Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு கருவுற்ற மான், தன் மகவை ஈனும் ஒரு தருணம்...

அந்த மான், ஒரு அடர்ந்த புல் வெளியைக் கண்டது.

அதன் அருகே ஒரு பொங்கிப் பெருக்கெடுத்தோடும் ஆறு.

இதுவே கன்றை ஈனுவதற்குச் சரியான இடம் என்று அந்த மான் அங்கு சென்றது.

அப்போது, கருமேகங்கள் சூழ்ந்தன.
மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.

மான் தன் இடப்பக்கம் பார்த்தது.
அங்கே ஒரு வேடன் தன் அம்பை, மானை நோக்கிக் குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.

மானின் வலப்பக்கம் பசியுடன் ஒரு புலி அதை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ஒரு கருவுற்ற மான்... பாவம் என்ன செய்யும்?

அதற்கு வலியும் வந்து விட்டது. மேலும் எங்கோ பற்றிய காட்டுத் தீயும் எரிந்து நெருங்கி வர ஆரம்பித்து விட்டது.

*என்ன நடக்கும்?...*
*மான் பிழைக்குமா?...*
*மகவை ஈனுமா?...*
*மகவும் பிழைக்குமா?...*
*இல்லை... காட்டுத் தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?...*
*வேடனின் அம்புக்கு மான் இரையாகுமா?...*
*புலியின் பசிக்கு உணவாகுமா?...*
பற்றி எரியும் கொடும் தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறம், பசியோடு புலியும், வில்லுடன் வேடனும் எதிர் எதிர் புறம்.

*மான் என்ன செய்யும்?...*
மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈனுவதிலேயே செலுத்தியது.

ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல்கள் அதன் கண்களில் படவில்லை.

*அப்போது நடந்த நிகழ்வுகள்...*
*மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.*
*அவன் எய்த அம்பு, குறி தவறி புலியைத் தாக்க, அது இறக்கிறது.*
*தீவிர மழை, காட்டுத் தீயை அழித்து விடுகிறது.*

அந்த மான், அழகான ஒரு குட்டி மானைப் பெற்றெடுக்கிறது.
நம் வாழ்விலும், இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.
அல்லது வரும்.

அச்சூழலில், பல எதிர்மறை சிந்தனைகள் நம்மைச் சுற்றி நின்று அச்சுறுத்தும்.
*சில எண்ணங்களின் பலம், நம்மை வீழ்த்தி, அவை வெற்றி பெற்று, நம்மை வெற்றிடமாக்கும்.*
நாம் *இம்மானிடம்* இருந்து *மானிடம்* கற்றுக்கொள்வோம்.

அந்த மானின் கவனம் முழுவதும், மகவைப் பெற்றிடுவதிலேயே இருந்தது.
மற்ற எதையும் அது பொருட்படுத்தவில்லை. அது அதன் கை வசமும் இல்லை.
மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்திருந்தால், மகவும் மானும் மடிந்து போயிருக்கும்.

*இப்போது, உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்...*
எதில் என் கவனம்?
எதில் என் *நம்பிக்கையும் முயற்சியும் இருக்க வேண்டும்?*
வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி, மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.
*அவர் எப்போதும், எதிலும் நம்மை வருத்தப்பட விடமாட்டார்.*
*கடவுள் தூங்குவதும் இல்லை...*
*நம்மை துயரப்படுத்துவதும் இல்லை...*
*உன் செயலில் நீ கவனம் செலுத்து.*
*மற்றவை நடந்தே தீரும்.*

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. 2013ல 90 மார்க் மேல எடுத்துவிங்க அமைச்சரை பார்த்து முன்னுரிமை கேட்கறாங்க. அமைச்சரை பார்த்து TRT வைங்கனு மனு கொடுக்கங்க. விடக்கூடாது trt தான் வேணும்

    ReplyDelete
    Replies
    1. புத்தகசாலையிலே போராட்டம் நடத்தலாம்

      Delete
  3. இவிங்க குடுக்கிற தொல்லைனால trt தான் வரப்போகுது

    ReplyDelete
  4. Trt தான் வரப்போகுது

    ReplyDelete
  5. Trt a konduvarama irukka mattanga pola

    ReplyDelete
  6. அதிக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 82-89
    மதிப்பெண் பெற்ற நாம் தான், நாம் செலுத்திய vote தான் dmk ஆட்சிக்கு வந்துச்சி, so trt தான் தான் வேணும், இது தேர்ச்சி பெற்ற பெரும்பான்மையானவர்களின் கருத்து

    ReplyDelete
    Replies
    1. Pgtrb ke oru exam than neenga 2 exam kekkuringa
      Nalla patha tet than pgtrb ya Vida kastam ungalukku therium
      Neengalum vala mattinga yaraum vala Vida mattinga. Nalla irunga

      Delete
    2. Unknown நீங்கள் உங்கள் கோரிக்கையை சொல்லுங்கள்..அதற்காக நாங்க vote போட்டுத்தான் dmk ஆட்சிக்கு வந்ததுன்னு சொல்லாதீங்க....2016 ல நீங்க dmk க்கு vote போடலையா...2016 ல ஏன் தோற்றது......

      Delete
  7. Trt venum endha tharappum insist pannala, pannavum matanga.. Ellarumey vera method dhan suggest pannitu irukanga.. Idhaellam 1:2 kelapi vidrathu.. Don't believe rumors..

    ReplyDelete
    Replies
    1. 1:2 ஏற்கனவே உருப்படல அப்பிடியும் இந்த கேவலமான எண்ணம் தேவையா

      Delete
  8. 1:2 blabbers..

    You people should stop threatening people using your terminologies, you can't use that cheap tactics to me..

    What do u mean by addendum?? First get the spelling correct!!!!

    Addendum is something which will be the number of posts, extra posts actually being added to the existing posts announced during notification of an exam..

    Search in pgtrb histroy such addendum was done only in 2017.. What you people expecting is called additional list, we can't say that as revised list also since TRB will name as revised list only when there is intervention of Highcourt..

    You people keep blabbering but nothing gonna happen..

    Today elamaran!!! What elamaran gonna do, for tet also he has mentioned. That's just report or may be request, but no assurance or guarantee that it wil happen for sure.. You believe it but don't spoil people who awaits for pgtrb..

    And last but not least, am aware that an addendum will b coming soon in order to increase the postings announced..

    ReplyDelete
    Replies
    1. plz tamil la velakka muteuma madam plz. nenka eanna solla varenkanu sariya puriyala plz madam? surukkama kuda sollunka.

      Delete
    2. Thilagam madam..

      Inoru list varadhu, adhuku chances illa.. Vacancy neriya iruku adhu engalukku second list ah varanumnu avanga solranga but adhu ini vara pora exam ku add agi vandhurum, avlo dhan..

      Delete
  9. Madam I checked in google what you said was correct. Addendum was published only in 2017 pgtrb when trb added extra postings.

    ReplyDelete
  10. செகண்ட் லிஸ்ட் வராதுன்னு சொல்ராங்க. எக்ஸ்ட்ராவா வந்த பணியிடங்கள் pgtrb 2021ல் சேர்க்கபடும்ன்னு சொல்ராங்க

    ReplyDelete
  11. https://youtu.be/_VzgJxNdUSA

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here