Skip to main content

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

Comments

  1. இன்றைய தமிழ் கேள்விகள்!!!
    செய்யுள் தொடர்பான பகுதி:-
    (October 22, 2017)

    1) தமிழ் மாதின் இனிய உயர்நிலை என்று பாராட்டப்படுவது
    அ)சிலப்பதிகாரம் ஆ)மணிமேகலை இ)திருக்குறள் ஈ)கம்பராமாயணம்

    2)கம்பர் தனது கம்பராமாயணத்தில் சடையப்ப வள்ளலை எத்தனை பாடலுக்கு ஒருமுறை பாடி சிறப்பித்தார்
    அ)100 ஆ)2000 இ)1100 ஈ)1000

    3)திருவிளையாடற் புராணம் கூறும் சங்க புலவர்களின் எண்ணிக்கை
    அ)48 ஆ)49 இ)40 ஈ)45

    4)சிந்துவும் விருத்தமும் பரவி வர பாடப்படுவது
    அ)தூது ஆ)பள்ளு இ)உலா ஈ)கலம்பகம்

    5)தமிழில் தோன்றிய முதல் உலா நூல்
    அ)ராஜராஜன் உலா
    ஆ)மூவர் உலா இ)திருக்கயிலாய உலா ஈ)மேல் கூறிய ஏதும் இல்லை

    6)வீரசோழியம் என்பது
    அ)காப்பியம் ஆ)சிற்றிலக்கியம் இ)உரைநடை ஈ)இலக்கண நூல்

    7)விருத்தபாக்களால் அமைந்த முதல் காப்பியம்
    அ)சிலப்பதிகாரம் ஆ)சீவகசிந்தாமணி இ)மணிமேகலை ஈ)நீலகேசி

    8)சமய குரவர் நால்வருள் "பிரம்மராயன் " என்று அழைக்கப்படுபவர்
    அ)திருநாவுக்கரசர் ஆ)சுந்தரர் இ)சம்பந்தர் ஈ)மாணிக்கவாசகர்

    9)பாரதியார் உதவி ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகை
    அ)சக்கரவர்த்தினி ஆ)இந்தியா இ)விஜயா ஈ)சுதேசிமித்ரன்

    10)கலம்பக முனிவர்க்கு பாடப்படும் பாடல்களின் எண்ணிக்கை
    அ)100 ஆ)90 இ)70 ஈ)95

    ReplyDelete
  2. 👉 *இன்றைய உரைநடை தொடர்பான கேள்விகள்:*
    (October 24, 2017)

    1)உ.வே.சா பதிப்பித்த நூல்களுள் 3 என்னும் எண்ணிக்கையில் கீழ்வருவது
    அ)பரணி ஆ)தூது இ)அந்தாதி ஈ)கோவை

    2)தமிழ் மொழி எத்தனை மொழிகளுக்கு வேர்சொற்களை கொடுத்தது?
    அ)1800 ஆ)1080 இ)1090 ஈ)1070

    3)எந்த நூற்றாண்டில் *_நொண்டி நாடகங்கள்_* புகழ்பெற்று விளங்கின
    அ)7 ஆ)18 இ)19 ஈ)17

    4)" *ஆனந்தரங்கர் பிள்ளைதமிழ்* " இயற்றியவர் -------
    அ)தியாகராய தேசிகர் ஆ)அரிமதிதென்னகர் இ)கஸ்தூரி ரங்கக்கவி ஈ)சீனிவாசகவி

    5)அறுசுவை பயன்களுள் " *உவர்ப்பு* " குறிப்பது
    அ)வளம் ஆ)தெளிவு இ)ஆற்றல் ஈ)இனிமை

    6) *தில்லையாடி வள்ளியம்மைக்கு* வெளியிடப்பட்ட அஞ்சல் தலை மதிப்பு
    அ)1 ரூபாய் ஆ)25பைசா இ)5ரூபாய் ஈ)2ரூபாய்

    7)சடகோ தனது கடைசி நாட்களில் செய்த கொக்குகளின் எண்ணிக்கை
    அ)20/நாள் ஆ)5/நாள் இ)3/நாள் ஈ) 2/நாள்

    8)நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் *வாசிக்க வேண்டிய நூல்* என்று குறிப்பிட்டது
    அ)போரும் அமைதியும் ஆ)பெர்நாட்ஷா எழுதிய நூல்கள்
    இ)சாகுந்தலம் ஈ)கிரேக்க நாடக நூல்கள்

    9) *நெசவு தொழிலில்* மேற்கொள்ளும் படிகளின் எண்ணிக்கை
    அ)4 ஆ)5 இ)6 ஈ)8

    10)பின்வருவனற்றுள் *முல்லை* நில ஊர்களை குறிப்பது
    அ)புளியங்குடி ஆ)புளியங்குளம் இ)புளியஞ்சோலை ஈ)மேற்கூறிய ஏதும் இல்லை

    ReplyDelete
  3. தமிழ் பாடப்பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட அடிப்படை கேள்விகள்:
    (October 27, 2017)

    1)உமறுபுலவரை ஆதரித்த வள்ளல்
    அ)செய்கு அப்துல் காதிர் மறக்காயர்
    ஆ)சீதகாதி
    இ)அப்துல் காசிம்
    ஈ)மேல் கூறிய அனைத்தும்

    2)"எது பெரிய உண்மை" துணைபாடத்தின் ஆசிரியர்
    அ)பி.எம்.முத்து
    ஆ)ஓவியர் ராம்கி
    இ)நா.பழனியப்பன்
    ஈ)மேல் கூறிய யாரும் இல்லை

    3)பின்வரும் புலவர்களுள் யார் வரகுண பாண்டியனிடம் அவை புலவராக இருந்தவர்
    அ)செயங்கொண்டார்
    ஆ)ஒட்டக்கூத்தார்
    இ)புகழேந்தி
    ஈ)காலமேக புலவர்

    4)பின்வருவனவற்றூல் தவறாக பொருந்தியது எது?
    1)நண்பர் இல்லறம் - நல்லி
    2)இரவலர்க்கு குதிரை-ஓரி
    3)கூத்தர் கலைக்கு நாடு -காரி
    அ)3 ம் தவறு
    ஆ)1&3தவறு
    இ)3மட்டும் தவறு
    ஈ)2&3தவறு

    5)காப்பிக்காக பணயமாக வெக்கப்பட்டதாக மருமக்கள் வழி மான்மியத்தில் தேசிக விநாயகப்பிள்ளை கூறியது
    அ)புத்தகம்
    ஆ)கடுக்கண்
    இ)குடை
    ஈ)சிலேட்டு

    6.அனந்தரங்க விஜயசம்பு என்னும் நூலை சீனிவாச கவி எந்த மொழியில் இயற்றினார்
    அ)தெலுங்கு ஆ)வடமொழி இ)தமிழ் ஈ)ஆங்கிலம்

    7)மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு கோபுரத்தில் உள்ள சுதை உருவங்களின் எண்ணிக்கை
    அ) 1611 ஆ)1411 இ)1511 ஈ)1311

    8)இராமானுஜருக்காக வெளியிடப்பட்ட அஞ்சல் தலையின் மதிப்பு
    அ)25 பைசா
    ஆ)15பைசா
    இ)10 பைசா
    ஈ)50 பைசா

    9)வள்ளியம்மைக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்ட ஆண்டு
    அ)2000 ஆ)2006 இ)1995 ஈ)1978

    10)இராமானுஜருக்கு வெண்கல சிலை நிறுவப்பட்ட ஆண்டு
    அ)1957
    ஆ)1986
    இ)1954
    ஈ)மேல் கூறிய எதுவும் இல்லை

    ReplyDelete
  4. Thank you anon sis good afternoon sis

    ReplyDelete
  5. திரையிசைப் பாடல்களில் இலக்கணம்:

    திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம்.

    🖌தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக...

    *🖌அடுக்குத்தொடர்:
    ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்.

    *🖌இரட்டைக்கிளவி:
    ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே.

    *🖌சினைப்பெயர்:
    பூப்பூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.

    *🖌பொருட்பெயர்:
    கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல

    *🖌இடப்பெயர்:
    வீடு வரை உறவு வீதி வரை மனைவி!

    *🖌காலப்பெயர்:
    வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன்!

    *🖌குணம் அல்லது பண்புப்பெயர்:
    அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா!

    *🖌தொழில் பெயர்:
    ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம்! சுகம்!

    *🖌இறந்த காலப் பெயரெச்சம்:
    வந்த நாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை!

    *🖌எதிர்காலப் பெயரெச்சம்:
    ஓடும் மேகங்களே ஒரு சொல் கேளீரோ?

    *🖌இடவாகுபெயர்:
    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே உனக்கு நீ தான் நீதிபதி

    *🖌எதிர்மறைப் பெயரெச்சம்:
    துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும்

    *🖌குறிப்புப் பெயரெச்சம்:
    அழகிய தமிழ்மகள் இவள் இரு விழிகளில் எழுதிய மடல்!

    *🖌ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்:
    வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது.

    *🖌வன்றொடர்க் குற்றியலுகரம்:
    முத்துப்பல் சிரிப்பென்னவோ முல்லைப்பூ விரிப்பென்னவோ!

    *🖌நெடிற்றொடர்க் குற்றியலுகரம்:
    நாடு அதைநாடு அதை நாடாவிட்டால் ஏது வீடு

    *🖌உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்:
    ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள்

    *🖌இரண்டாம் வேற்றுமை உருபு:
    நிலவைப்பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.

    *🖌மூன்றாம் வேற்றுமை உருபு:
    உன்னால் முடியும் தம்பி! தம்பி!!

    *🖌பெயர்ப் பயனிலை:
    காலங்களில் அவள் வசந்தம் கலைகளிலே அவள் ஓவியம்....

    ReplyDelete
  6. Replies
    1. Thank you moni sis, Revathi sis and ganesan sir..

      Delete
  7. 🍀இன்றைய தமிழில் இடம்பெறும் இலக்கணம் தொடர்பான கேள்விகள்:

    1)"காலம் கரந்த _______ வினைத்தொகை " என நன்னூல் குறிப்பிடுகிறது.
    அ)வினையெச்சம் ஆ)முற்றெச்சம்
    இ)பெயரெச்சம்
    ஈ)வினைமுற்று

    2)"தூக்கம்" என்னும் சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கண குறிப்பு _____
    அ)முற்றெச்சம்
    ஆ)முதல் நிலை திரிந்த தொழில்பெயர்
    இ)தொழில்பெயர்
    ஈ)வினைமுற்று

    3)"அஞ்சுவது" என்னும் சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கண குறிப்பு
    அ)தொழில் பெயர்
    ஆ)வினையெச்சம்
    இ)வினையாலணையும் பெயர்
    ஈ)வினைமுற்று

    4)"வையார்" என்னும் சொல்லில் பயின்று வரும் இலக்கண குறிப்பு
    அ)குறிப்பு வினைமுற்று
    ஆ)எதிர்மறை வினைமுற்று
    இ)வினைமுற்று
    ஈ)பலவின் பால் வினைமுற்று

    5)பின்வருவனவற்றுள் எது வினைத்தொகை அல்ல
    அ)ஆகாறு ஆ)போகாறு
    இ)ஊர்மதி
    ஈ)உண்கண்

    6)"எனா" என்னும் சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கண குறிப்பு
    அ)'செய' எனும் வாய்ப்பாட்டு வினையெச்சம்
    ஆ)வினையெச்சம்
    இ)எதிர்மறை வினையெச்சம்
    ஈ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

    7)"இருக்கு ஆரணம்" என்னும் சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கண குறிப்பு
    அ)வினைத்தொகை
    ஆ)பண்புதொகை
    இ)இருபெயரொட்டு பண்புதொகை
    ஈ)மேல் கூறிய ஏதும் இல்லை

    8)"அம்மா"என்னும் சொல்லில் பயின்று வந்துள்ள இலக்கண குறிப்பு
    அ)விழி
    ஆ)வியப்பிடை சொல்
    இ)அண்மை விழி
    ஈ)வலித்தல் விகாரம்

    9)"மல்லல்" என்னும் சொல்லில் பயின்று வரும் இலக்கண குறிப்பு
    அ)தொழில்பெயர்
    ஆ)'அல்' ஈற்று தொழில் பெயர்
    இ)உரிச்சொல்
    ஈ)எதிர்மறை தொழிற்பெயர்

    10)பின்வருவனவற்றுள் எது "அளவு பண்புத்தொகை" அல்ல
    அ)முக்குடை
    ஆ)ஒருமனம்
    இ)இருவினை
    ஈ)நால்வகை

    Answers will be posted by 7pm

    ReplyDelete
    Replies
    1. 1. இ
      2. இ
      3. அ
      4. இ
      5. இ
      6. ஆ
      7. இ
      8. ஆ
      9. இ
      10. அ

      Delete
  8. Thank ano sis..Good night

    ReplyDelete
  9. பண்டைய தமிழ் எண்ணியலில் ஒன்பது என்ற சொல்லே கிடையாது. பரிபாடலிலும் , வேறு சில சங்க இலக்கியங்களிலும் எட்டிற்கு அடுத்துப் பயன்படுத்தப்பெற்றுள்ள சொல் ' தொண்டு ' என்பதாகும். 'தொண்டு 'என்றால் துளை, அதாவது ஓட்டை என்று பொருள். நம் உடல் ஒன்பது துளைகளைக் கொண்டது.
    இருநிழல் படாமை மூவே ழுலகமும்
    ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதோ
    பாழெனக் காலெனப் பாகென ஒன்றென
    இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
    ஆறென ஏழென எட்டெனத் " தொண்டென"
    - பரிபாடல் 3, வரி 75-79 "தொண்டு " தலையிட்ட பத்துக்குறை எழுநூற்று....
    - தொல்காப்பியம்-1358
    "தொண்டு "படு திவவின் முண்டக நல்யாழ்
    - மலை படு கடாம்-21
    இந்த சொல் எப்படியோ தன் இடத்திலிருந்து வீழ்த்தப்பெற்றுவிட்டது.இந்தத் "தொண்டு " என்ற சொல்லை அதற்குரிய இடத்தில் வைத்து எண்ணியலை வரிசையாகச் சொல்லிப்பாருங்கள்.ஒரு பெரிய குழப்பமே தெளிவாகும்.அதாவது,
    1 ஒன்று
    8 எட்டு
    9 தொண்டு (சறுக்கிய சொல்)

    10 பத்து
    80 எண்பது
    90 தொண்பது (இது தான் இன்றைய
    ஒன்பது)

    100 நூறு
    800 எண்ணூறு
    900 தொண்ணூறு(இன்றைய
    தொள்ளாயிரம்)

    1000 ஆயிரம்
    8000 எண்ணாயிரம்
    9000 தொள்ளாயிரம்(இன்றைய
    ஒன்பதினாயிரம்)

    10000 பத்தாயிரம்
    80000 எண்பதினாயிரம்
    90000 தொண்பதினாயிரம்(இன்றைய
    தொண்ணூராயிரம்)

    ஆக தொண்டு என்ற ஒரு சொல் வழக்கிலிருந்து எப்படியோ வீழ்ததனால்-அதை நிரப்ப ,எண்பதுக்கு அடுத்திருந்த தொண்பது,ஒன்பது என்ற பெயர் மாற்றத்துடன் எட்டிற்கு அடுத்தாற்போல் வந்து உட்கார்ந்து கொண்டது. அதை நிரப்ப எண்ணூறுக்கு அடுத்திருந்த தொண்ணூறு எண்பதிற்கு அடுத்து வந்து உட்கார்ந்து கொண்டது. இந்த சிக்கல் எண்ணியலின் இறுதி வரை பாதித்துள்ளது.
    படிக்கும் மாணவச்செல்வங்கள் , 'நூறு தொடங்கும் முன் தொண்ணூறு எதற்கு வந்தது?' என்று ஆண்டாண்டு காலமாய் ஆசிரியர்களைக் கேட்டு வருகின்றனர். ஆசிரியர்களும் ஏதேதோ சொல்லிச் சமாளித்து வருகின்றனர். உங்களிடம் என் அன்பான வேண்டுகோள்: இனி மேலாவது நம் தமிழ் மொழியின் சொற்களைக் காப்பாற்றுவதில் மிக எச்சரிக்கையாக இருங்கள். முடிந்தவரை தூய தமிழில் உரையாடும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள்.முடிந்தால் இந்த எண்ணியல் சறுக்கலைச் சரிசெய்ய அரசின் மொழி வளர்ச்சித்துறை மூலம் முயற்சி செய்யுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிகவும் பயனுள்ள அரிதான தகவல்...நன்றி தோழி.!

      Delete
    2. மிக்க நன்றி தோழியே..

      Delete
  10. வாழ்த்துகள், வாழ்த்துக்கள்- எது சரி?

     

    ஆன்மீக கட்டுரைகள் நன்றாக உள்ளன ..  நல்  வாழ்த்துகள் என ஒரு நண்பர் மெயில் அனுப்பினார்.. இன்னொருவரோ, இல்லாத கடவுளைப் பற்றி எழுத கூடாது என்ற அறிவு வர வாழ்த்துக்கள் என இன்னொருவர் மெயில் அனுப்ப்பினார்.

     

    ஒருவர் வாழ்த்துக்கள் என்கிறார் ..இன்னொருவர் வாழ்த்துகள் என்கிறார்.

     

    இரண்டில் எது சரியானது? அடுத்து பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் வாழ்த்துக்கள் சொல்ல வேண்டுமா , வாழ்த்துகள் சொல்ல வேண்டுமா?

     

    இதைப்பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் குற்றியலுகரம் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

     

    உ என்ற ஓசையில் சில சொற்கள் முடிகின்றன அல்லவா? ( பசு , பந்து போன்றவை ) . இவை தன் இயல்பான நிலையில் இருந்து குறைந்து ஒலித்தால் குற்றியலுகரம். அதிகரித்து ஒலித்தால் முற்றிய லுகரம்.

     

    இந்த குற்றிய லுகரத்திலேயே பல வகைகள் இருக்கின்றன..

     

    நெடில் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : மாடு , பாகு
    ஆயுதத் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : எஃகு
    உயிர்த் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : வரகு, வரவு, செலவு, மிளகு
    வன் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : கொக்கு , மக்கு, பாக்கு, சாக்கு
    மென் தொடர் குற்றியலுகரம் - உதாரணம் : சங்கு, பங்கு, பந்து, அம்பு, வம்பு
    இடைத் தொடர் குற்றியலுகரம்- உதாரணம்: எய்து, அல்கு

     

    எந்த சொற்களுக்கு பின் க் ச் ப் என்ற புள்ளி வைத்த எழுத்து வரும் என எளிதாக நினைவு வைத்து கொள்வது எப்படி?

     

    இலக்கணம் எல்லாம் இல்லாமல் எளிதாக பார்க்கலாம்.

     

     1 நெடில் எழுத்தில் ஆரம்பிக்கும் இரண்டு சொல் சொற்களுக்கு பின் , புள்ளி வைத்த எழுத்து வராது..

     

    உதாரணம்.. மாடு , ஆடு ....    இதில் ஆடுகள் , மாடுகள் என்று வருமே தவிர ஆடுக்கள் , மாடுக்கள் என்று வராது..

     

    2 பசு , மரு, கணு போன்று குறில் எழுத்தில் ஆரம்பிக்கும் சொற்களுக்கு பின் ,புள்ளி வைத்த எழுத்து வரும்..

     

    பசுக்கள், மருக்கள், கணுக்கள் ( பசுகள், கணுகள் என எழுத்தக் கூடாது  ) 

     

    2 குறில் எழுத்துக்கு பின் வரும் உகார எழுத்துக்கு பிறகு புள்ளி வைத்த எழுத்து வராது..

     

    செலவு, வரவு-  செலவுகள், வரவுகள் என்று எழுத வேண்டும்

     

     

    3 க் ச் ட் த் ப் ற் போன்ற எழுத்துகளுக்கு பின் வரும் உகார எழுத்தை தொடர்ந்து புள்ளி வைத்த எழுத்து வராது..

     

    வாக்கு - வாக்குகள் ( வாக்குக்கள் அன்று )

     

    கணக்கு - கணக்குகள்  

     

    நாக்கு - நாக்குகள்

     

     

    வாத்து- வாத்துகள்

     

     வாழ்த்து  - வாழ்த்துகள் ( வாழ்த்துக்கள் என்பது தவறு )

    ReplyDelete
  11. தமிழில் 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு !
    அவற்றைத் தெரிந்து கொள்வோம்
    அ __எட்டு
    ஆ -----> பசு
    ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
    உ -----> சிவன்
    ஊ -----> தசை, இறைச்சி
    ஏ -----> அம்பு
    ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
    ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
    கா -----> சோலை, காத்தல்
    கூ -----> பூமி, கூவுதல்
    கை -----> கரம், உறுப்பு
    கோ -----> அரசன், தலைவன், இறைவன்
    சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
    சீ -----> இகழ்ச்சி, திருமகள்
    சே -----> எருது, அழிஞ்சில் மரம்
    சோ -----> மதில்
    தா -----> கொடு, கேட்பது
    தீ -----> நெருப்பு
    து -----> கெடு, உண், பிரிவு, உணவு, பறவை இறகு
    தூ -----> வெண்மை, தூய்மை
    தே -----> நாயகன், தெய்வம்
    தை -----> மாதம்
    நா -----> நாக்கு
    நீ -----> நின்னை
    நே -----> அன்பு, நேயம்
    நை -----> வருந்து, நைதல்
    நொ -----> நொண்டி, துன்பம்
    நோ -----> நோவு, வருத்தம்
    நௌ -----> மரக்கலம்
    பா -----> பாட்டு, நிழல், அழகு
    பூ -----> மலர்
    பே -----> மேகம், நுரை, அழகு
    பை -----> பாம்புப் படம், பசுமை, உறை
    போ -----> செல்
    மா -----> மாமரம், பெரிய, விலங்கு
    மீ -----> ஆகாயம், மேலே, உயரம்
    மு -----> மூப்பு
    மூ -----> மூன்று
    மே -----> மேன்மை, மேல்
    மை -----> அஞ்சனம், கண்மை, இருள்
    மோ -----> முகர்தல், மோதல்
    யா -----> அகலம், மரம்
    வா -----> அழைத்தல்
    வீ -----> பறவை, பூ, அழகு
    வை -----> வைக்கோல், கூர்மை, வைதல், வைத்தல்
    வௌ -----> கௌவுதல்,

    ReplyDelete
  12. மலேசியாவில் நடைபெற்ற தனித் தமிழியக்க மாநாட்டில் வெளியிடப்பட்ட நுட்பவியல் கலைச் சொற்கள் :



    1. WhatsApp - புலனம்

    2. youtube - வலையொளி

    3. Instagram - படவரி

    4. WeChat - அளாவி

    5.Messanger - பற்றியம்

    6.Twtter - கீச்சகம்

    7.Telegram - தொலைவரி

    8. skype - காயலை

    9.Bluetooth - ஊடலை

    10.WiFi - அருகலை

    11.Hotspot - பகிரலை

    12.Broadband - ஆலலை

    13.Online - இயங்கலை

    14.Offline - முடக்கலை

    15.Thumbdrive - விரலி

    16.Hard disk - வன்தட்டு

    17.GPS - தடங்காட்டி

    18.cctv - மறைகாணி

    19.OCR - எழுத்துணரி

    20 LED - ஒளிர்விமுனை

    21.3D - முத்திரட்சி

    22.2D - இருதிரட்சி

    23.Projector - ஒளிவீச்சி

    24.printer - அச்சுப்பொறி

    25.scanner - வருடி

    26.smart phone - திறன்பேசி

    27.Simcard - செறிவட்டை

    28.Charger - மின்னூக்கி

    29.Digital - எண்மின்

    30.Cyber - மின்வெளி

    31.Router - திசைவி

    32.Selfie - தம் படம் - சுயஉரு - சுயப்பு

    33 Thumbnail சிறுபடம்

    34.Meme - போன்மி

    35.Print Screen - திரைப் பிடிப்பு

    36.Inkjet - மைவீச்சு

    37.Laser - சீரொளி

    ReplyDelete
  13. Friends..

    Tomorrow I will ask one Tamil question, let's see how many of us comes out with the right answer..

    ReplyDelete
  14. Tamil questions are excellent.Indeed very useful.very good effort admin.👍👍👍

    ReplyDelete
  15. கீழ் கண்ட அனைத்து சொற்களும் குறிப்பது?

    "டக்க,டமரம், டங்கி,டவண்டை,கெத்து"

    ReplyDelete
    Replies
    1. Answer for the above question..

      தமிழர்கள் இசைத்த இசைக்கருவிகள் சிலவற்றை அறிந்து கொள்க.

      "நாகசுரம், திருச்சின்னம்
      எக்காளம், முகவீணை,
      கௌரிகாளம், கொம்பு
      நவுரி, ஒத்து நாகசுரம்
      புல்லாங்குழல், சங்கு,
      துத்தரி, பலிமத்தளம்
      கௌணமத்தளம், சுத்த
      மத்தளம், தவில், பேரிகை
      சந்திரப்பிறை, செண்டை
      டக்க, டமரம், டங்கி,
      டமவாத்தியம், டவண்டை
      இடக்கை, மிருதங்கம்
      முட்டு, நகர், பெரிய உடல்
      கனகத்தப்பட்டை,
      சின்ன உடல், சன்ன உடல், தப்பு, திமிலை,
      சேகண்டி, வீரகண்டி,
      வான்கா, தக்கை, தாளம்
      பிரம்மதாளம்,
      குழித்தாளம், மணி
      கைமணி, கொத்து மணி
      சேமக்கலம், கிடிகிட்டி,
      வீணை, கெத்து,
      உடுக்கை, பம்பை
      கைச்சிலம்பு.

      Thanks to Revathi sis for tamil typing..

      Delete
  16. The above question is an open question to all, anybody who knows the answer can comment.. If not, I will post the answer by 6pm.

    ReplyDelete
  17. ஆறாம் வகுப்பு படிக்கும் எனது மகளின்
    தமிழ் புத்தகத்தை வாங்கிப் பார்த்தேன்.
    அதில், 1-ல் இருந்து 0 வரை, உள்ள எண்களை, தமிழில் எழுதும்படி கேட்கப்பட்டிருந்தது.
    எனக்கு, அது தெரியாது என்பதால், அதை அவளிடமே கேட்டேன்.
    உடனே அவள்.,
    “1 2 3 4 5 6 7 8 9 0
    என்ற எண்ணுக்கு
    முறையே,
    க, உ, ங,ச, ரு, சா, எ, அ, கூ, ய′
    என்றாள்
    “இதை எப்படி மனப்பாடம் செய்தாய்?’ எனக் கேட்டேன்.
    அத்தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி, வாக்கியமாக்கி தமிழ் ஆசிரியை சொல்லிக் கொடுத்ததாக கூறினாள்.
    அந்த வாக்கியம்..,

    “க’ டுகு, 1

    “உ’ ளுந்து, 2

    “ங’ னைச்சு,. 3

    “ச’ மைச்சு, 4

    “ரு’ சிச்சு, 5

    “சா’ ப்பிட்டேன்,. 6

    “எ’ ன, “. 7

    அ’ வன், 8

    “கூ’ றினான்; 9

    “ய’ என்றேன் 0

    மறக்காமல் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவும்👏

    *தமிழை வளர்ப்போம்...*

    ReplyDelete
    Replies
    1. Kozhandhaingaluku use agutho ilayo TET candidates ku idhu romba mukkyam, 2012 and 2017 tet la kuda indha tamil numbers vechu question vandhuchu.. So make use of this mnemonics..

      Delete
    2. ohh...sema....mam..!! Good information mam.. :-)

      Delete
    3. Sundar sir answer kandupudichingala..

      Delete
  18. ilaye...mam.try panren...

    ReplyDelete
    Replies
    1. TET syllabus dha sir, andha words elam oru porula kurikkum. Try sir..

      Delete
    2. enaal mudintha varai muyerchi panren mam...mathavangalum try panitu than irupaanga...time kodunga nan ilanaalum vera yarathu ans panvanga...mam.!

      Delete
  19. Hii am new in this website all the qustions are very super

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here