மதுரை காமராஜ் பல்கலையில் 2.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 82 ’ஸ்மார்ட்’ வகுப்பறைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், பல்கலையில் மத்திய அரசின் ’ரூசா’ திட்டத்தில் அமைக்கப்பட்ட இவ்வகுப்பறைளை திறந்தார்.
விடுதிகளில் 1.05 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 8 ’பிட்னஸ்’ மையங்கள், தலா 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் மற்றும் சரோஜினி நாயுடு பூங்காக்களையும் திறந்தார்.
பல்கலை வளாகத்தில் பல்வேறு பகுதியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 கல்வி பூங்காங்கள் அமைக்க அடிக்கல் நாட்டினார். நாகமலை மலையடிவாரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் கவர்னர் முன்னிலையில் மாணவர்கள் நட்டனர்.
துணைவேந்தர் செல்லத்துரை, கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், சிண்டிகேட் உறுப்பினர் லில்லிஸ் திவாகர், டீன்கள் முத்துமாணிக்கம், பொன்னுச்சாமி, பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கல்வித்துறைக்கு ’அட்வைஸ்’
இதைதொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் துறைகள் வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவிடம் அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர்கள் விகிதம் குறித்து கேட்டார். அதற்கு 1:30 என்பதற்கு பதில் 1:18 என்ற அளவில் இருந்ததை அறிந்து, ’ஆசிரியர்கள் ’சர்ப்பிளஸ்’ ஆக உள்ளனரா,’ என கேட்டார்.
அதற்கு, ’20 மாணவர்களுக்கும் கீழ் உள்ள ஈராசிரியர் பள்ளிகள் இருப்பதால் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளன,’ என விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ’அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்,’ என அறிவுரை வழங்கினார்.
போலீஸ் விசாரணை
இதைதொடர்ந்து தொடக்க கல்வி அலுவலர் ஜெயபால் சென்றபோது, அவரது ஜீப் டிரைவர் சரவணன் கறுப்பு பேட்ஜ் அணிந்திருந்தார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் விசாரித்தபோது, ’நான் கல்வி அலுவலக பணியாளர் சங்க உறுப்பினர். சங்கம் சார்பில் பதவி உயர்வு உட்பட கோரிக்கையை வலியுறுத்தி மாநில அளவில் கறுப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதனால் அணிந்துள்ளேன்.அதை கழற்ற முடியாது,’ என்றார்.
மாநில பொருளாளர் துரைப்பாண்டியிடம் போலீசார் தொடர்பு கொண்டு உறுதிசெய்த பின் சரவணனை அனுப்பினர்.
₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை
Comments
Post a Comment