Skip to main content

Posts

Showing posts from February, 2020

TODAY'S THOUGHT..

*ஓஷோவும்_அகப்பேய்_சித்தரும்* தூராதி தூரமடி அகப்பேய் தூரமும் இல்லையடி *அகப்பேய்_சித்தர்* ஒரு  எளிய விவசாயி, அவன் வாழ்நாளில்  முதல் முறையாக ஒரு  மலைக்குச் சென்று கொண்டிருந்தான்.          அவனுடைய  வயலிலிருந்து அந்த  மலையின் பசுமை  நிறைந்த  உச்சிகள் தெரிவதால், அவனுள் அடிக்கடி  அவற்றை அருகில்  சென்று  பார்க்க வேண்டும்  என்று  எண்ணம் ஏற்பட்டது.  ஆனால்  ஏதோ காரணங்களினால்  அவனது பயணம் ஒத்திப் போடப்பட்டு வந்ததால் அவன் அங்கு  செல்ல முடியவில்லை.           சென்ற முறை அவனிடம்  ஒரு விளக்கு இல்லை என்பதற்காக அவன் மலைக்குச் செல்வது தடைப்பட்டு விட்டது.   ஏனெனில்  இரவே மலையைச் சென்றடைவது மிகவும்  அவசியம்.  சூரிய உதயத்திற்குப் பிறகு  அந்த கடினமான மலை மீது  ஏறுவது சிரமம்.           இப்போது அவன் தன்னுடன் ஒரு விளக்கையும் எடுத்து வந்திருந்தான்.  மேலும்  மலையில் ஏறவேண்டும் என்ற அவாவினால் அவன் இரவில்  தூங்கவும் இல்லை.          அவன் இரவு இரண்டு  மணிக்கு  எழுந்து  மலைக்குப் புறப்பட்டான்.  ஆனால்  கிராமத்தை விட்டு  வெளியில் வந்ததும் அவன் தயங்கி நின்று விட்டான்.         அன்று அமாவாசையாதலால்

Tet - ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடு - தகுதித் தேர்வு எழுதியவர்கள் குற்றச்சாட்டு!

தமிழ்நாடு அரசுப் பணி யாளர் தேர்வாணையத் தில் நடந்த முறைகேடுக ளையடுத்து ஆசிரியர் தகுதித் தேர்விலும் பெரிய அளவில் முறைகேடு நடந் துள்ளதாக பட்டதாரிகள் குற்றம் சாட்டுகின்றனர் . இது குறித்து , 2013ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நலச்சங்கத் தின் மாநில ஒருங்கிணைப் பாளர் இளங்கோவன் , மாநில தலைவர் வடிவேல் சுந்தர் ஆகியோர் கூறியதா வது : கடந்த 2012ம் ஆண்டு முதன் முதலாக தமிழகத் தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி பணி நியம னம் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது . அதில் தாள்ஒன்று இடை நிலை ஆசிரியர்களுக்கும் , தாள் இரண்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடத் தப்படும் என்று தெரிவிக் கப்பட்டது . அந்த தேர்வை தமிழகம் முழுவதும் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் எழுதினர் . ஆனால் அவர்களில் வெறும் 2448 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் . அதனால் தேர் வில் மதிப்பெண் தளர்வு வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தனர் . அதனால் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்தது . இரண்டாவது முறை நடந்ததேர்வில் 19 ஆயிரத்து 261 பேர் தேர்ச்சி பெற்றனர் . ஆனால் அவர்களின் மதிப் பெண்கள் குறித்த விவரங் கள

சருமத்திற்கு மிருதுவாக்கும் பச்சை திராட்சை

* சருமத்தை மிருதுவாக்கி பொலிவடைய வைக்கிறது பச்சை திராட்சை. தினமும் 4 பச்சை திராட்சையை கைகளால் கசக்கி சாறு எடுத்து, முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், சருமம் மிருதுவாகும். * எண்ணெய்ப் பசை சருமமாக இருந்தால், அரை டீஸ்பூன் பச்சை திராட்சைச் சாறுடன் அரை டீஸ்பூன் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். இதனால், எண்ணெய்ப் பசை நீங்கி, பளிங்குபோல் முகம் பிரகாசிக்கும். * பருத்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலை சாறு, அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இது பேஸ்ட்டாகும் சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும்.

10, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர்: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்பது பற்றி அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார். திருப்பூரில் முதலிபாளையம் மற்றும் 15 வேலம்பாளையம் பகுதிகளில் அரசு பள்ளிகளில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை திறந்து வைக்க வந்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: 12-ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 2-ஆம் தேதி ஆரம்பித்து 21ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ஆம் தேதி வெளியிடப்படும்.பத்தாம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி துவங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியிடப்படும். 11ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் மே 14-ஆம் தேதி வெளியிடப்படும். இந்தாண்டு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான நேரம் இரண்டரை மணி நேரத்திலிருந்து மூன்று மணி நேரமாக உயர்த்தி வழங்கப்படுகிறது. 10 மணிக்கு துவங்கி 1:15 மணி வரை நடைபெறும் 15 நிமிடம் கேள்வித்தாளை படிப்பதற்கான நேரம் ஒதுக்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை 8 லட்சத்து 16 ஆயிரத்து

படித்ததில் பிடித்தது..

சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு புகாா்: தகுந்த ஆதாரம் அளித்தால் நடவடிக்கை: அமைச்சா் செங்கோட்டையன்

தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்படும் புகாருக்கு தகுந்த ஆதாரம் அளித்தால் அதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் விளக்கமளித்துள்ளாா். தமிழகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோவில் தோச்சி பெற்றோா் கூட்டமைப்பின் சாா்பில் அதற்கான ஆதாரங்கள் அடங்கிய மனு சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியா் தோவு வாரிய அலுவலகத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்டது. இந்தப் புகாா் குறித்து அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையனிடம் கேட்டபோது அவா் கூறியது: தமிழகத்தில் கடந்த 2012-13 -ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித் தோவில் முறைகேடு நடந்ததாகக் கடிதம் வந்தது. அதில் கையெழுத்து இல்லை. இந்த மொட்டைக் கடிதமே அனைத்து இடங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அது குறித்து தீவிர விசாரணை நடத்தினோம். விசாரணையின் முடிவில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. தகுந்த ஆதாரத்துடன் புகாா் அளித்தால் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட

மூன்று ஆண்டாக பூமியை சுற்றும் 'குட்டி நிலா'

கேம்பிரிஜ்: 'கடந்து மூன்று ஆண்டுகளாகக் குட்டி நிலவு ஒன்று பூமியை சுற்றி வருகிறது. ஆனால், நீண்ட காலத்திற்கு அந்த நிலவு நம்முடன் இருக்காது' என, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். விண்வெளியில் உலவும் சிறு கோள்கள் குறித்து ஆய்வுகளை நிகழ்த்தி வரும், கேம்பிரிஜில் உள்ள, 'மைனர் பிளானட் சென்டர்' விடுத்துள்ள செய்திக்குறிப்பு:பூமியைச் சுற்றி வரும் புதிய, 'குட்டி நிலவு' ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு, '2020 சிடி' எனப் பெயரிட்டுள்ளோம். கடந்து மூன்று ஆண்டுகளாக இந்தக் குட்டி நிலவு பூமியை வலம் வந்துகொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இதைக் கண்டறியாமலேயே இருந்திருக்கிறோம். இந்த நிலவு நம்முடன் நீண்ட காலம் இருக்காது. இது பூமியை மோதுவதற்கான சாத்தியமும் உண்டு. ஆனால், மிகவும் சிறியதாக இருப்பதால், தரையைத் தொடும் முன் வளிமண்டலத்திலேயே எரிந்து விடும். இதற்கு முன்னர், 1991ம் ஆண்டு '1991 விஜி' எனப் பெயரிடப்பட்ட குட்டி கோள் ஒன்று பூமியைச் சில ஆண்டுகள் சுற்றி வந்தது. பின்னர் அது வேறு பாதையில் பூமியை விட்டு வெகு தூரம் சென்றது. அதேபோல், 2006-ம் ஆண்டு இது போன்ற ஒரு விண்கல் பூமியைச் சு

கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்குமாறு டிஎன்பிஎஸ்சிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

எழுத்துத் தோவில் அதிக மதிப்பெண்கள் பெற்று இணையதளத்தில் சான்றிதழ்களை சரியாகப் பதிவேற்றம் செய்யாதவா்களை, சனிக்கிழமை (பிப். 29) நடைபெற உள்ள கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் கோவையைச் சோந்த திருமலைச்சாமி, தருமபுரியைச் சோந்த தேவேந்திரன், திருவாரூரைச் சோந்த கேசவமூா்த்தி உள்ளிட்ட பலா் தாக்கல் செய்த மனுவில், 'இளநிலை உதவியாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 6 ஆயிரத்து 491 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோவாணையம் (டிஎன்பிஎஸ்சி) கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி அறிவிப்பாணை வெளியிட்டது. இதற்கான எழுத்துத் தோவு கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி நடைபெற்றது. இந்த எழுத்துத் தோவில் தோச்சி பெற்றவா்கள், தங்களது கல்விச் சான்றிதழ்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது. இணையதளத்தில் முறையாக சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவில்லை எனக் கூறி, பலரை கலந்தாய்வுக்கு அழைக்கவில்லை. எனவே, எழுத்துத் தோவில் தோச்சிப் பெற்று சான

இன்றைய சிந்தனை..

ஒரு ஊரில் ஒரு காக்கா இருந்துச்சாம் . அது ரொம்ப மகிழ்ச்சியா இருந்துச்சு, ஒரு கொக்கை பார்க்கும் வரை.. அது கொக்கை பார்த்து சொல்லிச்சாம். நீ வெள்ளைய எவ்வளவு அழகா இருக்கே . கருப்பா இருக்கும் என்னை எனக்கு பிடிக்கலை என்றது . கொக்கு சொன்னது, நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியை பார்க்கும் வரை. . அது இரண்டு நிறங்களில் எவ்வள்வு அழகா இருக்கு தெரியுமா ? என்றது . காகமும் கிளியிடம் சென்று, கேட்டவுடன் அது சொன்னது, உண்மைதான் நான் மகிழ்ச்சியாத்தான் இருந்தேன் ,ஆனால் ஒரு மயிலை பார்க்கும் வரை, அது பல நிறங்களில் எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ? என்றது. உடனே காகமும் மயில் இருக்கும் ஒரு மிருக காட்சி சாலை சென்று மயிலை பார்க்க , அங்கு ஆயிரக்கணக்கான ஜனங்கள் மயிலை பார்க்க காத்திருக்க , காகம் நினைத்தது ..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி என்று . அழகு மயிலே , உன்னை காண இவ்வளவு பேர் .. என்னை பார்த்தாலே இவர்கள் முகத்தை திருப்பிகொள்கிறார்கள் . என்னை பொறுத்தவரை உலகிலேயே நீதான் அதிக மகிழ்ச்சியானவர் , என்றது . மயில் சொன்னது. அன்பு காகமே , நான் எப்பவும் நினைத்து கொண்டிருந்தேன் நான் தான் அழகு மேலும் மகிழ்ச்சியான பறவை எ

மாரடைப்பு வராமல் தடுக்க உணவில் உப்பைக் குறையுங்கள்..!

உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்க முடியும் என்று ஆய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாறி வரும் உணவுப்பழக்கவழக்க முறைகளினால் இன்று மாரடைப்பு என்பது சாதாரணமாகி விட்டது. பெரும்பாலும் உணவு முறைகளால்தான் மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறும் நிலையில், உணவில் உப்பைக் குறைப்பதன் மூலமாக மாரடைப்பு வருவதைத் தடுக்கலாம் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். பிரிட்டிஷ் இதழான பி.எம்.ஜேவில் வெளியிடப்பட்ட ஆய்வில் உடலில் சோடியத்தின் அளவு அதிகரிக்கும்போது ஏற்படும் மாற்றங்கள், விளைவுகள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இதில், உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்களில் ஒன்று, சோடியம் அதிகளவில் உடலில் சேருவது என கண்டறியப்பட்டுள்ளது. சோடியம் குளோரைடு(உப்பு) பொதுவாகவே அனைத்து உணவுகளிலும் சுவைக்காக சேர்க்கப்படுகிறது. அனைத்து தயாரிப்புகளிலும் சேர்க்கப்படுவதால் நாம் எதிர்பாராத விதத்தில் உடலில் உப்பு சேருகிறது. உப்பு அதிகளவில் உடலில் சேரும்போது, முதற்கட்டமாக உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்தத்தினால் இதயத்திற்கு ஆக்சிஜன், உணவைக் கொண

"மகிழ்ச்சி வகுப்புகள்" மாணவர்களுக்கு ஊக்கமளிக்கின்றன

TODAY'S THOUGHT..

ஆங்கில வழி கல்வியின் தாக்கம் நம் குழந்தைகளின் தாய்மொழித் திறனை வெகுவாகப் பாதித்திருக்கிறது. யானையையும் புலியையும் இன்றைய குழந்தைகளுக்கு ‘எலிஃபண்ட், டைகர்’ என்கிற இரு சொற்களைக் கொண்டுதான் அடையாளம் தெரிகிறது என்பார் தியடோர் பாஸ்கரன்.  யானையோ புலியோ இல்லாத ஒரு நாட்டின் மொழியே ஆங்கிலம், ஆனால் இம்மொழி யானையும் புலியும் வாழும் தமிழ்நிலத்தைச் சார்ந்த குழந்தைகளின் தாய்மொழியை சிதைத்திருப்பது கொடும் நிகழ்வு. தமிழ் மொழியில் புலியைக் குறிக்க, புலி, வேங்கை, உழுவை, மறுவ, வயமா, வயப்புலி, கடுவாய், வாள்வரி, வெல்லுமா, பாய்மா, வியாக்கிரம், வல்லியம், தரக்கு, குயவரி, கொடுவரி, புல் என பல சொற்கள் உள்ளன. புல் என்றால் புல்லுதல் அதாவது பொருந்துதல் அல்லது தழுவுதல் எனப் பொருள். புல் என்பது புல்லி ஆகமாறிப் புலியாகத் திரிந்தது. இதற்கு நேரடிப் பொருள் முன் கால்களால் தழுவும் விலங்கு. இது நடத்தைப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டு அறிவியல் முறையில் சூட்டப்பட்டிருக்கும் பெயர்.  ஆங்கிலத்தில் பயிலும் டைகர் என்கிற சொல்லோ பாபிலோனிய ஆறான டைகிரிஸ் எனும் சொல்லிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. அதாவது ஒரு அய்ரோப்பியர் முதன

இனி வகுப்பிலும் குழந்தைகள் தூங்கலாம்!'- ஃபிட் இந்தியாவின் ஒரு `வாவ்' முன்னெடுப்பு.

தினந்தோறும் பள்ளியிலேயே தியானம் செய்ய மாணவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்!' - ஃபிட் இந்தியாவின் அறிவுரை. மத்திய அரசு சார்பில், உடல்நலம் சார்ந்த அக்கறையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்துவதற்காக `ஃபிட் இந்தியா' என்ற இயக்கம், கடந்த வருடம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் சார்பாக மார்ச் மாதம் முழுக்க, மனநல ஆரோக்கியத்துக்கான மாதமாக அனுசரிக்கப்படவுள்ளது. இதன் ஓர் அங்கமாக, மார்ச் முழுவதும் பள்ளி மாணவர்களிடையே மனநல ஆரோக்கியத்துக்கான சில முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அந்த வகையில், கல்வித்துறை சார்பில் இந்தியா முழுவதிலுமுள்ள பள்ளிகளுக்கு சில வேண்டுகோள்கள் வைக்கப்பட்டுள்ளன. அவை, * அடுத்த மாதம் முழுக்க, பள்ளி வேலை நாள்களின்போது ஏதேனும் 5 நிமிடங்களுக்கு பள்ளியிலேயே மாணவர்கள் தூங்க அனுமதிக்கப்பட வேண்டும். Power Nap எனப்படும் குட்டித்தூக்கம் கிடைக்கப்பெற்றால், மாணவர்களால் புத்துணர்வோடு செயல்பட முடியும் என்ற அடிப்படையில், இந்தக் கருத்து கூறப்பட்டுள்ளது. * மூளையை உற்சாகப்படுத்தும் விதத்திலான, இண்டோர் விளையாட்டு வகைகளான குறுக்கெழுத்து, சுடோகோ, வார்த்தை விளையாட்டுகள் போன்றவற்றுக்கு மாணவர்களை அன்றாட

புதியதாக தொடங்கப்பட்ட LKG, UKG வகுப்புகளுக்கு ரூ 70,000 மதிப்பில் தளவாட சாமான்கள், கல்வி உபகரணங்கள் மற்றும் விளையாட்டுப் பொருள்கள் வாங்க நிதி ஒதுக்கீடு

தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு சில டிப்ஸ்...

தேர்வு எழுதுவதில் நேர நிர்வாகம் மூன்று மணிநேரத்தில் நீங்கள் அதிகபட்சம் 100 மதிப்பெண்கள் பெறலாம் . அதாவது 180 நிமிடங்களில் 100 மதிப்பெண்கள் . அப்படியென்றால் ஒரு மதிப்பெண்ணுக்கு 1 . 8 நிமிடங்கள் . இதை ஒன்றரை நிமிடம் என்று வைத்துக்கொள்வோம் . அதாவது ஒரு மதிப்பெண்ணுக்கு ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும் . இப்படிச் செய்தால் இரண்டரை மணிநேரத்தில் தேர்வை எழுதி முடித்துவிடலாம் . மீதமுள்ள நேரத்தில் விடைகளைச் சரிபார்த்துக்கொள்ளப் பயன்படுத்தலாம் . தேர்வின் முந்தைய நாள் செய்யவேண்டியவை 1 . புதிதாக எதையும் படிக்காதீர்கள் . 2 . குறிப்புகளை வைத்துப் படியுங்கள் . 3 . படித்த அனைத்தையும் தூங்கும் முன் நினைவுகூருங்கள் . 4 . இரவு கண்டிப்பாக ஐந்து மணிநேரமாவது தூங்குங்கள் . 5 . மறு நாள் தேர்வுக்குத் தேவையான விஷயங்களைப் பட்டியலிட்டு , அனைத்தையும் மறக்காமல் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள் . தேர்வு அன்று . . . 1 . அதிகாலை எழுந்ததும் இரவில் நினைவுகூர்ந்தவற்றை மீண்டும் நினைத்துப் பாருங்கள் . 2 . குளித்து , உடுத்து , உண்டு , வணங்கித் தன்னம்பிக்கையோடு தேர்வுக்குச் செல்லுங்கள் . 3 . அரைமணி நேரம் முன்னதாகவே

ஆசிரியருக்கான பெருமை இன்னும் குறையவில்லை கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சி

ஆசிரியர்களுக்கான பெருமை, தமிழகத்தில் இன்னும் குறையவில்லை என திருப்பூரில் நடந்த ‘அன்பாசிரியர்’ விருது வழங்கும் விழா வில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச் சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். ராம்ராஜ் காட்டன், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் மற்றும் தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில் ‘அன்பாசிரியர் விருது’ வழங் கும் விழா திருப்பூரில் நேற்று விமரிசையாக நடைபெற்றது. மாணவர்களுக்கு தனித்துவமான கல்வியை அளிப்பதோடு நின்றுவிடாமல், திறமை, சமூக அக்கறை, நற்பண்புகளை ஊட்டி, பள்ளியையும் மேம்படுத்திவரும் ஆசிரியர்கள் பலர் பொதுவெளியில் இன்னும் அறியப்படாமல் உள்ளனர். அத்தகைய ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ் ‘அன்பாசிரியர்’ என்ற விருதை வழங்குகிறது. இவ்விருதுக்காக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் தங்களின் செயல்பாடுகள் பற்றிய விவரத்தொகுப்பை ஆன்லைன் மூலமாகவும், தபால் மூலமாகவும் அனுப்பியிருந்தனர். மூத்த கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அடங்கிய குழு, விவரத் தொகுப்புகளைப் பரிசீலனை செய்தது. இதையடுத்து தமிழகத்தில் மாவட்டத்துக்கு ஒருவர், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவர்

டிரம்பின் பயணம்..

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பையும், அவரது மனைவி மெலனியாவையும் சுமந்து வரப்போகிற அதிநவீன விமானம். இது பறக்கும் வெள்ளை மாளிகை. யுனைட்டெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டிருக்கும். அமெரிக்க தேசியக்கொடியும், ஜனாதிபதியின் முத்திரையும் இடம் பெற்றிருக்கும். 1¾ கிரவுண்ட் விமானம் இந்த விமானம் 3 அடுக்குகளை கொண்ட பிரமாண்ட விமானம். இதன் மொத்த பரப்பளவு 4 ஆயிரம் சதுர அடி. கிட்டத்தட்ட 1¾ கிரவுண்ட். டிரம்புக்கும், அவரது மனைவிக்கும் சொகுசான பிரத்யேக சூட்... அதிலும் எக்சிகியூடிவ் சூட்... டிரம்பின் மூத்த ஆலோசகர்கள், அவரது பாதுகாப்பை கவனிக்கும் ரகசிய சேவை அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பிற விருந்தினர்கள் என அனைவருக்கும் அசத்தலான தனித்தனி அறைகள்... 100 பேருக்கு அறுசுவை உணவு ஒரே நேரத்தில் 100 பேருக்கு அறுசுவை உணவுகளை சமைத்து சுடச்சுட பரிமாற 2 சமையலறைகள்... ஒரு மருத்துவ அறை... எப்போதும் ஒரு டாக்டர்... மருத்துவ அறையை ஆபரேஷன் தியேட்டராக மாற்றிக்கொள்ளவும் முடியும். இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மீது ஒரு தாக்குதல் நடைபெற்றால், எ

TET முறைகேடு என மொட்டை கடிதம் வந்துள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி!!

வேதியியல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிநியமனம் எப்போது?

TRB முதலில் வெளியிட்ட முடிவுகளில், வேதியியல்  ஆசிரியர்கள் தேர்வின் இடஒதுக்கீடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேல் பட்டியலை ரத்து செய்ய வேண்டும் மற்றும் இட ஒதுக்கீடு விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிய மெனு உருப்படி தயாரிக்க வேண்டும் என்றும் தேர்வர்கள் வலியுறுத்தினார். வேதியியல் பாடத்தில், பொதுத் தேர்வில் வெற்றி பெற்றவர் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களைப் பொதுப்பிரிவில் சேர்க்காமல் , இடஒதுக்கீட்டுப் பிரிவில் சேர்த்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன . அந்த வழக்கில் நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அவர்கள் ஆசிரியர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு விதிகளையே தேர்வு வாரியம் புரிந்து கொள்ளவில்லை என்று கருத்து தெரிவித்தது மட்டுமின்றி , வேதியியல் பாட ஆசிரியர் தேர்வுப்பட்டியலை ரத்து செய்து விட்டு , இடஒதுக்கீட்டு விதிகளை முழுமையாக கடைப்பிடித்து புதிய தேர்வுப் பட்டியலை அடுத்த இரு வாரங்களுக்குள் தயாரித்து வெளியிட வேண்டும் என்று ஆணையிட்டார். நீதிமன்ற உத்தரவை கண்டுகொள்ளாத ஆசிரியர் தேர்வு வாரியம் மற்ற பாடங்களுக்கு மட்டும் பணிநியமனத்தையே நடத்தி முடித்து விட்டது. மேல்முறையீடு செய்ய

பள்ளிக் கல்வியில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரத்தை சரிபாா்க்க உத்தரவு

சென்னை: மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை வெளியிட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்- மாணவா் விகிதாசாரத்தைச் சரிபாா்க்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடா்பான ஆய்வுக்கூட்டம் சென்னையில் வரும் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதங்கள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களுக்கான ஆசிரியா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரங்களில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிப்ரவரி 25, 26 ஆகிய தேதிகளில் சென்னையில் கலந்தாய்வுக் கூட்டத்துக்கு தொடக்கக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதுகுறித்து, தொடக்கக் கல்வி இயக்ககம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: மாநிலம் முழுவதுமுள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியா், மாணவா் விகிதாசாரம் வரையறுக்கப்பட்ட அளவில் உள்ளதா என்பதை மாவட்ட வாரியாக ஆய்வு செய்து உண்மைத் தகவல் அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும். மேலும

ஆத்திரம் அழிவைத்தரும்..

ஆத்திரம்' என்பது பரபரப்பு அல்லது சினம் எனலாம். ஆத்திரக்காரன் கொண்டவன் எப்போதும் பரபரப்பு உடையவனாகவோ,அல்லது கோபம் உடையவனாக. இருப்பான்.. அப்போது அவன் செய்யும் எந்த செயலும் தோல்வியில்தான் முடியும்.மற்றும் அவ்வேளையில் எதையும் தீர அல்லது நன்கு யோசிக்கும் நிலையில் அவன் இருக்க மாட்டான். அதனால் அவ் வேளையில் அவன் செய்யும் செயல்கள் அனைத்தும் தவறாகவே போகும். மங்கோலிய மாவீரர் செங்கிஸ்கான் ஒருநாள் வேட்டைக்குச் சென்றார்.செங்கிஸ்கான் தனது கரத்தில் ஒரு ராஜாளி கழுகை ஏந்தி இருந்தார். அதிக தூரம் நடந்து சென்றதால் களைப்பு ஏற்ப்பட்டது. தாகம் எடுத்தது. அப்போது ஒரு பாறையிலிருந்து நூல் இழைபோல் தண்ணீர் ஒழுகிக் கொண்டிருந்தது. ஒரு குவளையை எடுத்துக் கொண்டு நீர் ஒழுகும் இடத்திற்கு சென்று நீரைப் பருக சென்றார். ராஜாளி வேகமாக பாய்ந்து சென்று குவளையைத் தட்டிவிட்டது. மீண்டும் மீண்டும் வௌ்ளிக் குவளையை ராஜாளி தட்டி விட்டது. ராஜாளியின் அடாவடி. இந்த இரண்டாலும் செங்கிஸ்கானுக்கு அளவற்ற ஆத்திரம் பொங்கியது. வாளால் ராஜாளியை வெட்டினார். ராஜாளி துடி துடித்துக் கொண்டு     இருந்தது. மீண்டும் செங்கிஸ்கான

தென்னையை விதைத்தவன் தின்றுவிட்டுச் சாவான், பனையை விதைத்தவன் பார்த்துவிட்டு சாவான் -பழமொழியின் உண்மையான விளக்கம்

இந்தப் பழமொழியைக் கூறியே, நம் மக்கள்  பனை விதைப்பதைக் கைவிட்டு விட்டனர்.ஆனால் இதிலுள்ள உண்மை என்னவெனில்… தென்னையை_விதைப்பவன், அது குறுகிய காலத்தில் வளர்ந்து குருத்து, இளநீர், தேங்காய், தேங்காய் சிரட்டை, கீற்று, பிஞ்சு, நார் மற்றும் தென்னம்பாளை, தென்னங்கல், கொப்பரை, எண்ணெய், மரசாமான்கள் என பல பொருட்களின் நன்மைகளை கொண்ட உணவுப் பொருட்களைத் தின்று அனுபவித்துவிட்டு வயதாகி சாவான் என்பதே உண்மை…. பனையை_விதைப்பவனோ, முதலில் விளைவிக்கும் தலைமுறை பனையின் நன்மைகளை முழுமையாக அனுபவிக்க இயலாது என்பதே உண்மை…மேலும் அது வளர பல ஆண்டுகள் ஆகும் எனவே பார்த்துவிட்டு சாவான் என்பது கிராமத்து பழமொழி… பனையை விதைத்தவரின் அடுத்த சந்ததியருக்கு பனைக்குருத்து, பனையோலை, நுங்கு, பதநீர், பனம்பழம், பணங்கூழ், பனைஎண்ணை,பங்கல்கண்டு, பனஞ்சர்க்கரை, கருப்பட்டி மற்றும் மரசாமான்கள் என பல நற்பலன்களை அள்ளித்தருவதோடு நாட்டு மருத்ததுவத்திற்கு பெரும்பங்கினை அளிக்கவல்லது என்பதே உண்மை… இப்பழமொழியின் உண்மையரியாமல்… தென்னை விதைப்பவன் தேங்காயை உண்பதினால் அதிக கொழுப்பு சேர்ந்து நோய்கள் பீடித்து இறந்துபோவான் என்பதும் வதந்தியே… பனையை விதைப்பவ

அடிக்கடி கை கால் மரத்து போவதற்கான காரணங்கள் என்ன?

உடலில் உள்ள உறுப்புகள் மரத்து போவது என்பது நோய்  அல்ல இருப்பினும் நோய்கள் ஏற்படுவதற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம். குறிப்பாக நம் உடலில் எங்கயாவது மரத்து போனால் அது நம் மூளை, முதுகுத்தண்டு வடத்தில் ஏதேனும் பிரச்சனை என்ற அறிகுறியாகும். நம் உடலில் இரண்டு கால்களும் மரத்து போனால் அது சர்க்கரை நோய்களுக்கான அறிகுறியாகும். அதாவது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது என்ற அறிகுறியாகும். சிலருக்கு பல ஆண்டுகளாக இந்த மரத்துப்போதல் பிரச்சனை இருந்தால் அது மரபு அணுக்களின் கோளாறாக கூட இருக்கலாம். அதேபோல் ஏதேனும் ஆன்டிபயாடிக் மாத்திரை மற்றும் புற்று நோயை குணப்படுத்தும் மாத்திரை என்று தொடர்ந்து நீங்கள் மாத்திரை எடுத்து கொண்டிருந்தாலும் கை, கால்கள் அடிக்கடி மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். தைராய்டு ஹார்மோன்களின் சுரப்பிகள் குறைந்தாலும் இந்த கை, கால்கள் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும். உடல் எடை அதிகரித்து உடலில் அதிகளவு கொழுப்புகள் சேர்ந்தாலும் இந்த மரத்து போகும் பிரச்சனை ஏற்படுகிறது. வைட்டமின் B12 குறைபாடுகள் இருந்தாலும் இந்த கை கால் மரத்து போகும் பிரச்சனை ஏற்படும், அதேபோல் தொழுநோயால் பாதிக்கப்ப

ஒரு தோழியின் டைரியிலிருந்து..

வீடு_முழுவதும்_தோரணங்கள், கல்யாண அலங்காரங்கள், வீட்டில் முதல் திருமணம்! மகளின் திருமணம்! திருமணமாகி இரண்டு நாட்கள் முடிந்துவிட்டது! என்னைத்தவிர எல்லோருக்கும் சந்தோஷம்! எப்படி பிரிந்து இருக்கப்போகிறேன் என்பது தான் என் கஷ்டமும் கவலையும்! இவ்வளவு பெரிய வீட்டை கட்ட முதல் செங்கல் எடுத்து கொடுத்தது அவள்தான்! அவள் பிஞ்சு கைகளை செங்கல் சிராய்த்து விடும் என்று கைமுழுவதும் துணியால் சுற்றி எடுத்து கொடுக்க சொன்னேன்! இன்று அவளை அனுப்புவதற்காக வாங்கிய விலையுயர்ந்த காரும் ரோஜாக்களால் சுற்றப்பட்டு இருக்கிறது! விடிய விடிய நானே தான் விரும்பி சுற்றி அலங்கரித்தேன்! இப்போது வழியனுப்ப முடியாமல் ரூமுக்குள் அடைந்து உட்கார்ந்து இருக்கிறேன்! இதழ்களும் இமைகளும் மட்டுமே வெடிக்கும் அழுகைக்கு வேலி போட்டு காப்பாற்றிக்கொண்டு இருக்கின்றன! கிளம்ப தயாராகி விட்டார்கள், யாரும் என்னை கூப்பிட வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்! எல்லோருக்கும் என்னை புரியும், அதனால் கட்டாய படுத்தமாட்டார்கள்! கிளம்புவதற்கு முன் என் குழந்தை வந்தது! அவள் குழந்தையாக இருக்கும்போது அம்மா திட்டிவிட்டாள் என்று இதேபோ