Skip to main content

வாழ்க்கையின் நீதி கதை!

தற்போதைய காலகட்டத்திற்கு  இந்த கதை இந்த சமூகத்திற்கு அவசியம் தேவை!


🐀🐀எலிப்பொரியும் எஜமானியும். (சிறு கதை)🐀🐀


ஒரு பண்ணயார் வீட்டில் ஒரு எலி வசித்து வந்தது...


ஒரு நாள் அது தனது இரவு நேர இரை தேடப் புறப்பட்டுக் கொண்டிருந்தது.


எலி வலையை விட்டு தலையை உயர்த்திப் பார்த்தது.


வீட்டின் எஜமானனும்,

எஜமானியும்,

 ஒரு பார்சலைப் பிரித்துக் கொண்டிருந்தார்கள்.


ஏதோ நாம் சாப்பிடக்கூடிய ஒரு பொருள் தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது எலி.


அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.


அதைப்பார்த்ததும் அந்த எலிக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது...


உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது...


"பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார்.


எனக்கு பயமாக இருக்கிறது என்றது.."


இதைக் கேட்ட கோழி விட்டேற்றியாகச் சொன்னது.."


உன்னைப் பொறுத்தவரை இது கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.


நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்றது கோழி.."


உடனே அது ..

பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் சென்று..

அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது.


வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு,

"நான் எலிப் பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்..." என்றது.


மனம் நொந்த எலி... அடுத்தாக...

பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது...


ஆடும் அதேபதிலைச் சொல்லியது.


அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை...


"எலிப்பொறியை பார்த்து,

என்னையும் பயப்படச் சொல்கிறாயா?"

என்று நக்கலும் அடித்தது.


அன்று இரவு...

எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு...


பண்ணையாரும்,

அவர் மனைவியும், தூங்கப் போயினர்...


ஒரு அரை மணி நேரத்தில்,,

*"டமால் "* என்றொரு சத்தம்.


எலிதான் மாட்டிக் கொண்டு விட்டது என்று என்னிய  பண்ணையார் மனைவி ஓடிவந்து..

எலிப்பொறியைத் கையில் தூக்கினாள்.


ஆனால்...

எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்பு ஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.


எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள்.


விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்ட பின்னும்..

பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.


அருகில் இருந்த ஒரு மூதாட்டி...


"பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு.."

சிக்கன் சூப் வைத்துக் கொடுத்தால் நல்லது.."

என்று யோசனை சொன்னாள்.


கோழிக்கு வந்தது வினை.


கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது.

கோழி உயிரை விட்டது.


அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை.


உறவினர்கள் சிலர் நலன் விசாரிக்க வந்தார்கள்...


அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள்...


வான்கோழியும் உயிரை விட்டது.


சில நாட்களில் பண்ணையாரம்மாவின் உடல் நலம் தேறியது.


பண்ணையார் தன் மனைவி பிழைத்ததைக் கொண்டாட 

ஊருக்கே விருந்து வைத்தார்.


இந்த முறை ஆட்டின் முறை.....


விருந்தாக ஆடும் உயிரை விட்டது..


நடந்த அத்தனை நிகழ்வுகளையும் எலி வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.


பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.


"எலி தப்பித்து விட்டது. அப்பாடா..."


கதையின் நீதி :- 


கதையின் நீதி :- உங்களுக்கு அருகில் வசிப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் 

"என்ன..? என்றாவது கேளுங்கள்.


ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை?அது எப்போது வரும்? என்பது யாருக்கும் தெரியாது.


அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம்.


அடுத்த முறை... நம்முடையதாகவும் இருக்கலாம்..

Comments

  1. Wishing everyone a blessed morning..

    ReplyDelete
  2. வணக்கம் அட்மின் மேடம் டிஆர்டி எப்போ வரும்

    ReplyDelete
  3. பலர் பகல் கனவு கண்டுட்டு இருந்தாங்க எல்லாம் போச்சா

    ReplyDelete
    Replies
    1. பகல் கனவை நினைவாக்க முயற்சி பண்ணாங்க

      Delete
  4. கொஞ்ச நஞ்சம் ஆட்டமா டா ஆடுனிங்க, வெச்சாங்களா ஆப்பு

    ReplyDelete
    Replies
    1. மதிப்பிற்குரிய சரவணன் அவர்களே நீங்க என்ன சொல்ல வர்றீங்க என்பதை தெளிவாக கூறுங்கள்
      TRT வருமா வராதா

      Delete
    2. அருள் நண்பரே நிச்சயமா டிஆர்டி தான் வரும் அதில் இன்னுமா சந்தேகம்

      Delete
    3. நன்றிகள்

      Delete
  5. Hi madam hope you are doing good

    ReplyDelete
  6. Trt varum but 2013 ku applicable agathu so bro and sis yarum yaraiyum thakki pesa vendam

    ReplyDelete
    Replies
    1. Apdi patha 2017 kum
      Thana porunthathu sir

      Delete
    2. 2013 க்கு பொருந்தாதுனா ....எக்ஸாம்க்கு eligible இல்லையா

      Delete
    3. Apdilam edhum ila, trt tet clear pana ellarukum porundhum..

      Delete
    4. Vela venumna trt eludhi dhan aganum..

      Delete
  7. Trt வருமா??????????

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here