Skip to main content

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டம் வேலைவாய்ப்புக்கு ஏற்புடையது: அமைச்சர் கே.பி.அன்பழகன்

திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்புடையதுதான் என உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை (நவ.28) நடைபெற்றது. தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித் தலைமையில் நடைபெற்ற இந்தப் பட்டமளிப்பு விழாவில் உயர் கல்வித் துறை அமைச்சரும், பல்கலைக்கழக இணை வேந்தருமான கே.பி.அன்பழகன் பங்கேற்றுப் பேசியதாவது:-
தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம்: இந்திய அளவில் இப்போது 799 பல்கலைக்கழகங்களும், 39,071 கல்லூரிகளும், 11,923 கல்வி நிறுவனங்களும் உள்ளன.
இவற்றின் மூலம் 3.46 கோடி மாணவ, மாணவிகள் உயர் கல்வி பெறுகின்றனர். இதனால் உயர் கல்வியில் 24.5 சதவீத ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை விகிதத்தை இந்தியா கொண்டுள்ளது. இதில், மாநில அளவில் ஒப்பிடும்போது, தமிழகம்தான் முன்னிலை வகிக்கிறது. தமிழகத்தில் உயர் கல்வி சேர்க்கை விகிதம் 44.3 சதவீதம் ஆகும்.
தொலைநிலைக் கல்வியிலும்... இதே போன்று அதிக அளவில் தொலைநிலைக் கல்வி நிறுவனங்களைக் கொண்ட மாநிலமும் தமிழகம்தான். இங்கு 19 தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தமிழகத்தில் உயர் கல்வி பெறுபவர்களில் 11.05 சதவீதத்தினர் இந்த தொலைநிலைக் கல்வி நிறுவனங்கள் மூலம் உயர் கல்வி பெறுகின்றனர். அதாவது, 7.5 லட்சம் மாணவ, மாணவிகள் தொலைநிலைக் கல்வி மூலம் உயர் கல்வி பெறுகின்றனர்.
கவலை வேண்டாம்: இவ்வாறு தொலைநிலை மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டங்கள், வேலைவாய்ப்புக்கு ஏற்புடையதா என்ற சந்தேகம் அண்மைக்காலமாக எழுந்து வருகிறது. முறையாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 முடித்து, தொலைநிலை அல்லது தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழகங்கள் மூலமாகப் பெறப்படும் பட்டங்கள் வேலைவாய்ப்புக்கும், பதவி உயர்வுக்கும் ஏற்புடையதாகும். இது தொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது என்றார் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.
மொத்தம் 16,879 மாணவர்களுக்கு... முன்னதாக பல்வேறு துறைகளில் முதல் மதிப்பெண் பெற்ற 209 மாணவ, மாணவிகளுக்கு ஆளுநர் தங்கப் பதக்கங்களையும் பட்டச் சான்றிதழ்களையும் வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழா மூலம் 4,581 முதுநிலை பட்ட மாணவர்கள், 8,497 இளநிலை பட்ட மாணவர்கள், 3,701 பட்டய மாணவர்கள், 100 முதுநிலை பட்டய மாணவர்கள் என மொத்தம் 16,879 மாணவ, மாணவிகளுக்கு பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
காமன்வெல்த் கல்வி ஊடக மைய விருது: மேலும், முதுநிலை கணினி அறிவியல் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்று சிறந்து விளங்கிய பல்கலைக்கழக மாணவி ஆர். வீரலட்சுமிக்கு காமன்வெல்த் கல்வி ஊடக மைய (சி.இ.எம்.சி.ஏ.) விருதும், ரூ. 25 ஆயிரத்துக்கான ரொக்கப் பரிசையும் விழாவில் ஆளுநர் வழங்கினார்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் மு.பாஸ்கரன் ஆண்டறிக்கையை வாசித்தார். மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக துணை தலைமை இயக்குநர் கே.அழகுசுந்தரம், உயர் கல்வித் துறை செயலர் சுனில் பாலிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
எம்.ஏ. பட்டம் பெற்ற 70 வயது மூதாட்டி
திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் 70 வயது மூதாட்டி எம்.ஏ. பட்டம் பெற்று சாதித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழா மூலம் 16,879 பேர் பட்டம் பெற்றனர்.
முதல் மதிப்பெண் பெற்ற 209 பேர் உள்பட 500-க்கும் அதிகமான மாணவ, மாணவிகள் விழாவில் நேரடியாக பட்டச் சான்றிதழைப் பெற்றனர். இவர்களில் 70 வயது மூதாட்டியும் பட்டம் பெற்றார்.
செல்லத்தாயி என்ற அந்த மூதாட்டி, திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தேர்வு மூலம் ஏற்கெனவே பி.ஏ. பட்டம் முடித்தவர். இப்போது எம்.ஏ. முதுநிலை பட்டப் படிப்பையும் முடித்துள்ளார். விழாவில், பட்டம் பெற்ற அவர் கூறியதாவது:
அந்தக் காலத்திலேயே படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், குழந்தைகளைக் கவனிக்க வேண்டும், வேலைக்குச் செல்லவேண்டும் என்பதால், பட்டப் படிப்பை மேற்கொள்ள முடியாமல் போனது. அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர், திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்பை முடித்து இப்போது எம்.ஏ. முடித்திருக்கிறேன். அடுத்து, சட்டப் படிப்பை (எல்.எல்.பி.) மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலில் உள்ளேன். படிப்பின் மீதான ஆர்வத்தை யாராலும் குறைக்க முடியாது என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here