சிவகங்கை: உதவித்தொகை பெறுவதற்காக துவங்கப்பட்ட மாணவர்களின் சேமிப்பு கணக்குகளில், வங்கிகள் அடிக்கடி பணத்தை பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை என, மூன்று விதமான உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தவிர ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை தற்போது இ.சி.எஸ்., முறையில் மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தேசிய வங்கிகளில் ’ஜீரோ பேலன்சில்’ சேமிப்பு கணக்கு துவங்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ’ சேமிப்பு கணக்கு செயல்பாட்டில் இருக்க கண்டிப்பாக குறைந்தது 100 முதல் 500 ரூபாய் செலுத்த வேண்டும்,’ என கூறி, வங்கி அதிகாரிகள் ’டெபாசிட்’ பெறுகின்றனர்.
ஒரு சில மாதங்களிலேயே அந்த பணம் படிப்படியாக குறையத் துவங்கிறது. சிலருக்கு பணம் முழுவதுமே மாயமாகிறது. சிலருக்கு உதவித்தொகையில் பணம் பிடிக்கின்றனர். சிலரது கணக்குகளில் பணம் இல்லை என்று கூறி, சேமிப்பு கணக்கை முடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு உதவித்தொகை செல்வதில் சிரமம் உள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேமிப்பு கணக்கு துவங்க மட்டுமே ’டெபாசிட்’ தேவையில்லை. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அலைபேசி எஸ்.எம்.எஸ்.,- போன்ற பல சேவைகளை அளிக்கின்றன. அதேபோல் வெளியூர்களில் இதர வங்கிகளில் ஏ.டி.எம்., பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக கட்டணம் வசூலிக்கிறோம். இதற்கான தொகை தான் பிடிக்கப்படும், என்றார்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment