Skip to main content

Posts

Showing posts from October, 2017

THOUGHT OF THE DAY!!!!

அருமையான கதை. -------------------------------            ஒருவர் ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியை பின்னால் மாட்டிக்கொண்டு டூவீலரில் வேகமாகச் செல்லுகிறார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிடுகிறது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிடுகின்றார். (அந்த நபர் இக்கதையில் இனி வரமாட்டார்)                                                                           கீழே விழுந்த வேகத்தில் 100 பத்துரூபாய்நோட்டுகள் கொண்ட அந்த கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய்நோட்டு மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடக்கிறது.                                                  அந்த ஒற்றை பத்துரூபாய்நோட் டு இருந்த வழியில் ஒருவன் வருகிறான். இந்த நோட்டைக் கண்டு, ',இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் சந்தோஷமடைகிறான். அந்த நோட்டை எடுத்துக்கொண்டு ஹோட்டலுக்குப் போனான். இரண்டு இட்லி - ஒரு காப்பி (அன்றய விலைவாசியில்) சாப்பிட்டான், அருகிலிருந்த ப

பரீட்சையில் சென்டம் வாங்கினால் ‘சென்னை டு கோவை’ விமான டிக்கெட் பரிசு! அறிவித்த டீச்சரும் அசத்திய மாணவிகளும்!

பெருந்தலைவர் காமராஜர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் மாணவிகள் பி.சரண்யாவுக்கும், ஹெச். யமுனாவுக்கும் அந்த நாள் மிக இனிய நாளாக அமைந்து விட்டது. அவர்களது சமூக அறிவியல் டீச்சரான செல்வகுமாரி, தான் முன்னதாக அறிவித்திருந்தபடி, பொதுத்தேர்வில் தனது பாடமான சமூக அறிவியல் பாடத்தில் 100/100 மார்க் வாங்கிய அந்த இரு மாணவிகளுக்கும் சென்னையிலிருந்து கோவை வரை சென்று திரும்ப விமான டிக்கெட்டுகளைப் பரிசளித்திருந்ததில் அதைப் பெற்றுக் கொண்ட ஆனந்தம் அந்த இரு மாணவிகள் முகத்திலும் அப்பட்டமாகத் தெரிந்தது. இருவருக்குமே அது தான் முதன்முதல் விமான நிலைய தரிசனம். விமான நிலையத்தின் பிரமாண்ட தோற்றத்தையும், உள்ளிருக்கும் அங்காடிகளில் விற்கப்படும் பொருட்களின் விலையையும் கண்டு வியந்து போன மாணவிகளில் சரண்யா கூறுகிறார், விமான நிலையத்தை இன்று தான் முதன்முதலில் நேரில் பார்க்கிறோம்... பார்க்கப் பார்க்க எங்களுக்கு வியப்பாக இருக்கிறது... ஆனால் இங்குள்ள பொருட்களில் எதுவுமே நாங்கள் வாங்கக் கூடிய விலைகளில் இல்லை. உள்ளே நுழைந்தது முதல் நாங்கள் இங்கு வாங்கிய ஒரே பொருள் தண்ணீர் பாட்டில் மட்டுமே’ என்கிறார் சற்றே சோகமாக! அவரது

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்

அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் திருவள்ளுவர் மற்றும் காரைக்கால்லில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் திட்டமிட்டபடி நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்படுவது குறித்து முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

Flash news சென்னையில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!

கனமழை எதிரொலி சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

Heavy rain expected for chennai this weekend..

Heavy rain is expected for chennai especially on November 1, 2 & 3.. Even today all the schools were instructed to leave the children one hour before..

TET Informations..

Dear Friends.. Hereby am attaching two pictures.. One is related with 2013, number of candidates passed and scored above 90 but yet waiting for job, it was shared to me and I thought of sharing it to all of you.. Next picture is newspaper cutting in which passed details of 2017 candidates are available, hope these informations will be useful to some of us.. Thank you all..

தோழமைகளுக்கு இனிய காலை வணக்கம்…!!

Wishing all my friends a happy morning.. May this day be filled with lots of blessings and surprises.. Today tet questions will be published, its answers also will be published on the same post itself.. Any body willing to post their questions can post in their respective subject post.. Have a nice day friends..

தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா கொண்டாட்டம்

தஞ்சையை ஆண்ட மாமன்னர் ராஜராஜசோழன் அரியணை ஏறிய நாள் இன்று சதயவிழாவாக கொண்டாடப்படுகிறது. ராஜராஜசோழன் கி.பி.985 ஆம் ஆண்டு சதய நட்சத்திரத்தில் முடிசூட்டப்பட்டது. இந்த நாளை நினைவுகூறும் விதமாக விழா கொண்டாடப்படுகிறது. 1032வது சதயவிழா கொண்டாட்டத்திற்காக ராஜராஜ சோழன் சிலை மற்றும் பெரியகோவிலின் முகப்புப் பகுதியில் மலர்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அரசு சார்பில் நடைபெறும் இந்த விழா தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு சதய விழாவில் பட்டிமன்றம், கருத்தரங்கம், கவியரங்கம், தேவார இசை, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன. மேலும், சதய விழா நாளான அக். 30-ம் தேதி பெருவுடையாருக்குப் பேரபிஷேகம், திருமுறைகள் ஒதும் நிகழ்ச்சி, ராஜராஜன்சோழன் சிலைக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள்  நடைபெறவுள்ளன. இதை முன்னிட்டு, பெரியகோயிலில் கடந்த வியாழக்கிழமை காலை மங்கல இசை முழங்க, தீப ஆராதனையுடன் பந்தல்கால் நடப்பட்டது.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக் கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மழைக்காலத்தின்போது பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்கள் இடிந்து விழுந்தும் மின்கசிவு காரணமாகவும் விபத்துகள் ஏற்படுவதையும் மாணவர்கள் காயமடைந்து உயிரிழப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் பள்ளிக் கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பள்ளி வளாகங்களில் இடிந்துவிழும் நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது: பள்ளி வளாகங்களில் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்த நிலையிலும் பல கட்டடங்கள் காணப்படுகின்றன. மழைக்காலத்தில் இதுபோன்ற கட்டடங்கள் இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்த சம்பவங்களும், உயிரிழப்புகளும் முந்தைய காலங்களில் ஏற்பட்டுள்ளன. இந்த கட்டடங்கள் நீண்ட காலமாக அப்புறப்படுத்தப்படாமல் உள்ளன. கொசுக்கள் உற்பத்தியாவதற்கும

உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, சென்னையில் நேற்று பல இடங்களில் பரவலான மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் மழையில் நனைந்தபடி செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள். Published :  29 Oct 2017   08:49 IST Updated :  29 Oct 2017   08:49 IST வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 3 நாட்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. அதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. அடுத்து வரும் 24 மணி நேரத்தி

பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?- ராமதாஸ் கண்டனம்

பி.எட் படிப்பிலிருந்து தமிழை நீக்கியது தான் தமிழை வளர்க்கும் செயலா?- ராமதாஸ் கண்டனம் தமிழக அரசு, தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. உலக அளவில் தமிழை வளர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டிருக்கும் தமிழக அரசு, அதேநேரத்தில் தமிழ்நாட்டில் கல்வி சார்ந்த விஷயங்களில் தமிழை புறக்கணிக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பி.எட். எனப்படும் இளநிலை கல்வியியல் படிப்பு 2015-16ஆம் ஆண்டுக்கு முன்பு வரை ஓராண்டுப் படிப்பாக இருந்து வந்தது. இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழு அறிவுரைப்படி 2015-16ஆம் ஆண்டு முதல் பி.எட். படிப்பு இரு ஆண்டு கால அளவு கொண்டதாக மாற்றப்பட்டது. பி.எட். படிப்பு ஓராண்டு படிப்பாக இருந்தவரை அதில் தமிழ், ஆங்கிலம் ஆகிய

God knows better..

இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்.....!! வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது பேருந்து...!! ஏனோ வழியில் அவர்கள் இருவரும் இறங்கிக் கொள்ள முடிவு செய்து, பேருந்தை நிறுத்தி இறங்கிக் கொண்டனர்.....!!! ஆளில்லாத வனாந்திரம், மான்களும் மயில்களும் குயில்களின் இசையோடு விளையாடிக் கொண்டிருந்தன....!!! ஆனால் அவர்கள் மனம் அதில் லயிக்கவில்லை.....!!! இறங்கிய இடத்திலிருந்து சற்று தள்ளி இருந்த பாறையில் ஏறினர்.....!!! உச்சியில் இருந்து பாதாளத்தைப் பார்த்த போது, கால்கள் கூசின.....!! உடல் நடுங்கியது....!!! இருவரும் கண்களை மூடி கரங்களைப் பற்றிக் கொண்டனர்....!! வனக்குரங்குகள் மரங்களிலிருந்து இவர்களை நோக்கி க்ரீ....ச்சிட்டன....!! அப்போது, மிகப் பெரிய சப்தம்...!! திரும்பிப் பார்த்தார்கள்......!! இவர்கள் இறங்கிய பேருந்தின் மீது , மலையிலிருந்து மிகப் 'பெரிய பாறை' விழுந்து பேருந்தை நசுக்கி இருந்தது. ஒருவரும் உயிருடன் தப்பவில்லை....!! இவர்கள் இருவரைத் தவிர.....!! பாறைக்கடியில் சமாதி ஆகி இருந்தனர்....