Skip to main content

பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 5 அசத்தல் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் பேசினார்.


இணையவழி சேவைகள் தொடக்கம், கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்ட நாட்காட்டி வழங்கும் நிகழ்ச்சி இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு, 5 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.


1. மாணவர்கள்‌ மற்றும்‌ பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள்‌


தமிழ்‌ வழியில்‌ படித்ததற்கான சான்று (Person Studied in Tamil Medium- PSTM)‌, கல்வி இணைச்சான்று (Equivalence Certificate), புலப்பெயர்வு சான்று (Migration Certificate) போன்ற 25 வகையான சான்றிதழ்களை நேரடியாக மாணவர்கள்‌ சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களை/ பள்ளிகளை அணுகி பெற்று வந்த நிலைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசின்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக எங்கிருந்து வேண்டுமானாலும்‌ பெறும்‌ நிலை உருவாக்கப்பட்டுள்ளது.


படிப்படியாக அனைத்து சேவைகளும்‌ ஜூன்‌ 2022க்குள்‌ இணைய வழியில்‌ பொது சேவை மையங்கள்‌ வாயிலாக வழங்கப்படும்‌.


2. மின்பதிவேடுகள்‌ (eRegisters)


ஆசிரியர்களின்‌ நிர்வாகப் பணியை சூறைப்பதற்காக தற்போது நடைமுறையில்‌ இருக்கும்‌ 100க்கும்‌ மேற்பட்ட பதிவேடுகளை கணினிமயமாக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இப்பணியின்‌ தொடக்கமாக 30 பதிவேடுகள்‌ மின்மயமாக்கப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக்‌ கொண்டு வரப்பட்டுள்ளன. ஆசிரியர்கள்‌ இப்பதிவேடுகளை 2022-23ஆம்‌ கல்வியாண்டு முதல்‌ நேரடியாக (physical copy) பராமரிக்கத்‌ தேவையில்லை. மின்பதிவேடுகளாக வைத்திருந்தால்‌ மட்டும்‌ போதுமானது.


இதனால்‌ ஆசிரியர்கள்‌ தம்‌ கற்றல்‌, கற்பித்தல்‌ செயல்பாடுகளில்‌ கூடுதல்‌ கவனம்‌ செலுத்த இயலும்‌. படிப்படியாக ஜூன்‌ 2022க்குள்‌ பிற அனைத்து பதிவேடுகளும்‌ மின்பதிவேடுகளாக உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும்‌.


3. இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி


ஆசிரியர்கள்‌ தற்செயல்‌ விடுப்பு, அனுமதி, மருத்துவ விடுப்பு என தங்களது பணிசார்ந்த தேவைகளை எழுத்துப்பூர்வமாக தங்கள்‌ உயர்‌ அலுவலர்களிடம்‌ நேரடியாகச்‌ சென்று விண்ணப்பித்து பயனடைந்து வருகின்றனர்‌. இம்முறையில்‌ ஏற்படுகின்ற சிரமங்களைக்‌ களையும்‌ வண்ணம்‌ அவர்தம்‌ கைபேசி வாயிலாக விண்ணப்பிக்க செயலி ஒன்று உருவாக்கப்பட்டு பயன்பாட்டுக்குக்‌ கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்கள்‌ பயன்‌ பெறுவர்‌.


4. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான நாட்‌காட்டி


ஒவ்வொரு கல்வியாண்டும்‌ பள்ளி தொடங்கவிருக்கும்‌ நாள்‌, செயல்படும்‌ நாட்கள்‌, தேர்வு, விடுமுறை தினங்கள்‌ என அனைத்துத்‌ தகவல்களையும்‌ கொண்ட கால அட்டவணை பெற்றோர்‌, மாணவர்‌, ஆசிரியர்களின்‌ நலனுக்கென வெளியிடப்பட்டுள்ளது.


5. 2022- 23ஆம்‌ கல்வியாண்டிற்கான ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி


அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ பணிபுரியும்‌ 3 லட்சத்திற்கும்‌ அதிகமான ஆசிரியர்களுக்கு அவ்வப்போது தேவைப்படும்‌ பயிற்சிகள்‌ வழங்கப்பட்டு வருகின்றன. 2022-23ஆம்‌ கல்வியாண்டில்‌ பல்வேறு வகையான ஆசிரியர்களும்‌ மாதந்தோறும்‌ பெறவேண்டிய அடிப்படை, திட்டம்‌ சார்ந்த, தன் விருப்பப்‌ பயிற்சிகளுக்கென கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால்‌ ஆசிரியர்கள்‌ தங்களது பயிற்சி குறித்து, தெளிவாகத்‌ தெரிந்து அதன்‌ பயனை முழுமையாகப் பெறும்‌ வாய்ப்பு ஏற்படும்‌.


இதுகுறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இணைய வழியில்‌ பணிப்பலன்களைப்‌ பெறுவதற்கான செயலி மற்றும் ஆசிரியர்‌ திறன்‌ மேம்பாட்டுத்திட்ட நாட்காட்டி ஆகிய இரண்டு திட்டங்களும் இந்தியாவிலேயே முதல்முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

Comments

  1. மொதல்ல போஸ்டிங் போடுங்க அன்பில்

    ReplyDelete
  2. School reopen pannrathukula tet pass pannavangalku posting poda vaippu iruka mam pls reply

    ReplyDelete
  3. pg trb evlo postings increase aga chance iruku mam.ethavathu thagaval threumanka mam.

    ReplyDelete
  4. Tntet posting no. Pg posting late aagum. Increase ஆகாது

    ReplyDelete
  5. Posting இருக்கு fill panna மாட்டாங்க.... Tntet.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..