Skip to main content

சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 9 நாட்களில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது.

இந்தியாவை போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் நமக்கு முன்னதாக, 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது. 1960 தொடக்கத்தில் அங்கு ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சி உருவானது. ஆசாத் கடும் அடக்குமுறையை கையாண்டார். ஆட்சிக்கு எதிரான கலகக்குரல்கள்இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன.

சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஆசாத்தோ ஷியா பிரிவை சேர்ந்தவர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி இனத்தினர் இருந்தனர். 1998இல் ஆசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆசாத்தின் மூத்த மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

ஆனால் பதவி ஏற்க சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஆசாத் 2000ல் மரணம் அடைந்தார். மகன் பஷர் அல் ஆசாத் வசம் ஆட்சி வந்தது. படித்தவர் என்றாலும் அவருக்கு ஆட்சி குறித்து எதுவும் தெரியாது. இந்த நிலையில் சன்னி - ஷியா பிரச்னை உலகம் முழுவதும் பெரிய அளவில் உருவானதுந. இரண்டாம் கட்ட இடத்தில் இருந்த சன்னி அகற்றப்பட்டனர்.

பஷர் ஆசாத்தின் 18 ஆண்டு ஆட்சி முழுவதும் ரத்தக்களரியாகத்தான் உள்ளது. வேலை இல்லை. சரியான மருத்துவம் இல்லை. உணவு இல்லை. இதை எதிர்த்துதான் போர் தொடங்கியது.ரஷ்யா மற்றும் சில நாடுகள் அதிபருக்கு உதவியாகவும் துபாய் போன்ற நாடுகள் போராளி குழுக்களுக்கு உதவியாகவும் இருக்கிறது. இந்த போரில் இதுவரை 4,91,369 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பஷர் அல் ஆசாத் பிறந்த ஊரில் இப்போது போர் உச்சத்தில் உள்ளது.

5 மணி நேர போர் நிறுத்தம் : கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு குவாட்டாவில் கண்மூடித்தனமான தாக்குதலை அரசு நடத்தியுள்ளது. கடந்த 9 நாட்களாக நடந்து வரும் தாக்குதல்களில் இதுவரை சுமார் 700 பேர் உயிரிழந்துள்ளனர். ரசாயன தாக்குதலில் 170க்கும் மேற்பட்டவர்கள், குழந்தைகள் பலியாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்கு அடியில் மறைந்து சிறுவர்கள் தங்களை காப்பாற்றக்கோரி கூக்குரலிடும் காட்சிகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கண்ணீரை வரவழைக்கின்றன. உலகம் முழுவதும் இருந்து கண்டனக்குரல்கள் எழுந்ததையடுத்து தினமும் 5 மணி நேர போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். ஆனால் போர் நிறுத்தம் செய்யப்படவில்லை என ஐ.நா. சபை தெரிவித்து உள்ளது.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here