Skip to main content

Posts

Showing posts from January, 2018

ரூ.2.85 கோடி மதிப்பில் ’ஸ்மார்ட்’ வகுப்பறைகள்!

மதுரை காமராஜ் பல்கலையில் 2.85 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட 82 ’ஸ்மார்ட்’ வகுப்பறைகளை கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற கவர்னர், பல்கலையில் மத்திய அரசின் ’ரூசா’ திட்டத்தில் அமைக்கப்பட்ட இவ்வகுப்பறைளை திறந்தார். விடுதிகளில் 1.05 கோடி ரூபாயில் கட்டப்பட்ட 8 ’பிட்னஸ்’ மையங்கள், தலா 10 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட சுவாமி விவேகானந்தர் மற்றும் சரோஜினி நாயுடு பூங்காக்களையும் திறந்தார். பல்கலை வளாகத்தில் பல்வேறு பகுதியில் தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் 23 கல்வி பூங்காங்கள் அமைக்க அடிக்கல் நாட்டினார். நாகமலை மலையடிவாரத்தில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் கவர்னர் முன்னிலையில் மாணவர்கள் நட்டனர். துணைவேந்தர் செல்லத்துரை, கலெக்டர் வீரராகவராவ், மாவட்ட எஸ்.பி., மணிவண்ணன், சிண்டிகேட் உறுப்பினர் லில்லிஸ் திவாகர், டீன்கள் முத்துமாணிக்கம், பொன்னுச்சாமி, பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர். கல்வித்துறைக்கு ’அட்வைஸ்’ இதைதொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் துறைகள் வாரியாக அதிகாரிகளை அழைத்து ஆய்வு நடத்தினார். முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்துவிடம் அரசு பள

மதுரை: தமிழகத்தில், அரசுப் பணித் தேர்வு நடைமுறைகளில் மோசடி நடந்துள்ளதாக, தானாக முன்வந்து விசாரணைக்கு ஏற்ற உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, தமிழக அரசு மற்றும், சி.பி.ஐ.,க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதி துறை பதிவாளர் இளங்கோவன் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், குரூப் 1 உள்ளிட்ட பல்வேறு அரசுப் பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை, டி.என்.பி.எஸ்.சி., மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் - டி.ஆர்.பி., தனித்தனியே மேற்கொள்கின்றன.தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள, தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. குறைந்த மதிப்பெண் ஐதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம், 'கோடிங் சீட்' எனும், விடைத்தாள் நகல் அச்சிட்டு வழங்குகிறது. அவற்றை மதிப்பிட கம்ப்யூட்டரில், 'ஸ்கேன்' செய்கின்றனர்.புரோக்கர்கள் மூலம் பேரம் பேசி, பணம் கொடுத்தவர்களுக்கு சாதகமாக வேறு, 'கோடிங் சீட்'டை மாற்றி, குறைந்த மதிப்பெண் பெற்றவர்களுக்கு அதிகமதிப்பெண் வழங்கியுள்ளனர். அதிக மதிப்பெண் பெற்ற தகுதியான நபர்களுக்கு, குறைந்த மதிப்பெண் வழங்கி மோசடி நடந்துள்ளது.பாதிக்கப்பட்ட ஒருவர், பிரதமர் அலுவலகத்திற்கு புகார் அனுப்பியுள்ளார். அங்கிருந்து, டி.ஆர்.பி.,க்கு புகார் பரிந்துரைக்கப்பட்டது. மோசடி மூலம், 19 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறப்பு விசாரணைக்குழு இது தொடர

'குரூப் - 4' தேர்வுக்கு 'ஹால் டிக்கெட்' வெளியீடு

சென்னை: 'தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யின், 'குரூப் - 4' தேர்வுக்கு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பதவி உட்பட, அரசுத் துறைகளில் காலியாக உள்ள, 9,351 இடங்களை நிரப்ப, குரூப் - 4 தேர்வை, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பிப்., 11ல், இத்தேர்வு நடத்தப்படுகிறது; தேர்வுக்கு, 20.80 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில், தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, http://www.tnpscexams.in என்ற இணையதளத்தில், ஹால் டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள், பயனாளர் குறியீடு, பிறந்த தேதியை பயன்படுத்தி, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சரியாக விண்ணப்பித்து, கட்டணம் செலுத்தியும், ஹால் டிக்கெட் கிடைக்காதவர்கள், கட்டணம் செலுத்திய ரசீதின் நகலுடன், contacttnpsc@gmail.com என்ற, இ - மெயில் முகவரிக்கு, பிப்., 6க்குள் கடிதம் அனுப்ப வேண்டும். அதில், பெயர், பதிவு எண், கட்டணம் செலுத்திய வங்கி அல்லது

தேர்வு முறைகேடு : அரசு அறிக்கை

''பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு விவகாரத்தில், நான்கு நாட்களில் விசாரணை அறிக்கை தாக்கலாகும்,'' என, பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் தெரிவித்தார். அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், 1,058 விரிவுரையாளர்களை நியமிக்க, 2017 செப்டம்பரில் எழுத்துத் தேர்வு நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., நடத்திய, இந்தத் தேர்வின் முடிவுகள், நவம்பரில் வெளியிடப்பட்டன. அப்போது, தேர்வு முடிவில், 200 பேர் தில்லுமுல்லு செய்து, அதிக மதிப்பெண் பெற்றதாக புகார் எழுந்தது. உடன், டி.ஆர்.பி., அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், முறைகேடு நடந்தது உறுதியானது. இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. மத்திய குற்றப்பிரிவு போலீசார், மோசடி வழக்கு பதிந்து, ஐந்து பேரை கைது செய்துள்ளனர். இந்த பிரச்னையால், பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டன. ஏற்கனவே நடந்த சிறப்பு ஆசிரியர் பதவிக்கான தேர்வு முடிவுகளும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், கல்லுாரி பேராசிரியர் பணி, வேளாண் பயிற்றுனர் பணி, மாவட்ட கல்வி அதிகாரிகள் பணிக்கான, தேர்வு அறிவிப்புகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இன்று முழு சந்திர கிரகணம்: 152 ஆண்டுகளுக்கு பிறகு அரிய நிகழ்வு

நிகழாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 -ஆவது பெளர்ணமி தினமான புதன்கிழமை (ஜன.31) நிகழ உள்ளது. இதனை எவ்வித பாதுகாப்பு சாதனங்கள் இன்றி, வெறும் கண்களாலேயே பார்க்கலாம். இந்த முழு சந்திர கிரகணத்துடன் சூப்பர் நிலவு (சூப்பர் மூன்), நீல நிலவு (ப்ளூ மூன்) ஆகியவையும் தோன்ற உள்ளன. முழு சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூ மூன் ஆகியவை வழக்கமாக வரும் நிகழ்வுகளாக இருப்பினும், 152 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை இவை மூன்றும் ஒரே நாளில் வருவது மிக அரிய நிகழ்வாக கருதப்படுகிறது. சந்திர கிரகணம்: நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது. பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பெளர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் வரும். முதல் சந்திர கிரகணம்: இவ்வாண்டின் முதல் சந்திர கிரகணம், பெளர

படித்ததில் நடைமுறைக்கு ஏற்றது..

படகு ஒன்றுக்கு பெயின்ட் அடிப்பதற்கான பொறுப்பு  ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் ப்ரஷ், பெயின்ட் என்பவற்றைக் கொண்டு வந்து படகு உரிமையாளர் வேண்டிக் கொண்டதைப் போலவே பிரகாசமான சிவப்பு நிறத்தில் பெயின்ட் அடித்துக் கொடுத்தார். பெயின்ட் அடித்துக் கொண்டிருக்கும் போது அந்தப் படகில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதை அவதானித்து, உடனடியாகவே அந்த ஓட்டையை சரிவர அடைத்தும் விட்டார். வேலை முடிந்ததும் அவர் தனக்குரிய கூலியை வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார். அடுத்த நாள் படகின் உரிமையாளர் அந்த பெயின்டரின் வீடு தேடி வந்து ஒரு பெறுமதிமிக்க காசோலையை கொடுத்தார். அது அவர் ஏற்கனவே கூலியாக வழங்கிய தொகையைப் பார்க்கிலும் பன் மடங்கு அதிகமானது. பெயின்டருக்கோ அதிர்ச்சி. " நீங்கள் தான் ஏற்கனவே பேசிய கூலியைத் தந்துவிட்டீர்களே? எதற்காக மீண்டும் இவ்வளவு பணம் தருகிறீர்கள்? என்று கேட்டார் பெயின்டர். " இல்லை. இது பெயின்ட் அடித்ததற்கான கூலி அல்ல. படகில் இருந்த ஓட்டையை அடைத்ததற்கான பரிசு" என்றார் படகின் உரிமையாளர். " இல்லை சேர்... அது ஒரு சிறிய வேலை. அதற்காக இவ்வளவு பெரிய தொகைப் பணத்தை த

மாணவர்களின் வங்கி கணக்கில் மாயமாகுது பணம்

சிவகங்கை: உதவித்தொகை பெறுவதற்காக துவங்கப்பட்ட மாணவர்களின் சேமிப்பு கணக்குகளில், வங்கிகள் அடிக்கடி பணத்தை பிடித்தம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வு தேர்வு, ஊரக திறனாய்வு தேர்வு, தேசிய வருவாய் வழி படிப்புதவித் தொகை என, மூன்று விதமான உதவித்தொகை வழங்கப்படுகின்றன. தவிர ஆதி திராவிடர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களுக்கும், பிற்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையின மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கப்படும். உதவித்தொகை தற்போது இ.சி.எஸ்., முறையில் மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிற்கு நேரடியாக அனுப்பப்படுகின்றன. இதற்காக மாணவர்கள் தேசிய வங்கிகளில் ’ஜீரோ பேலன்சில்’ சேமிப்பு கணக்கு துவங்க வேண்டுமென, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ’ சேமிப்பு கணக்கு செயல்பாட்டில் இருக்க கண்டிப்பாக குறைந்தது 100 முதல் 500 ரூபாய் செலுத்த வேண்டும்,’ என கூறி, வங்கி அதிகாரிகள் ’டெபாசிட்’ பெறுகின்றனர். ஒரு சில மாதங்களிலேயே அந்த பணம் படிப்படியாக குறையத் துவங்கிறது. சிலருக்கு பணம் முழுவதுமே மாயமாகிறது. சிலருக்கு உதவித்தொகையில் பணம் பிடிக்கின்றனர். சிலரது கணக்குகளில் பணம் இ

மரணத்தை எதிர்கொண்ட மகாத்மா!

மரணத்தைக் கண்டு பயப்படாதே; கடமையாற்றும்போது மரணம் வருமானால், அதனை வரவேற்று எதிர் கொள்ளத் தயாராக இரு!' என்றார் அண்ணல் காந்தி. இது அடுத்தவருக்கு விடுத்த அறிவுரை மட்டுமல்ல; தானும் அவ்வாறே வாழ்ந்து காட்டினார் அந்த விந்தை மனிதர். மகாத்மா மறைந்து 70 ஆண்டுகள் ஆகிவிட்டன. அவர் இந்த மண்ணில் வாழ்ந்தது (2.10.1869 முதல் 30.1.1948 வரை) 78 ஆண்டுகள் 3 மாதம் 28 நாட்கள். 1893-இல் 24- ஆவது வயதில் தொடங்கிய அவரது பொது வாழ்க்கை, 54 ஆண்டுகள் நீடித்தது. இடைப்பட்ட காலத்தில் அவர் எதிர் கொண்ட மரணத் தாக்குதல்கள் ஒன்றல்ல இரண்டல்ல மொத்தம் ஒன்பது. அனைத்தையும் துணிவோடும், மகிழ்வோடும் எதிர் கொண்டார். 1948-இல் (30.1.1948) நடைபெற்ற இறுதித் தாக்குதலில்தான், அண்ணல் இறைவனடி சேர்ந்தார். 1897-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காந்திஜி இந்தியாவிலிருந்து மீண்டும் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்குத் திரும்புகிறார். தென்னாப்பிரிக்கா வாழ் இந்தியர்கள், வெள்ளையர்களால் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை காந்திஜி இந்தியாவில் பரப்பினார் என்ற செய்தியால், வெள்ளையர்கள் கோபத்தில் இருந்தார்கள். டர்பனில் கொதித்து நின்ற கூட்டத்தைக்