Skip to main content

மதுரை: தமிழகத்தில், அரசுப் பணித் தேர்வு நடைமுறைகளில் மோசடி நடந்துள்ளதாக, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு மற்றும், சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதி துறை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., தனித்தனியே மேற்கொள்கின்றன.தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

குறைந்த மதிப்பெண்

ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், 'கோடிங் சீட்'

எனும், விடைத்தாள் நகல் அச்சிட்டு வழங்குகிறது. அவற்றை மதிப்பிட கம்ப்யூட்டரில், 'ஸ்கேன்' செய்கின்றனர்.புரோக்கர்கள் மூலம் பேரம் பேசி, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக வேறு, 'கோடிங் சீட்'டை மாற்றி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகமதிப்பெண் வழங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற தகுதியான நபர்களுக்கு, குறைந்த மதிப்பெண் வழங்கி மோசடி நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட ஒருவர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். அங்கிருந்து, டி.ஆர்.பி.,க்கு புகார் பரிந்துரைக்கப்பட்டது. மோசடி மூலம், 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பு விசாரணைக்குழு

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.எதிர்காலத்தில், அரசுப் பணிக்கான தேர்வு நடைமுறைகளில் மோசடிகளை தவிர்க்க, கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், வழிகாட்டுதல்களை உருவாக்க வேண்டும். சம்பந்தப்பட்டஅரசு அதிகாரிகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தற்போது பதிவான வழக்கை விசாரிக்க, சிறப்பு விசாரணைக்குழு அமைக்க வேண்டும் அல்லது சி,பி.ஐ., விசாரணைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.இவ்வாறு பதிவாளர் குறிப்பிட்டார்.இதை நீதிபதிகள், என்.கிருபாகரன், ஆர்.தாரணி அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றது.நீதிபதிகள், 'இச்சம்பவம் ஆபத்தான போக்கை வெளிப்படுத்துகிறது. தவறு செய்தவர்கள் தப்பி விடாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. ஒருவரை தேர்வு செய்ய, 12.5 லட்சம் ரூபாய் வரை பெற்று, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது'என்றனர்.பின், தமிழக தலைமைச் செயலர், டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், டி.என்.பி.எஸ்.சி., தலைவர், டி.ஆர்.பி., செயலர், சி.பி.ஐ.,இயக்குனர் மற்றும் இணை இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்பி, பிப்., 16க்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...