Skip to main content

SUNDAY'S THOUGHT..

முன்பு ஜெர்மனி நாடு பிளவுபட்டிருந்தபோது பெர்லின் நகரத்தை கிழக்காகவும் மேற்காகவும் பெரிய மதில் சுவர் பிரித்தது.

ஒருநாள் கிழக்கு பெர்லினை சேர்ந்த சிலர், ஒரு லாரி நிறைய குப்பை கூளங்களை கொண்டுவந்து மதில் தாண்டி மேற்கு பெர்லின் பக்கம் கொட்டினார்கள்...அவ்வளவு குரோதம்...!

மேற்கு பெர்லினை சேர்ந்த மக்களும் அதே மாதிரி செய்திருக்கலாம். ஆனால் அவர்கள் அப்படி செய்யவில்லை. மாறாக ஒரு லாரி நிறைய உணவு பொருட்கள், ரொட்டிகள், பால் பொருட்கள் மற்றும் மளிகை சாமான்களை கொண்டுவந்து மதில் தாண்டி இந்த கிழக்கு பெர்லின் பக்கம் அழகாக அடுக்கி வைத்துவிட்டு போனார்கள்.

மேலும் அதன் மீது இவ்வாறு எழுதி வைத்து விட்டு போனார்கள் :
"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்கள்"
"EACH GIVES WHAT HE HAS"..

எவ்வளவு நிதர்சனமான உண்மை....! உங்களிடம் இருப்பதைதான் உங்களால் கொடுக்க முடியும்.

உங்களுக்கு 'உள்ளே' என்ன இருக்கிறது...?
அன்பா - பகையா...?
அமைதியா - வன்முறையா...?
வாழ்வா - சாவா...?

உங்கள் திறமை, பலம் அழிவுப்பாதையை நோக்கியா - வளர்ச்சிப்பாதையை நோக்கியா...?

இத்தனை காலங்களில் நீங்கள் அடைந்தது என்ன..?

"ஒவ்வொருவரும் தன்னிடம் என்ன இருக்கிறதோ அதைதான் கொடுப்பார்
எல்லாவற்றையும் விட இது அனைவருக்கும் பொருந்தும்!

எதை கொடுப்பது என்று என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்..

Comments

  1. Wishing everyone a blessed Sunday ahead..

    ReplyDelete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று, அரசு பணிக்காக காத்திருப்போர், சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து, வடமாவட்ட ஒருங்கிணைப்பாளர் கலைவாணன் கூறியதாவது:தமிழகம் முழுதும் 2013ல் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்று, 29 ஆயிரம் பேர், ஏழு ஆண்டுகளாக ஆசிரியர் பணிக்கு காத்திருக்கின்றனர்.பணி வழங்கக்கோரி, 23முறை அமைச்சர்களையும், 33 முறை எம்.எல்.ஏ.,க்களையும், நான்கு முறை முதல்வர் ஸ்டாலினையும் சந்தித்துள்ளோம்.

    ReplyDelete
  3. இதுவரை எந்த தீர்வும் கிடைக்கவில்லை.ஆசிரியர் தகுதித் தேர்வில்தேர்ச்சி பெற்று காத்திருப்போருக்கு, தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல், பணி நியமனம் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா வழங்க வேண்டும்

      Delete
  4. சூப்பரு விட்ராதிங்க

    ReplyDelete
  5. இப்போதைக்கு காலியிடம் இல்லை ....ஓய்வு வயதை குறைக்க சொல்லி முதலில் போராடுங்கள்....அப்போதான் பணி நியமனம் செய்ய காலியிடம் இருக்கும்

    ReplyDelete

Post a Comment