Skip to main content

மாணவர்களின் வங்கி கணக்கில் மாயமாகுது பணம்

சிவகங்கை: உதவித்தொகை பெறுவதற்காக துவங்கப்பட்ட மாணவர்களின் சேமிப்பு கணக்குகளில், வங்கிகள் அடிக்கடி பணத்தை பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை என, மூன்று விதமான உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தவிர ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை தற்போது இ.சி.எஸ்., முறையில் மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தேசிய வங்கிகளில் ’ஜீரோ பேலன்சில்’ சேமிப்பு கணக்கு துவங்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ’ சேமிப்பு கணக்கு செயல்பாட்டில் இருக்க கண்டிப்பாக குறைந்தது 100 முதல் 500 ரூபாய் செலுத்த வேண்டும்,’ என கூறி, வங்கி அதிகாரிகள் ’டெபாசிட்’ பெறுகின்றனர்.
ஒரு சில மாதங்களிலேயே அந்த பணம் படிப்படியாக குறையத் துவங்கிறது. சிலருக்கு பணம் முழுவதுமே மாயமாகிறது. சிலருக்கு உதவித்தொகையில் பணம் பிடிக்கின்றனர். சிலரது கணக்குகளில் பணம் இல்லை என்று கூறி, சேமிப்பு கணக்கை முடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு உதவித்தொகை செல்வதில் சிரமம் உள்ளது.
வங்கி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சேமிப்பு கணக்கு துவங்க மட்டுமே ’டெபாசிட்’ தேவையில்லை. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் அலைபேசி எஸ்.எம்.எஸ்.,- போன்ற பல சேவைகளை அளிக்கின்றன. அதேபோல் வெளியூர்களில் இதர வங்கிகளில் ஏ.டி.எம்., பயன்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக கட்டணம் வசூலிக்கிறோம். இதற்கான தொகை தான் பிடிக்கப்படும், என்றார்.

Comments

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல. ...