Skip to main content

பிளஸ் 1 மார்க் சேர்ப்பதை எதிர்த்து வழக்கு: நிபுணர்களுடன் ஆலோசிக்க அறிவுரை

புதுச்சேரி, லாஸ்பேட் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர், பரிமளம் தாக்கல் செய்த மனு:கல்வி கொள்கையில், அரசு ஏற்படுத்திய மாற்றத்தால், பள்ளி மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின்படி, பிளஸ்1, பிளஸ் 2 க்கு, பொது தேர்வு நடத்த வேண்டும்; பிளஸ் 2 மதிப்பெண்ணுடன், பிளஸ் 1 மதிப்பெண்ணையும் சேர்த்து, கணக்கிட வேண்டும்.
தேர்வு முறை, மதிப்பெண் முறை, &'வெயிட்டேஜ்&' மதிப்பெண், மொத்த மதிப்பெண் என, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உரிய முறையில் பரிசீலிக்காமல், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசின் உத்தரவானது, கல்வி முறையில் பேரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முறையாக பரிசீலிக்காமல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும்.
நடைமுறைப்படுத்த முடியாத திட்டத்தை அமல்படுத்துவதை விட, பிளஸ் ௧ பாடங்களை புறக்கணிக்கும் பள்ளிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், தற்போதைய உள்கட்டமைப்பு போதுமானதாக இருக்கிறதா; போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா என்பதையும், பார்க்க வேண்டும்.புதிய திட்டத்தால், மாணவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். அதனால், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுவர்.
மாநில பாடத்திட்டம், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்துக்கு இணையாக இல்லை. இரண்டையும் சமமாக கருதுவது சரியல்ல. சி.பி.எஸ்.இ., முறையில், பிளஸ் 1மதிப்பெண்ணை கணக்கில் எடுப்பது இல்லை. ஆனால், மாநில பாடத் திட்டத்தில், பிளஸ் 1 மதிப்பெண்ணையும் சேர்த்து கணக்கிடப்படுகிறது. இந்த இரு பிரிவில் படிப்பவர்களுக்கும் இடையே, பாரபட்சம் காட்டப்படுகிறது.
எனவே, புதிய தேர்வு முறை குறித்து, தமிழக அரசு, ௨௦௧௭ மே மாதம் பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும். பிளஸ் 2தேர்வில் பெற்ற மதிப்பெண்ணை கணக்கிடும் போது, பிளஸ் ௧ மதிப்பெண்ணை சேர்க்கக் கூடாது என, அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, தலைமை நீதிபதி, இந்திரா பானர்ஜி, நீதிபதி, அப்துல் குத்துாஸ் அடங்கிய, &'முதல் பெஞ்ச்&' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர், வி.ராகவாச்சாரி ஆஜரானார்.பின், முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், &'தமிழக அரசின், பள்ளி கல்வித் துறை முதன்மை செயலரிடம், மனு அளிக்கலாம். மனுவை பரிசீலித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் துறைகளில் உள்ள நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து, அரசு முடிவெடுக்க வேண்டும்&' என, கூறியுள்ளது.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here