Skip to main content

படித்ததில் பிடித்தது..

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.

“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”

100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.

“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”

வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”

“ஒண்ணுமே ஆகாது சார்”

”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”

“உங்க கை வலிக்கும் சார்”

“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”

“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”

“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”

“இல்லை சார். அது வந்து…”

“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”

“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”

”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு..

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Madam trt varuma varatha

    ReplyDelete
  3. உமது ஜாதகப்படி வரும்

    ReplyDelete
    Replies
    1. நீங்க உங்க வேலைய பாக்கலாம்

      Delete
    2. நீ ஜோசியம் பாக்க தான் லாயக்கு 😆

      Delete
    3. கோவிக்க வேண்டாம். காமெடிக்காக பதிவிட்ேன். Sorry

      Delete
  4. நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

    நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு கீழ் வாங்கியவர்கள்
    என்று
    காளிதாஸ் அவர்களுடைய குருப்பில் இருப்பவர்கள்

    நாங்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியவர்கள் என்கிற புனிதா சக்தி கபிலன் ஆகியோர்களின் குரூப்பில் இல்லை


    தற்போது காளிதாஸ் அவர்களின் குருப்பில் இருப்பவர்கள்
    பாசார் புகழேந்தி அவர்களின் குருப்பில் இல்லை


    புனிதா அவர்களின் குரூப்பில் இருப்பவர்கள்

    ராஜபாண்டி அவர்களின் குரூப்பில் இல்லை


    இது போல ஒவ்வொருவரும் ஒரு குறிப்பில் இருக்கிறார்கள் இன்னொரு குரூப்பில் இல்லை

    ஆகவே எல்லோரும் எல்லா குழுவிலும் இருக்க வேண்டும்

    உடனே எல்லோரும் எல்லா What'sApp குரூப்பிலும்....


    எல்லோரும் எல்லா குழுவிலும் இருக்க வேண்டும்

    இவ்வாறு எல்லோரும் ஒன்று சேர்ந்தால் தான் எல்லோரும் ஒரே நேரத்தில் பல மின்னஞ்சல் முகவரிகளுக்கு உங்களுடைய வேண்டுகோள் கடிதத்தை கோரிக்கையை போராட்டத்தை உடனே அனுப்ப முடியும்


    இந்த தேர்தல் அறிக்கையில் இருப்பதை நான் பார்க்கவில்லை என்று சொல்லும் வீடியோவை எல்லோரும் ஒவ்வொருவரும்

    முதலமைச்சர்
    திரு மு க ஸ்டாலின் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு
    அனுப்பி வையுங்கள்.

    இது மட்டுமல்ல
    இன்னும் ...
    பல மின்னஞ்சல் முகவரிகளை....
    அதாவது அனைத்து அமைச்சர்கள் அனைத்து எம்எல்ஏக்கள் அனைத்து முன்னாள் எம்எல்ஏக்கள் அனைத்து முன்னாள் அமைச்சர்கள்

    ஆகிய அனைவரையும் மின்னஞ்சல் முகவரியையும்

    Google....
    இணையத்தில்... கண்டுபிடித்து

    அனைத்து மின்னஞ்சல்
    முகவரிகளுக்கும்

    இந்த தேர்தல் அறிக்கையை நான் பார்க்கவில்லை எனும் மேலே உள்ள இந்த வீடியோவை எல்லோருக்கும் எல்லா மின்னஞ்சல் முகவரிகளுக்கும்
    எல்லா எம் எல் ஏக்கும் எல்லா அமைச்சர்களுக்கும் அனுப்பி வையுங்கள்

    மேலும் செய்தி சேனல்களுக்கு கூட இந்த வீடியோவை தேர்தல் அறிக்கையை நான் பார்க்கவில்லை எனும் வீடியோவை எல்லா தொலைக்காட்சி செய்திச் சேனல்களுக்கும் அனுப்பி வையுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க அப்பனுக்கு அப்பன் வந்தாலும் டிஆர்டியை ஒன்னும் பண்ண முடியாது

      Delete
  5. நீங்க என்ன பண்ணாலும் ஒரு பிரயோஜனம் இருக்காது

    ReplyDelete
  6. உங்களுக்குள்ள ஒற்றுமை இல்ல அதனால தான் நியமன தேர்வே வந்துச்சு

    ReplyDelete
  7. போராட்டம் பண்ணி தான் சிலபஸ் வந்துச்சு அடுத்து எக்ஸாம் வரனும்ல அதனால போராட்டம் பண்ணுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

*இதுவும் கடந்து போகும்..!!!*

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும். எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன. வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது.வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா? எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்? வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா? இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் *அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள். *வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.* *தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பத...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...