Skip to main content

Posts

Showing posts from February, 2022

போர் வெறி..

இரண்டாம் உலகப் போரின்போது, சில வாரங்களுக்குப் பிறகு, ஒரு வீரருக்கு வீட்டிற்குச் செல்ல விடுமுறை கிடைத்தது. தனது வீட்டின் அருகே உள்ள தெருவை அந்த வீரர் அடைந்தார். அங்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவ வாகனங்களில் சடலங்கள் ஏற்றப்பட்டிருப்பதைப் பார்த்ததும், எதிரிகள் தனது நகரத்தில் குண்டு வீசியுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டார். டஜன் கணக்கில் சடலங்கள் கூட்டுக் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்பட தயார் நிலையில் இருந்தன. அடுக்கப்பட்ட சடலங்களின் முன்னால் அந்த சிப்பாய் சற்றுநேரம் நின்றார். ஒரு பெண்ணின் பாதத்தில் இருந்த பாதணிகளை அவர் திடீரெனக் கவனித்தார். முன்பு தனது மனைவிக்காக வாங்கி வந்த ஷூ போல் இருந்தது. உடனே வீட்டுக்கு ஓடினார். வீட்டில் யாரும் இல்லை. வேகமாகத் திரும்பிச் வந்து வாகனத்தில் இருந்த அந்த உடலைப் பரிசோதித்தார். அது அவரது மனைவியேதான். அதிர்ச்சியடைந்தார். பொதுக் கல்லறையில் மனைவியைப் புதைக்க விரும்பவில்லை என்றும் தனிக் கல்லறையில் புதைக்க விரும்புவதாகவும் கூறி உடலைத் தருமாறு வேண்டினார். அனுமதி கிடைத்தது. வாகனத்தில் இருந்து உடலை வெகு சிரமத்துடன் வெளியே எடுக்கும்போது மனைவி இன்னும் உயிருடன் இருப்பதைப்

இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட அளவிலான காலிப்பணியிட பட்டியல்

*திருநெல்வேலி மாவட்ட அளவிலான காலிப்பணியிட பட்டியல்*   🟪 *(சேரன்மகாதேவி கல்வி மாவட்டம்)*  (1) *அம்பை ஒன்றியம்*  1.ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி விக்கிரமசிங்கபுரம்  2.மன்னார்கோவில்            3.வெயிலான் சேரி             4.ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அம்பாசமுத்திரம்                   (2) *சேரன்மகாதேவி ஒன்றியம்*  1.கல்லிடைக்குறிச்சி ஒன்பதாவது வார்டு  2.கரம்பை            3.பாடாபுரம் (3) *பாப்பாக்குடி ஒன்றியம்*  1.தாளையடி 2.இலந்தைகுளம் 3.அனந்த நாடார் பட்டி  (2 பணியிடம்) 4.கிராமங்கலம் 5.கொண்டா நகரம் 6.குமாரபுரம் 7.கலியன் குளம் 8.நடுக்கல்லூர்  9.பொது க்குடி  10.முத்தன் குளம்  (4) *களக்காடு ஒன்றியம்*  1.வடகரை 2.கடம்போடுவாழ்வு நாடார் குடியிருப்பு  🟪 *வள்ளியூர் கல்வி மாவட்டம்*   (5) *ராதாபுரம் ஒன்றியம்*  1.கன்னன்குளம் 2.பெட்டைகுளம்  3.பாகனேரி  (6) *நான்குநேரி ஒன்றியம்*  1.வாகைகுளம்  🟪 *திருநெல்வேலி கல்வி மாவட்டம்*  (7) *மானூர் ஒன்றியம்*  1.இத்திகுளம்  2.புங்க நல்லூர்  3.மேல பிள்ளையார்குளம்  (2 பணியிடம்)  4.தெற்கு அச்சம்பட்டி. *பாளையங்கோட்டை*  *நகர்* மற்றும் *புறநகர்*  *திருநெல்வேலி நகர்* *ஒன்

முன் வைத்த காலை..!!

 அமெரிக்காவைக் கண்டு பிடிப்பதற்காக இருபது மாலுமிகளுடன் ஒரு கப்பலில் புறப்பட்டார் கொலம்பஸ். பல நாட்கள் ஆகியும் கரை எதுவும் தென்படவில்லை. இருபது நாட்கள் கடந்த நிலையில் இன்னும் இருபது நாட்களுக்குத் தான் உணவு கையிருப்பு என்பதனை அறிந்த மாலுமிகள் கொலம்பசிடம், ”இப்போது திரும்பினால், பிரச்சினை இல்லாமல் ஊர் திரும்பி விடலாம். கடலில் வீணாக உயிர் விட வேண்டாம்,” என்றனர். ஆனால், கொலம்பஸ் முன் வைத்த காலைப் பின் வைக்கத் தயாராயில்லை. தமது பாதை முன்னோக்கியே தவிர பின்னோக்கி அல்ல என்பதில் அவர் உறுதியாய் இருந்தார். ஆனால் கொலம்பஸின் பேச்சைக் கேட்டால் கடலில் தான் எல்லோருக்கும் சமாதி என்று கூறி மாலுமிகள் கொலம்பசுக்கு எதிராகத் திரும்பினர். கப்பலின் பொறுப்பை அவர்கள் ஏற்கத் தீர்மானம் செய்து விட்டார்கள். அப்போது கொலம்பஸ் ஒரு முக்கியமான முடிவெடுத்தார். மனதுக்குள் சிறு கணக்கு ஒன்று போட்டார். அவர் மாலுமிகளிடம் சொன்னார், ”நண்பர்களே, உங்கள் கவலை எனக்குப் புரிகிறது. இருபது பேருக்கு இருபது நாட்களுக்குத் தேவையான உணவு இருக்கிறது. ஒருவர் குறைந்தால் கூடுதலாக ஒரு நாளைக்கு உணவு இருக்கும். எனவே இன்னும் ஒரு நாள் கப்பலை முன்னோக்

1591 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியீடு!

    ஆணை : மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , 1 : 40 என்ற ஆசிரியர் : மாணவர் விகிதாச்சாரப்படி , அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப , 2012-2013ஆம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளுக்கு , ரூ.9300-34800 . ரூ .4800 / - தர ஊதியம் என்ற ஊதிய விகிதத்தில் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பளிப்பு செய்தும் , மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் , மேற்காண் 1591 கூடுதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான பாடவாரியான பட்டியல் மற்றும் அப்பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பள்ளி வாரியான பெயர்ப் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளித்தும் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 1591 PG Teachers Post Continuation.pdf - Download here..

அன்பால்_வீழ்ந்த_விலங்கினம்_நாய்..

ஏன் “தெரு நாய்கள்” மட்டும் எங்கும் உள்ளது...? இந்த உலகில் உள்ள அனைத்து விலங்கினங்களும் தனக்கான உணவைத் தானே தேடிக் கொள்ளும் அல்லது வேட்டையாடி உண்ணும். ஆடு,மாடு உள்ளிட்ட விலங்குகள் மேய்ந்து கொள்ள புற்கள், இலை தழைகள் உள்ளன. ஆனால் இந்த நாய்கள் மட்டும் மனிதன் கொடுத்தால் தான் உணவு உண்டு உயிர் வாழ முடியும் என்ற நிலை இருக்கிறது  ஏன்...? உங்கள் வீட்டில் மணக்க மணக்க சமையல் தயாராகிக் கொண்டிருக்கும்  போது உங்கள் வீட்டையே ஏக்கத்துடன் சுற்றிச் சுற்றி ஏன் வருகிறது??? வீட்டிற்குள் இருந்து யாராவது வந்து அந்த உணவிலிருந்து ஏதாவதும் ஒரு சிறுபங்கை தூக்கி வீச மாட்டார்களா என ஏன் நப்பாசை கொள்கிறது..? சாலையோரக் கடையிலோ,  தள்ளு வண்டிக் கடையிலோ  நீங்கள் திண்பண்டங்களை ருசித்துக் கொண்டிருக்கும் போது, கல்லைத் தவிர வேறெதாவதும் வந்து விழாதா என வெறித்து வெறித்து பார்த்து  ஏன் இடையூறு செய்கிறது...? குறிஞ்சி, முல்லை என நகர்ந்து மருத நிலத்திற்கு மனிதகுலம் இடம் பெயருகிறது.  மருத நிலத்தில் ஆற்றங்கரையோரம் வயல்களை உருவாக்கி வேளாண்மை செய்து தனக்கான உணவைத் தானே உற்பத்தி செய்கிறது.  குகையில் வாழ்ந்து பழகியவன்,  வீடு

TRB மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்ப ஜூன் 2022 இரண்டாவது வாரத்தில் போட்டித் தேர்வு

  2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் 2022 ஜூன் இரண்டாவது வாரத்தில் போட்டித்தேர்வு நடைபெறுகிறது. மேலும் 3902 இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் 1087 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 4989 பணியிடங்களுக்கு ஜூன் இரண்டாவது வாரத்தில் தேர்வு நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு மே மாதம் வெளியாகும் எனவும் தெரிகிறது. நவம்பர் இரண்டாவது வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான அறிவிப்புகள் ஜூலை மாதம் வெளியிடப்படும். மேலும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் கட்டட சான்றிதழ் சரிபார்ப்பு நட

PGTRB - Release of Revised Provisional Selection List ( History)

As per the Orders of Hon’ble High Court of Madras in W.P.No.4710/2020, dated 25.02.2020, 34099/2019 batch cases dated 09.01.2020 and orders of Supreme Court of India in Civil Appeal Nos. 3745-3754 / 2020 and Review Petition No. 20967/2021, the Board now releases the Revised Provisional Selection List for the subject History for the year 2018-19.  Utmost care has been taken in preparing the list and in publishing it. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in at any stage. Incorrect list would not confer any right of enforcement. Teachers Recruitment Board reserves the right to correct any errors that may have crept in. Release of Revised Provisional Selection List - Download here...

இளம்சேட்சென்னி..

 "ஒட்டு மொத்த வட இந்தியாவையும் எங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முடிந்தது ...! ஆனால் தெற்கை எங்கள் ஆளுகைக்கு கீழ் கொண்டு வர முடியவில்லை....! அதற்கு காரணம் சோழர்கள்...! " என்று சொன்னவர் மாமன்னர் அசோகர். ஆற்காட்டில் உள்ள ஜம்பை என்னும் இடத்தில், அசோகர் சோழர்களின் வீரத்தை கல்வெட்டில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அசோகரின் அப்பா, பிந்து சாரர் முயற்சி செய்தும் தெற்கை கைப்பற்றமுடியவில்லை.  பிந்து சாரனின் பிரும்மாண்ட படை எடுப்பை முறியடித்தது ,அன்றைய சோழ மன்னர் இளம்சேட்சென்னி. இளம்சேட்சென்னி யார் தெரியுமா? உலகின் முதல் கல்லணையைக் கட்டிய, கரிகால் சோழனது தந்தை தான் இளம்சேட்சென்னி. பிந்து சாரார் காலத்திற்கு பின், சரியாக 600 ஆண்டுகள் கழித்து ,அதே மௌரிய சாம்ராஜ்யத்தை சேர்ந்த சமுத்திர குப்தன், தென்னகம் நோக்கி படை எடுத்து வந்த பொழுது, சமுத்திர குப்தனின் அந்த படையை அன்று முறியடித்தது, அன்றைய பல்லவ சக்கரவர்த்தி விஷ்ணு கோபன். அதாவது 1700 ஆண்டுகளுக்கு முன்பு. இன்னமும் நாம், அசோகர் மரத்தை நட்டார், குளத்தை வெட்டினார் என்று தான் படித்து கொண்டிருக்கிறோம். அந்த அசோகர் ,அசோகரின் அப்பன் பிந்து சாரன், இ

அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரிய பணியிடங்களின் எண்ணிக்கை கணக்கிடும் முறையில் உள்ள பிரச்சினைகள்..

அரசு உயர்நிலைப்பள்ளிகளில் (மாணவர் எண்ணிக்கை 150 க்கும் குறைவாக உள்ள பள்ளிகளில்) 6 முதல் 10 வகுப்புகளுக்கு மொத்தம் ஐந்து பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டு மீதமுள்ள ஆசிரியர்கள் அனைவரும் உபரி ஆசிரியர்களாக கருதப்பட்டு பட்டியல் ஆங்காங்கே வெளியிடப்பட்டு வருகிறது.      ஐந்து வகுப்புகளுக்கு வாரம் 200 பாடப்பிரிவேளைகள் (5×40=200)  உள்ள நிலையில், ஐந்து ஆசிரியர்கள் சேர்ந்து 140 பாடப்பிரிவேளைகளை (5×28=140) மட்டுமே கையாள முடியும் என்பதுதான் அரசு விதி.        ஐந்து ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டால் ஒவ்வொரு ஆசிரியரும் மொத்தமுள்ள 40 பாடவேளைகளும்(Periods) பணி செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். ஓர் ஆசிரியர் மற்றும் ஈராசிரியர் பணிபுரியும் தொடக்கப் பள்ளிகளைப் போல உயர்நிலைப் பள்ளிகளை நடத்த இயலாது என்பது அனைவருக்கும் தெரியும்.மேலும்,ஆசிரியர் உடல்நலக்குறைவு காரணமாக விடுப்பு எடுத்தாலோ, அரசால் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு சென்று விட்டாலோ, அந்த நாளில் அப்பள்ளி மாணவர்களின் நிலை என்னவாகும்.? 35 பேர் இருந்தால்தான் ஒரு வகுப்பறை (குறைந்தபட்சம் 18 ஆவது இருக்க வேண்டும்) என கணக்கீடு ச

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_

அமைச்சுப் பணியாளர்களுக்கு முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு குறித்த பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்!

                             அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும் வரை முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க இயலாது  என புள்ளி விவரங்களுடன் பள்ளிக் கல்வி ஆணையர் திட்டவட்ட அறிவிப்பு! தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - சென்னை உயர் நீதிமன்ற வழக்கு டபிள்யு.ப்பி.எண் 1842/2022 - திரு.ப்பி.அன்பரசு மற்றும் திரு.ஜே.ப்பி.இரவி ஆகியோர்களால் அமைச்சுப்  பணியாளர்களுக்கு பணிமாறுதல் மூலம் 2 சதவீத ஒதுக்கீட்டில் முதுகலை ஆசிரியராகப் பதவிஉயர்வு வழங்கக்கோரி  தொடரப்பட்ட வழக்கு 07.02.2022 அன்று வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பாணையின் அடிப்படையில் மனுதாரரின் 28.12.2021 நாளிட்ட கோரிக்கை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து ஆணை வழங்குதல் - சார்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள்! Commissioner Proceedings - Download here

DSE - பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு ஒத்திவைப்பு.

    2021-2022ம்  கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 28 .1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது. தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.

பாராட்டுங்கள்..

எப்பொழுதும் எல்லோரும் விரும்பும் ஒரு செயல் எதுவென்றால் மற்றவர்கள் தன்மைப் பாராட்டுவதுதான். ஆனால்!, அவர் உயிரோடு இருக்கும்பொழுது அவரைப் புகழ மறுப்பவர்கள், அவரது பிரிவிற்கு பின் புகழ்ந்து பேசுகிறார்கள்... அதனால்தான் உயிரோடு இருக்கும்பொழுது பலருடைய அருமை தெரியாமலேயே போய்விடுகிறது... ஒருவருடைய உன்னதமான செயலை அவர் வாழும் காலத்திலேயே பாராட்ட வேண்டும்... நம் அருகில் கூட சாதனையாளர்கள் இருக்கலாம். அவரை இனம் கண்டுகொண்டு பாராட்ட வேண்டும். பாராட்டுவதற்கு ஒருபோதும் தயக்கம் காட்டக் கூடாது...! நாம் அனைவரும் பாராட்டிற்காக ஏங்குகிறோம். இதில் யாரும் விதிவிலக்குகள் இல்லை. அடுத்தவரைப் பாராட்டினால், நமது மதிப்பு குறைந்து விடும் என்று நாம் தவறாக நம்புகிறோம். அல்லது பாராட்டுவதால் தலைக்கனம் அதிகமாகி விடும் என்று தவறாக நினைக்கிறோம்... சமுதாயத்திற்கு நற்செயலை செய்தவரை உடனே பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். அதுவும் காலம் தாழ்த்தாமல் பாராட்டிவிட வேண்டும்... நேற்றைய உணவு இன்றைய பசியைத் தணிக்காது. பாராட்டியதற்கான பசி எப்போதும் தணியவே தணியாது. *அடிக்கடி மற்றவர்களின் நற்செயலைப் பாராட்டுங்கள். அப்படியானால் உங்களை பல

News about increasing BT posting..

உங்களால் முடியும்..

ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்ததோர் ஆற்றல் உண்டு. அதை வாழ்க்கையின் சரியான முன்னேற்றப் பாதையில் பயன்படுத்திப் பயணித்தால் , அது நல்ல விளைவைத் தருகின்ற நிலைக்கு அம்மனிதனைக் கொண்டு போய் சேர்க்கும் என்பது நிதர்சனம். உங்களிடம் உள்ள ஆற்றலை நீங்கள் குறைத்து மதிப்பு இடாதீர்கள்.  என்னால் இது முடியுமா? என்று எடுத்த எடுப்பிலேயே எதைக் கண்டும் அச்சம் கொள்ளாதீர்கள். தோல்விக்கு அஞ்சி முடங்கிக் கிடப்பதோ, மடங்கிக் கிடப்பதோ நல்ல வாழ்க்கை ஆகாது. போட்டியில் தோற்றாலும் ஓட்டப் பந்தயத்தில் ஓடுபவன் தான் வெளியில் நின்று விமர்சிப்பவனை விட மேலானவன். சிறிய தவளைகள் சேர்ந்து தங்களுக்கு உள்ளே ஒரு ஓட்டப் பந்தயத்தை வைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து கொண்டன. ஓட்டப் பந்தயத்திற்கான நாளும் நெருங்கி வந்தது.  தவளைகளின் ஓட்டப்பந்தயத்தை காணப் பலரும் கூடி இருந்தார்கள். ஓட்டப்பந்தயத்தில் தவளைகள் ஓடி, அருகில உள்ள ஒரு உயரமான கோபுரத்தைத் தொட வேண்டும். அது தான் போட்டி விதி.  முதலில் தொடுபவர் வெற்றியாளர். போட்டியும் ஆரம்பமானது. கூட்டமாய் கூடி இருந்தோர்கள் பலரும் இது சுலபமான போட்டி இல்லை.  உங்களால் அந்தக் கோபுரத்தை அடைய முடியாது என்று தவளைகளை

PGTRB- EXAM -2022-HALL TICKETS - DOWNLOAD

PGTRB- EXAM -2022-HALL TICKETS - DOWNLOAD Click below https://trbpg2021.onlineregistrationform.org/TRBPGCT/LoginAction_input.action  

வார்த்தைகளின் பலம்..

நேர்மறை ( positive) எண்ணங்களின் வலிமையைக் கொண்டு நாம் ஆக்கபூர்வமான செயல்களைச் செய்ய முடியும், அழிவுக்கு வகை செய்யும் செயலையும் செய்ய முடியும்.  நாம் வாழ்வதற்கும், வீழ்வதற்கும் நமது எண்ணங்களே காரணமாகின்றன. வாழ்க்கை எப்போதும் நாம் நினைப்பது போல இருந்தது இல்லை... எதிர்மறை ( negative) எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக் கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டு இருக்கும்.  அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்குத் தோன்றும். அவை நமக்கு கொடுப்பது வலியும் வேதனையும் தான். எதிர்மறை எண்ணம் நமது முன்னேற்றத்திற்கு மாபெரும் எதிரி என்பது தெரிந்தும், அதை ஓழிக்கும் வழி தெரியாமல் பலரும் திண்டாடுகிறோம்.  அந்த நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டால், வாழ்வில் நமக்கு தோல்வி என்பதே கிடையாது. ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர் தன் அறையில் தனியாக சோகமாக அமர்ந்து கொண்டு தன் துயரங்களை எழுதிக் கொண்டிருந்தார்: சென்ற வருடம் எனக்கு ஒரு பெரிய அறுவை சிகிச்சை,கணையத்தில் கல் எடுக்க வேண்டிய சூழ்நிலை. நீண்ட நாள் படுக்கையிலேயே இருக்க வேண்டி இருந்தது. அதே வருடம் 60 வயது ஆகி விட்டதால் வேலையிலிருந்து ஒய்வு.. அதே வருடம் என் அன்பிற்குரிய தந்த

TET MUST FOR MINORITY SCHOOL JUDGEMENT ( 08.02.2022

  TET MUST FOR MINORITY SCHOOL JUDGEMENT ( 08.02.2022 Click Here To Download - TET MUST FOR MINORITY SCHOOL JUDGEMENT - Pdf

PG TRB தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு HALL TICKET- வுடன் எதைக் கொண்டு வரவேண்டும் எந்தெந்த பொருட்களுக்கு அனுமதி கிடையாது-முழு விவரங்கள்

  PG TRB-தேர்வு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடத்தப்படவுள்ளது. தேர்வுகள் காலை 09.00 மணி பிற்பகல் 02.00 மணி என வேளைகளில் நடை பறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுதும் தேர்வர்கள் 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுதும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுடன்.  Hard copy of photo  மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 1 Aadhar Card 2. Voter ID 3. Driving License 4 PAN card 5 Passport 12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 தவிர்த்து) தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது. மேலும் தேர்வுக் கூடத்திற்குள்  Moblle Phone, Micro Phone, Calculator, log Tables. Pager, Digital Diary. Books  போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி முதற்கட்டமாக நடைபெறும் 9 தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யவ

இன்றைய சிந்தனை..

ஒரு சன்னியாசி.. அவர் ஒரு நாள் கனவு கண்டார். அந்தக் கனவில் அவர் சொர்க்கத்துக்குப் போகிறார். அங்கே ஒரு பெரிய திருவிழா நடந்து கொண்டிருந்தது. எங்கே பார்த்தாலும் அலங்கார வளைவுகள். வண்ணமயமான விளக்குகள். பாதைகள் பூராவும் மலர்கள்.  எல்லா கட்டடங்களும் ஒளிமயமாக இருந்து. இவ்வளவு கோலாகலமாக பிரம்மாண்டமாக அந்த திருவிழா நடந்து கொண்டிருந்தது. அது என்ன திருவிழா என்பது இந்த சந்நியாசிக்கு புரியவில்லை.  அங்கு எதிரில் வந்து கொண்டிருந்த ஒருவரிடம் இது என்ன விசேஷம் என்று விசாரித்தார்.  உங்களுக்கு தெரியாதா விஷயம் இன்றைக்கு கடவுளின் பிறந்தநாள். அதைத்தான் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுகிறோம். இதற்காக பிரம்மாண்டமான ஊர்வலம் ஒன்று வரப்போகிறது. இறைவனே அந்த ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார் என்றார். உடனே அந்த சந்நியாசி ஒரு மரத்தின் நிழலில் ஒதுங்கி நின்று கொண்டார். ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு குதிரை வந்து கொண்டிருந்தது. அதன் மேலே ஒருவர் உட்கார்ந்திருந்தார். அவருக்குப் பின்னால் நிறைய பேர் கூட்டமாக வந்து கொண்டிருந்தார்கள்.  இவ்வளவு கூட்டம் இவர் பின்னாடி வருகிறது யார் இவர் என்று கேட்டார் சந்நியாசி. ஒரு மதத்தின் பெய