Skip to main content

Posts

Showing posts from February, 2018

விடைத்தாள் திருத்தும் பணியை புறக்கணிப்போம்’;

திண்டுக்கல்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் பட்டதாரி ஆசிரியர்களை முகாம் அலுவலர்களாக நியமித்தால், பணியை புறக்கணிக்க தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இச்சங்க மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாநில தலைவர் மணிவாசகம் கூறியதாவது: வழிகாட்டு முறைப்படி இருப்பிடத்தில் இருந்து 20 கி.மீ., தூ ரத்திற்குள்தான் தேர்வு பணி வழங்க வேண்டும். ஆனால் 50 முதல் 60 கி.மீ., சுற்றளவில் பணி வழங்குகின்றனர். விடைத்தாள் திருத்தும் முகாம்களில் பட்டதாரி ஆசிரியராக இருந்து மாவட்ட கல்வி அதிகாரியானவர்களை, முகாம் அலுவலர்களாக நியமிக்க கூடாது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையே நியமிக்க வேண்டும். அப்படி நியமித்தால், அந்த முகாம் பணியை புறக்கணிப்போம். விடைத்தாள் திருத்தல், தேர்வறை பணிக்கு ஊதிய உயர்வு அளித்த அரசாணையை அமல்படுத்த வேண்டும், என்றார். மாநில பொது செயலாளர் பிரபாகரன், பொருளாளர் கிருஷ்ணன், துணை தலைவர் கதிரேசன், மாவட்ட தலைவர் சலேத்ராஜா பங்கேற்றனர்.

நாளை! பிளஸ் 2வுக்கு பொதுத்தேர்வு துவக்கம்

தமிழகம் மற்றும், புதுச்சேரியில், பிளஸ் 2 பொது தேர்வுகள், நாளை துவங்குகின்றன. 2,794 மையங்களில், 8.67 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர். முறைகேடுகளை தடுக்க, காப்பி அடித்தால், ஐந்து ஆண்டுகள் வரை, தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என, கடும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, பொது தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு முதல், பிளஸ் 1 வகுப்புக்கும், பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, பிளஸ் 2 பொது தேர்வு, தமிழகம் மற்றும், புதுச்சேரியில், நாளை துவங்குகிறது; ஏப்., 6ல், முடிகிறது. தேர்வின் முடிவுகள், மே, 16ல் வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2,756; புதுச்சேரியில், 38 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, 278 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில், 6,754 மற்றும் புதுச்சேரியில், 147 என, மொத்தம், 6,901 பள்ளிகளை சேர்ந்த, 4.63 லட்சம் மாணவியர் உட்பட, 8.67 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். புதுச்சேரியில் மட்டும், 8,215 மாணவியர் உட்பட, 15 ஆயிரத்து, 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். க

சிரியாவில் 9 நாட்களில் 700 பேர் மரணம்

டமாஸ்கஸ்: சிரியாவில் உள்நாட்டுப்போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 9 நாட்களில் 700 பேர் உயிரிழந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. இந்தியாவை போலவே சிரியாவும் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில்தான் இருந்து வந்தது. ஆனால் நமக்கு முன்னதாக, 1936ல் அந்த நாடு குடியரசாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் 1950 வரை நிலையில்லாத ஆட்சிகள் நடந்து வந்தது. 1960 தொடக்கத்தில் அங்கு ஹபீஸ் அல் ஆசாத் ஆட்சி உருவானது. ஆசாத் கடும் அடக்குமுறையை கையாண்டார். ஆட்சிக்கு எதிரான கலகக்குரல்கள்இரும்புக்கரம் கொண்டு அடக்கப்பட்டன. சிரியாவில் 90 சதவிகித மக்கள் சன்னி பிரிவை சேர்ந்தவர்கள். ஆசாத்தோ ஷியா பிரிவை சேர்ந்தவர். அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில் ஷியா மக்கள் இருந்தார்கள். அடுத்தகட்ட பொறுப்புகளில் சன்னி இனத்தினர் இருந்தனர். 1998இல் ஆசாத்தின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. ஆசாத்தின் மூத்த மகன் பஸால் ஆட்சியில் அமர ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால் பதவி ஏற்க சில நாட்களுக்கு முன் பஸால் கார் விபத்தில் மரணம் அடைந்தார். ஆசாத் 2000ல் மரணம் அடைந்தார். மகன் பஷர் அ

வித்தியாசமான உதவி

ஒரு காட்டில் ஒரு இளைஞன் நடந்து போய்க் கொண்டிருந்தான். அவனுக்குப் பசியெடுத்தது. ஒரு மரத்தில் உயரத்தில் கனிந்த பழங்கள் இருப்பதைக் கண்டான். மரத்தின் மேல் சரசரவென்று ஏறி அவற்றில் சில பழங்களைப் பறித்துத் தின்றான். மிகக் கனிந்த வாசனையுள்ள பழங்கள் கிளைகளின் நுனியில் இருந்தன. அவற்றை எட்டிப் பறிக்கக் கிளையின் மேல் நகர்ந்து சென்ற போது அவனது பாரம் தாங்காமல் ஒரு கிளை முறிந்து விட்டது. சட்டென்று சுதாரித்த அவன் கீழே இருந்த ஒரு கிளையைப் பிடித்துக் கொண்டு தொங்க ஆரம்பித்தான். குனிந்து பார்த்தால் தரை வெகு கீழே இருந்தது. ஏற்கெனவே பயந்து போயிருந்த அவன் மேலும் பயந்து கண்ணை மூடிக் கொண்டு "யாராவது காப்பாற்றுங்கள்' என்று திரும்பத் திரும்ப அலற ஆரம்பித்தான். உள்ளங்கை வியர்த்து வழுக்க ஆரம்பிக்கும் நிலை வந்து விட்டது. தற்செயலாக அப்போது அந்தப் பக்கம் ஒரு முதியவர் வந்தார். மரத்தில் தொங்கிக் கொண்டிருந்தவனைப் பார்த்தார். அவன் மேல் ஒரு சிறிய கல்லை விட்டு எறிந்தார். கல் பட்டவுடன் வலியில் கீழே பார்த்தவனுக்கு ஆத்திரம் வந்தது. "பெரியவரே, உதவச் சொன்னால் கல்லால் அடிக்கிறீரே. அறிவில்லையா உமக்கு" என்ற

போலீஸ் தேர்வு : இன்று முதல் ஹால் டிக்கெட்

தமிழக காவல் துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு, 6,140 இரண்டாம் நிலை காவலர்களை தேர்வு செய்ய, 2017, டிச., 12ல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு, 3.26 லட்சம் பேர், விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான எழுத்து தேர்வு, அடுத்த மாதம், மாவட்டம் தோறும் நடக்க உள்ளது. இத்தேர்வில் பங்கேற்க, இன்று மதியம் முதல், தமிழக சீருடை பணியாளர் தேர்வு வாரிய இணையதளத்தில் இருந்து, 'ஹால் டிக்கெட்'டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என, வாரியம் அறிவித்துள்ளது.

பட்டினத்தாரின் ஊசி..

✨பல ஊர்களுக்கும் யாத்திரை சென்ற பட்டினத்தார் ஒரு ஊரில் தங்கினார். அவ்வூர் பணக்காரர் ஒருவர் பட்டினத்தாரை தன் வீட்டிற்கு விருந்து சாப்பிட அழைத்தார். – “இந்த ஊரிலேயே பெரிய பணக்காரன் நான் தான். நினைத்ததை சாதிக்கும் பலம் என்னிடம் இருக்கிறது. உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் கேளுங்கள்,” என்று பெருமையுடன் தன்னை அறிமுகப்படுத்தினார். – சற்று யோசித்த பட்டினத்தார் “ரொம்ப நல்லது. அப்படியானால் எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டுமே!” என்று கேட்டார். – “என்ன சுவாமி.. எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்லுங்கள். செய்ய காத்திருக்கிறேன்” என்றார் பணக்காரர். – தன் பையில் இருந்து ஊசி ஒன்றை எடுத்த பட்டினத்தார், அதை பணக்காரரிடம் நீட்டினார். – “இந்த பழைய ஊசியைக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் சுவாமி” என்றார் பணக்காரர். – “இதைப் பத்திரமாக வைத்திருங்கள். நாம் இருவரும் இறந்தபிறகு மேலுலகத்தில் சந்திக்கும் போது திருப்பிக் கொடுத்தால் போதும்,” என்றார் பட்டினத்தார் – “இறந்த பிறகு இந்த ஊசியை எப்படி கொண்டு வர முடியும்” என்று கேட்டார் பணக்காரர். – அவரைப் பார்த்து சிரித்த பட்டினத்தார் “இந்த உ

பிளஸ் 1 மார்க் சேர்ப்பதை எதிர்த்து வழக்கு: நிபுணர்களுடன் ஆலோசிக்க அறிவுரை

புதுச்சேரி, லாஸ்பேட் பகுதியை சேர்ந்த, வழக்கறிஞர், பரிமளம் தாக்கல் செய்த மனு:கல்வி கொள்கையில், அரசு ஏற்படுத்திய மாற்றத்தால், பள்ளி மாணவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது. அரசு பிறப்பித்த உத்தரவின்படி, பிளஸ்1, பிளஸ் 2 க்கு, பொது தேர்வு நடத்த வேண்டும்; பிளஸ் 2 மதிப்பெண்ணுடன், பிளஸ் 1 மதிப்பெண்ணையும் சேர்த்து, கணக்கிட வேண்டும். தேர்வு முறை, மதிப்பெண் முறை, &'வெயிட்டேஜ்&' மதிப்பெண், மொத்த மதிப்பெண் என, மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உரிய முறையில் பரிசீலிக்காமல், இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.அரசின் உத்தரவானது, கல்வி முறையில் பேரழிவை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. முறையாக பரிசீலிக்காமல் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, ரத்து செய்ய வேண்டும். நடைமுறைப்படுத்த முடியாத திட்டத்தை அமல்படுத்துவதை விட, பிளஸ் ௧ பாடங்களை புறக்கணிக்கும் பள்ளிகளை கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இதுபோன்ற முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன், தற்போதைய உள்கட்டமைப்பு போதுமானதாக இருக்கிறதா; போதிய ஆசிரியர்கள், ஊழியர்கள் இருக்கின்றனரா என்பதையும், பார்க்க வேண்டும்.புதிய திட்டத்தால், மாணவர்களுக்கு மன உளைச்சல்

மயிலை யாரும் மறக்க முடியாது : சிவகுமார்

16 வயதினிலே மயிலை யாரும் மறக்க முடியாது என ஸ்ரீதேவியின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், குழந்தை நட்சத்திரங்களாக இருந்து பெரிய ஹீரோ, ஹீரோயினாக தமிழில் நமக்கு தெரிந்த இரண்டு பேர் கமல்ஹாசன், ஸ்ரீ தேவி. அதிபராசக்தி படத்தில் ஜெயலலிதாவின் மடியில் முருகர் வேடம் இட்டுக்கொண்டு நடிகை ஸ்ரீ தேவி அமர்ந்திருந்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவிரிக்கிறது. 16 வயதினிலே மயிலை தமிழ் ரசிகர்கள் யாரும் மறக்க முடியாது அதன் பிறகு மூன்று முடிச்சு, வறுமையின் நிறம் சிகப்பு என்று பல ஹிட் படங்களில் நடித்தார்கள். நானும் ஸ்ரீதேவியும் கவிகுயில், மச்சான பார்த்திங்களா, சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு என்று மூன்று படங்களில் ஒன்றாக நடித்தோம். ஹிந்தியில் உச்சம் தொட்ட நடிகை சிவகாசி பக்கம் அவரின் பூர்விகம். இவ்வளவு சீக்கிரம் அவரின் வாழ்கை முடியும் என்று யாரும் கற்பனை கூட பண்ணி இருக்க மாட்டார்கள். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

நீட்' தேர்வுக்கான பதிவு : சி.பி.எஸ்.இ., புது அறிவிப்பு

நீட்' தேர்வில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையில் உள்ள தகவல்களை தான் பதிவு செய்ய வேண்டும் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தியுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டுக்கான, நீட் தேர்வு, மே, 6ல் நடக்கிறது. இந்த தேர்வுக்கு, பிப்., 9ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது. மார்ச், 9 வரை, விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். இந்நிலையில், சி.பி.எஸ்.இ., சார்பில், புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், 'நீட் தேர்வில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பத்தில், ஆதார் எண்ணில் இடம் பெற்றுள்ள தகவல்கள் அடிப்படையில், சுய விபரத்தை பதிவு செய்ய வேண்டும். ஆதார் தகவல்களும், பள்ளி விபரங்களும் வேறுபாடாக இருந்தாலும், ஆதார் எண் தகவல்களையே, விண்ணப்பத்தில் குறிப்பிட வேண்டும். 'அதன்பின், பள்ளியில் உள்ள விபரங்களை, ஆதார் எண் அடிப்படையில் மாற்றி கொள்ள வேண்டும். மாறாக, தேவையற்ற வதந்திகளை நம்பி, தேர்வுக்கான பதிவுகளில் பிழைகளை ஏற்படுத்தி விட வேண்டாம்' என, சி.பி.எஸ

புதிய பாட திட்டத்தில் 'ப்ளூ பிரிண்ட்' ரத்து

தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில், பொது தேர்வுக்கான, 'ப்ளூ பிரிண்ட்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில், 10ம் வகுப்பு வரை, 10 ஆண்டுகளுக்கு மேலாக பாடத்திட்டம் மாற்றப்படவில்லை; பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 13 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. கல்வியாளர்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன் தலைமையிலான, கலைத்திட்டக்குழு, புதிய பாடத்திட்டத்தை தயாரித்துள்ளது. முதற்கட்டமாக, வரும் கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத்திட்டம் அமலாகிறது. இதற்கான புத்தகங்கள் அச்சிடும் பணி, ஒரு வாரத்திற்கு முன் துவங்கின. புதிய பாடத்திட்டத்தை, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கு இணையாக, பேராசிரியர் குழுவினர் தயாரித்துள்ளனர். மாணவர்கள், மனப்பாட கல்வியை கைவிட்டு, பாடங்களை புரிந்து படிக்க வேண்டும்; நுழைவு தேர்வை பயமின்றி எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்த பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.இதற்காக, பழைய பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை அமலில் இருந்த

மனஉறுதி..

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன. ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார். நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார். பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவ

TODAY'S THOUGHT..

லண்டனில் கர்ப்பிணி பெண்மணி ஒருவர் தன்னுடைய வயிற்றில் இருந்த சிசு கொஞ்சமும் நகராமல் இருப்பதை இரவில் திடீரென்று உணர்ந்தார்.பதறிப்போன அவரும் அவருடைய கணவரும் உடனே மருத்துவரை அணுகினர்.மருத்துவர் பரிசோதித்துவிட்டு காலையில் ஸ்கேன் செய்து பார்க்கலாம் என்றும்,சிசு கர்ப்பப்பைக்குள் வட்டமடிக்காமல் இருந்தால் அது உயிருடன் இல்லை என்பதாகவே தனக்கு படுவதாக கணவரிடம் மட்டும் ரகசியமாக சொல்லிவிட்டு மனதை திடப்படுத்திக்கொள்ள சொல்லிவிட்டார். குழப்பத்துடன் வீடு திரும்பிய கணவன் மனைவிக்கு விஷயத்தை சொல்லாமல் கொஞ்சம் அவளுடைய மனநிலையை மாற்ற டேப் ரிக்கார்டரில் ஒரு பாடலை போட்டுவிட்டார்.தன் வேதனையை வெளிக்காட்டிக்கொள்ளாமல் மனைவியின் அருகில் கண் மூடி அமர்ந்திருந்தார்.திடீரென்று தன் மனைவி தன் தோளை தொட்டு உலுக்கவும் கண்ணை திறந்தார்.மனைவி ஆனந்த கண்ணீரோடு சிசு கர்ப்பப்பையின் உள்ளே தற்போது நகர்வதாக சொல்லவும் உடனே மறுபடியும் மருத்துவமனைக்கு இருவரும் பயணப்பட்டனர். மீண்டும் பரிசோதித்த மருத்துவருக்கு பயங்கர ஆச்சர்யம்.அவரும் சிசு நகர்வதை உறுதி செய்தார்.எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல்  விசாரித்தார்.குறிப்பிட்ட பாடலை கேட்டவுடன்தான் க