மதுரை: ’அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தேர்வை ரத்து செய்த, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பு செல்லாது’ என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை இளமதி தாக்கல் செய்த மனு: நான், எம்.எஸ்.சி., - பி.எட்., மற்றும், எம்.பில்., படித்துள்ளேன். அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், விரிவுரையாளர் பணிக்கு, 2017 ஜூலை, 28ல் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. நான் விண்ணப்பித்து, 2017 செப்., 16ல் நடந்த தேர்வில் பங்கேற்றேன். விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியில், தனியார் ஏஜன்சி ஈடுபட்டது.
இதில், 200 பேரின் விடைத்தாள்களில், தவறான பதில்களுக்கு மதிப்பெண் வழங்கி, முறைகேடு நடந்தது தெரிந்தது. இதனால், தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவதாக, பிப்., 9ல்,டி.ஆர்.பி., அறிவித்தது.மொத்தம், ஒரு லட்சத்து, 33 ஆயிரத்து, 567 பேர் தேர்வு எழுதியுள்ளனர். 200 பேர் முறைகேட்டில் ஈடுபட்டதற்காக, ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்தது ஏற்புடையதல்ல.
இதற்காக, தேர்வு எழுதிய அனைவரும் பொறுப்பேற்க முடியாது.தேர்வு ரத்தால், எங்களைப் போன்றவர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். ஏற்கனவே நடந்த தேர்வு அடிப்படையில், எனக்கு பணி நியமனம் வழங்க வேண்டும். தேர்வை ரத்து செய்து, புதிதாக தேர்வு நடத்துவது என்ற, டி.ஆர்.பி.,யின் அறிவிப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும். அந்த அறிவிப்பை ரத்துசெய்ய வேண்டும். இவ்வாறு இளமதி மனு செய்திருந்தார்.
இதுபோல் மேலும் ஒரு மனு தாக்கலானது.நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார்.அரசு வழக்கறிஞர், ’விடைத்தாள் மதிப்பீட்டில், முறைகேடு தொடர்பாக, போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.’யார், யார் முறைகேட்டில் ஈடுபட்டனர் என்பது, இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இந்நிலையில், தேர்வை ரத்து செய்து மீண்டும் நடந்த, டி.ஆர்.பி., முடிவு செய்தது’ என்றார்.
நீதிபதி உத்தரவு: முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார், யார் என்பது தெளிவாகும் வரை காத்திருப்பதா; அனைத்து விடைத்தாள்களையும் மறு மதிப்பீடு செய்வதா; முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தவிர மற்றவர்களைதனியாக பிரித்து, விடைத்தாள்களைமறுமதிப்பீடு செய்து, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைப்பதா என்பது குறித்து, டி.ஆர்.பி., முடிவெடுக்க வேண்டும்.
அவசர கதியில் தேர்வை ரத்து செய்து, மறு தேர்வு நடத்துவது என்ற அறிவிப்பை வெளியிட்டது ஏற்புடையதல்ல.தேர்வை ரத்து செய்த, டி.ஆர்.பி., தலைவரின் உத்தரவை ரத்து செய்கிறேன்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment